Sunday, April 20, 2014

பதநீர் 5

பதநீர்--5
----------
 மஞ்சரி
என்ற
உரித்த பாளைத் தண்டு
இடுக்கப் பட்டாலும்
கிளைத்து வளர்ந்து கெட்டுப்
போகாத படி
சுற்றிக் கட்டப்படும்
ஓலைக் கீற்று நார் இறுக்கி

சீவிய பாளை
முகப்பில்
சிறுச் சிறுக
ஊறிய பதநீர் திரண்ட
பெருக்கில்
கனமாகி விழுந்திடும்
துளியாகி
கொஞ்சங் கொஞ்சம்
 வீழ்  துளி
வேகங் கூடிக் கூடி
கலயம் நிரம்பும்
கடு வேகக்
காட்சி  கண் குளிரும் !

பாளைப் பதநீர்
எப்படி கலயத்துள் ?

பாளையை முப்பது
பாகை(டிகிரி) பக்கவாட்டில்
சாய்க்க வேண்டும்

சய்ந்த பாளைக்கும் பனைக்கும்
இடையில் அடை
கொடுத்தாக வேண்டும்

இந்த அடை கொடுக்க
தொழிலாளி கண்டது
உடைந்த ஓட்டுத் துண்டு !

இறுதி வரை
உறுதியாய் நிற்கக்
கண் கண்டது
காலங் காலமாய்

கிராப்பு வெட்டியவன்
தலையாய்
சிறுத்திருக்கும்
பனை மண்டை

சுற்றிப் பாளை முகம்
தாழ்த்தப்படும்
பக்கவாட்டில்

ஆறு ஏழு பாளைகள்
ஒரு பனையில்
ஒரே நேரத்தில்
சாய்த்துக் கலயங்
கட்டப்படும்.


 மண்ணால் செய்த
பதநீர் கலயம்
பக்குவப் படுத்தி
நாரை முறுக்கி
கண்ணி செய்து
கலயக் கழுத்தில்
கட்டியதும் அது
கண்ணிக் கலயம்
என்றே
அழைக்கப் படும் !

பாளைக்கு மேல்
மட்டையில் கண்ணியால்
கட்டப் பட்டு

கலயத்துள் பாளை
நுழைக்கப் படும்
பனை ஓலையை மடக்கி
கலய வாயை அடைத்து
பதநீர் பாது காக்கப்படும்

இது மடக்கு ஓலை
நார் கொண்டு கட்டப்படும்

எந்த அடைப்பைப்
போட்டு வைத்தாலும்
ஈ எறும்பு வண்டு
வகேராக்கள் விழுந்தே தீரும்

பனஞ் சில்லாட்டை
கொண்டு அரித் தெடுக்கப்படும்
பதநீர்

இவைகளால் எந்த தீட்டும்
இல்லை !


 

No comments: