Friday, November 17, 2017

சிறப்புச் செய்தி (17-11-017)


நெஞ்செரிச்சல்... எப்படித் தவிர்ப்பது?

சாப்பிட்டவுடன் உறங்குவதைத் தவிர்க்கவும். இரவுநேரத்தில், உணவுக்கும் உறக்கத்துக்கும் மூன்று மணிநேர இடைவெளி விட வேண்டும். அதிகமாக சாப்பிடக் கூடாது. நொறுக்குத்தீனிகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். பாதி வயிறு உணவும், மீதித் தண்ணீருமாக இருக்க வேண்டும். மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதைவிட்டு முழுமையாக வெளிவர வேண்டும். குறிப்பாக இரவில் குறைவாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
சாக்லேட் அதிகம் சாப்பிடாமலிருப்பது, டீ -காபி அதிகம் அருந்தாமல் இருப்பது, ஃப்ரைடு உணவுகள், காரம் மற்றும் மசாலா வகை உணவுகளை தவிர்ப்பது, அமிலம் இருக்கும் உணவை (சிட்ரஸ், கால்சியம்) உட்கொள்ளாமலிருப்பது நல்லது. கூடியவரை இரவு நேரத்தில், இவற்றை அறவே தவிர்த்தல் நல்லது. வேறு சில மருத்துவச் சிகிச்சைகள் எடுப்பவர்கள், இந்த நெஞ்செரிச்சல் பிரச்னையை மருத்துவர்களிடம் கூறி அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்வது நல்லது.
அமிலத்தன்மையைக் குறைக்கும் உணவை உட்கொள்ள வேண்டும். நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டவுடன் சிலர் ஜெலுசில் (Gelusil), ரானிடிடின் (Ranitidine) போன்ற மாத்திரைகளை உட்கொள்வார்கள். இது தவறில்லை என்றாலும், பத்து நாள்களுக்கும் மேல் தொடர்ச்சியாக ஜெலுசில் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. நிறைய தண்ணீர் குடித்துவர வேண்டும். சரியான அளவு தூக்கம் அவசியம்.

No comments: