காமராஜர் 110வது பிறந்தநாள் விழ
----------------------------------------------------------------
வணக்கம்
எண்ணத்து உண்மைகளை
கவியாக்குந் துணை
எந்தாய்த் தமிழுக்கு
முதல் வணக்கம் !
நாடார் கூடாரத்துள்
நாடிவந்த
நாடார் குலப் பெருமை
பாட வந்த
பாட்டளி நாட்டளியின்
பணிவான வணக்கம் !
சிறந்த நாள்-அது
காமராஜர் பிறந்த நாள்
இன்று கொண்டாடும்
இத் திரு நாள்.
நூற்றி ஒன்பது
ஆண்டுகளுக்கு முன்
ஆம்-அது
ஜூலை பதினைந்தாம் நாள்
1903.
வானம் பாத்த
கரிசக்க் காட்டு
விருதுப் பட்டியில்
தமிழருக்கு விருதாக !
நாடாருக்கு விடிவாக !
பிறந்தது ஒரு
குழந்தை
அது-காமராஜ் !
குமார சாமி நாடார்
சிவகாமி அம்மா
பெற்றோர் .
குழந்தை
ஆறுவயதில் தந்தை
இழந்தது
பனிரெண்டு வயதில்
பள்ளிப் படிப்பை
இழந்தது
அத்தோடு
குழந்தை விளையாட்டையும்
இழந்த்து
குடும்ப பாரம்
தோளில் வந்தது
துணிக் கடையில்
பணி
தேச-சுதந்திரக் கனல்
கொளுந்து விட்டது
நாட்டுப் பற்றே
வீட்டுப் பற்றை
மீறியது.
மனம் மாற்ற
இட மாற்றம்.
மரக் கடையில்
திருவனந்த புரத்தில்
பணியமர்த்தப் பட்டார்.
அரசியல் அங்கும்
வைகம் போராட்டத்தில்
தானுங் குதித்தார் .
பதினைந்தாம் வயதில்
அப் பாதகம் நிகழ்ந்தது
அது-ஜாலியன் வாலா
படுகொலை !
தேசத்தோடு
தானும்
உலுக்கப் பட்டார்.
ஈரெட்டு வயதில்
வீரிட்டு எழுந்தார்
காமராஜர்.
ஏறிட்டுப் பார்த்தார்
அடிமைத் தளையில்
அன்னை நாட்டு அவலம் !
பதினைந்தாம் வயதில்
தேசீய அரசியலில்
தூழைந்தார் .
அயராது உழைத்தார்
பெற்ற தாயை விட
பிறந்த நாட்டையே
மேலாக எண்ணி
விடுதலைப் போராளியானார் .
இருபத்தி ஏழாம் வயதில்
உப்புச் சத்தியாக் கிரகம்
ஈராண்டு சிறைக்குள்ளே !
முப்பத்தி ஏழாம் வயதில்
தமிழ்நாட்டுக் காங்ரஸ்
தலைமை-நாக்காலியில் .
நாற்பத்தி ஒன்பதாம் வயதில்
சட்ட சபை படிக்கட்டுகள்
ஏறினார்
ஐம்பத்து ஒன்பதாம் வயதில்
தமிழ்நாட்டு முதல்வர்
சிம்மாசனத்தில்
மூன்று முறைகள்
முதல்வராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டு
ஒன்பது ஆண்டுகள
நல் ஆட்சி !!!
கல்வி, தொழில், விவசாயம்
கால்விய் வெட்டு,அணைக் கட்டு
மின்திட்டங்கள்
உயர்த்தப் பட்டது
தமிழகம்.
குறைந்த வருவாயிலும்
சிறந்த திட்டங்கள்
நிறைவேற்றினார்.
அறுபதாம் வயதில்
அகில இந்திய காங்கிரஸ்
தலைவர் மகுடம்
பிரதமர்களை
உருவக்கினார் !
காமராஜர் ஆட்சிக்கு முன்
ஒன்பது முறை கைது
மூவாயிரம் நாட்கள்
சிறை வாசம்.
சிறை வாசத்தையும்
செயல் வாசமாக்கிக் கொண்டார்
தன் கல்விக் குறைவை
நிறைவாக்கிக் கொண்டார்
ஆம்
சிறைக்குள்ளும்
சுயமாய்ப் படித்தார் !
காமராஜரின்
நேர்மை-நிர்வாகம்
அறிவு-தலைமைப் பண்பு
செயல் தறன்
ஊழலற்ற உழைப்பு
அடக்கம் எல்லாம்
அவர் மீது மட்டுமல்ல
அவர் பிறந்த சமூகத்தின் மீதும்
பிற-சமூகத்தின்
கண்ணோட்டத்தை
மாற்றியது.
பதினாறாம் நூற்றாண்டில்
தென்பாண்டிச் சீமையின்
மகுடம் அசைந்தது
ஆம்
பாண்டியர் ஆட்சி
வீழ்த்தப்பட்டது
பண்டியர் மரபில் வந்த
நாடார் களுக்கும்
இன்னல் பல வந்தது.
பண்டிய ஆட்சியில்
கிராம நிர்வாகம்
வரி வசூலித்தல் செய்தவர்
"கிராமணி " பட்டத்தோடு
நாடார் குலத்தவர்
பல-கிராமங்கள் சேர்ந்தது நாடு
நாட்டை நிர்வகித்தவர்
நாடார்.
ஆட்சி போனது
காட்சி மாறியது
நாடார்கள்
பணங்காட்டுக்கும்
தேரிக் காட்டுக்கும்
துரத்தப்பட்டார்கள்.
நாஞ்சில் நாட்டில்
ஐயா
முத்துக் குட்டி
நாடார்களுடன்
தாழ்த்தப்பட்ட
பதினெட்டுச் சாதியினருக்கும்
ஆட்சி அதிகாரம் கொடுத்த
கொடுமைகளை
எதிர்த்துப் போராடி
வெற்றி கண்டார்.
எந்த அரசியல்
நானாரகளைத்
தாழ்த்தியதோ
அதே அரசியல்
காமராஜரை உயர்த்தியது.
ஏகலைவர் களாக
நாடார்களும்
உயர்ந்தார்கள்
காமராஜர் தமிழர் வாழ
தன் உழைப்பை அர்ப்பணித்தார்.
அவரை நல்லோர்
"நாடார் உயர்வு
நாட்டுயர்வு " என்றார்கள்.
"பச்சைத் தமிழன் " என்றார்கள்.
கறுப்புக் காந்தி-கரும வீர்ர்
பெருந்தலைவர்-கிங்மேக்கர்
படிக்காத மேதை
கல்விக்கண் தறந்தவர்
மதிய உணவு தந்தவர்
என்றெல்லாம் புகழாரஞ்
சூட்டினால்கள்
நம் சந்த்தியும்
கல்வி,தொழில்
வியாபாரத்தில் சிறந்து
உலகெலாம் பரந்து
வாழ்கிறார்கள் இன்னும்
வளர்வார்கள்
மேன் மேலும் !காமராஜர்
அனுபவ ஞானியாய்
மவுன மொழிபேசி
ஆலோசனை தந்து
அற்புதங்கள் செய்தார் !
"தங்கம் செய்யாத்தை
சங்கம் செய்யும் "
முந்நூறு ஆண்டுகள்
அணையா
சிவகாசி விளக்கைப்போல்
தூபாயில் தீபமேற்றிய
தம்பிமார்
செந்தில்
இராம மூர்த்தி
மதகை பிரபு மன்னின்று
ஏற்றிய தூபமாம்
"துபாய் நாடார் சங்கம் "
வாழ்க! வளர்க!! வளமுடன்!!!
தமிழர் நம் இனம்
நானார் நம் குலம்
இனமுங் குலமும்
நகமும் சதையுமாய்
வாழ்வதே நம் குணம்
இனத்தையும்
குலத்தையும்
இணைக்கும்
தமிழ் வாழ்க.
வணக்கம்.
கவிஞர்-மணிமுத்து.
----------------------------------------------------------------
வணக்கம்
எண்ணத்து உண்மைகளை
கவியாக்குந் துணை
எந்தாய்த் தமிழுக்கு
முதல் வணக்கம் !
நாடார் கூடாரத்துள்
நாடிவந்த
நாடார் குலப் பெருமை
பாட வந்த
பாட்டளி நாட்டளியின்
பணிவான வணக்கம் !
சிறந்த நாள்-அது
காமராஜர் பிறந்த நாள்
இன்று கொண்டாடும்
இத் திரு நாள்.
நூற்றி ஒன்பது
ஆண்டுகளுக்கு முன்
ஆம்-அது
ஜூலை பதினைந்தாம் நாள்
1903.
வானம் பாத்த
கரிசக்க் காட்டு
விருதுப் பட்டியில்
தமிழருக்கு விருதாக !
நாடாருக்கு விடிவாக !
பிறந்தது ஒரு
குழந்தை
அது-காமராஜ் !
குமார சாமி நாடார்
சிவகாமி அம்மா
பெற்றோர் .
குழந்தை
ஆறுவயதில் தந்தை
இழந்தது
பனிரெண்டு வயதில்
பள்ளிப் படிப்பை
இழந்தது
அத்தோடு
குழந்தை விளையாட்டையும்
இழந்த்து
குடும்ப பாரம்
தோளில் வந்தது
துணிக் கடையில்
பணி
தேச-சுதந்திரக் கனல்
கொளுந்து விட்டது
நாட்டுப் பற்றே
வீட்டுப் பற்றை
மீறியது.
மனம் மாற்ற
இட மாற்றம்.
மரக் கடையில்
திருவனந்த புரத்தில்
பணியமர்த்தப் பட்டார்.
அரசியல் அங்கும்
வைகம் போராட்டத்தில்
தானுங் குதித்தார் .
பதினைந்தாம் வயதில்
அப் பாதகம் நிகழ்ந்தது
அது-ஜாலியன் வாலா
படுகொலை !
தேசத்தோடு
தானும்
உலுக்கப் பட்டார்.
ஈரெட்டு வயதில்
வீரிட்டு எழுந்தார்
காமராஜர்.
ஏறிட்டுப் பார்த்தார்
அடிமைத் தளையில்
அன்னை நாட்டு அவலம் !
பதினைந்தாம் வயதில்
தேசீய அரசியலில்
தூழைந்தார் .
அயராது உழைத்தார்
பெற்ற தாயை விட
பிறந்த நாட்டையே
மேலாக எண்ணி
விடுதலைப் போராளியானார் .
இருபத்தி ஏழாம் வயதில்
உப்புச் சத்தியாக் கிரகம்
ஈராண்டு சிறைக்குள்ளே !
முப்பத்தி ஏழாம் வயதில்
தமிழ்நாட்டுக் காங்ரஸ்
தலைமை-நாக்காலியில் .
நாற்பத்தி ஒன்பதாம் வயதில்
சட்ட சபை படிக்கட்டுகள்
ஏறினார்
ஐம்பத்து ஒன்பதாம் வயதில்
தமிழ்நாட்டு முதல்வர்
சிம்மாசனத்தில்
மூன்று முறைகள்
முதல்வராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டு
ஒன்பது ஆண்டுகள
நல் ஆட்சி !!!
கல்வி, தொழில், விவசாயம்
கால்விய் வெட்டு,அணைக் கட்டு
மின்திட்டங்கள்
உயர்த்தப் பட்டது
தமிழகம்.
குறைந்த வருவாயிலும்
சிறந்த திட்டங்கள்
நிறைவேற்றினார்.
அறுபதாம் வயதில்
அகில இந்திய காங்கிரஸ்
தலைவர் மகுடம்
பிரதமர்களை
உருவக்கினார் !
காமராஜர் ஆட்சிக்கு முன்
ஒன்பது முறை கைது
மூவாயிரம் நாட்கள்
சிறை வாசம்.
சிறை வாசத்தையும்
செயல் வாசமாக்கிக் கொண்டார்
தன் கல்விக் குறைவை
நிறைவாக்கிக் கொண்டார்
ஆம்
சிறைக்குள்ளும்
சுயமாய்ப் படித்தார் !
காமராஜரின்
நேர்மை-நிர்வாகம்
அறிவு-தலைமைப் பண்பு
செயல் தறன்
ஊழலற்ற உழைப்பு
அடக்கம் எல்லாம்
அவர் மீது மட்டுமல்ல
அவர் பிறந்த சமூகத்தின் மீதும்
பிற-சமூகத்தின்
கண்ணோட்டத்தை
மாற்றியது.
பதினாறாம் நூற்றாண்டில்
தென்பாண்டிச் சீமையின்
மகுடம் அசைந்தது
ஆம்
பாண்டியர் ஆட்சி
வீழ்த்தப்பட்டது
பண்டியர் மரபில் வந்த
நாடார் களுக்கும்
இன்னல் பல வந்தது.
பண்டிய ஆட்சியில்
கிராம நிர்வாகம்
வரி வசூலித்தல் செய்தவர்
"கிராமணி " பட்டத்தோடு
நாடார் குலத்தவர்
பல-கிராமங்கள் சேர்ந்தது நாடு
நாட்டை நிர்வகித்தவர்
நாடார்.
ஆட்சி போனது
காட்சி மாறியது
நாடார்கள்
பணங்காட்டுக்கும்
தேரிக் காட்டுக்கும்
துரத்தப்பட்டார்கள்.
நாஞ்சில் நாட்டில்
ஐயா
முத்துக் குட்டி
நாடார்களுடன்
தாழ்த்தப்பட்ட
பதினெட்டுச் சாதியினருக்கும்
ஆட்சி அதிகாரம் கொடுத்த
கொடுமைகளை
எதிர்த்துப் போராடி
வெற்றி கண்டார்.
எந்த அரசியல்
நானாரகளைத்
தாழ்த்தியதோ
அதே அரசியல்
காமராஜரை உயர்த்தியது.
ஏகலைவர் களாக
நாடார்களும்
உயர்ந்தார்கள்
காமராஜர் தமிழர் வாழ
தன் உழைப்பை அர்ப்பணித்தார்.
அவரை நல்லோர்
"நாடார் உயர்வு
நாட்டுயர்வு " என்றார்கள்.
"பச்சைத் தமிழன் " என்றார்கள்.
கறுப்புக் காந்தி-கரும வீர்ர்
பெருந்தலைவர்-கிங்மேக்கர்
படிக்காத மேதை
கல்விக்கண் தறந்தவர்
மதிய உணவு தந்தவர்
என்றெல்லாம் புகழாரஞ்
சூட்டினால்கள்
நம் சந்த்தியும்
கல்வி,தொழில்
வியாபாரத்தில் சிறந்து
உலகெலாம் பரந்து
வாழ்கிறார்கள் இன்னும்
வளர்வார்கள்
மேன் மேலும் !காமராஜர்
அனுபவ ஞானியாய்
மவுன மொழிபேசி
ஆலோசனை தந்து
அற்புதங்கள் செய்தார் !
"தங்கம் செய்யாத்தை
சங்கம் செய்யும் "
முந்நூறு ஆண்டுகள்
அணையா
சிவகாசி விளக்கைப்போல்
தூபாயில் தீபமேற்றிய
தம்பிமார்
செந்தில்
இராம மூர்த்தி
மதகை பிரபு மன்னின்று
ஏற்றிய தூபமாம்
"துபாய் நாடார் சங்கம் "
வாழ்க! வளர்க!! வளமுடன்!!!
தமிழர் நம் இனம்
நானார் நம் குலம்
இனமுங் குலமும்
நகமும் சதையுமாய்
வாழ்வதே நம் குணம்
இனத்தையும்
குலத்தையும்
இணைக்கும்
தமிழ் வாழ்க.
வணக்கம்.
கவிஞர்-மணிமுத்து.
No comments:
Post a Comment