Monday, September 15, 2014

பனை(யை) நினை 15/9/14.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
''''பனையை அழித்தோம் வினையை அறுவடை செய்கிறோம் ''
இயற்கையின் பொக்கிஷம் பனை மரம்.
பனையில் இருந்து நுங்கு.கிழங்கு பனங் கல்கண்டு பனங்கள்ளு மற்றும் பனை ஓலை என்று மிகவ...
ும் பயனளித்து வந்ததை நாமும் அழித்தோம் இயற்கையும் எஞ்சியுள்ள மரங்களை மழை தவிர்த்து நானே அழித்து விடுகிறேன் என்று தன் பங்குக்கு அழித்து வருகிறது..
எப்போது திரும்பும் நம் கிராமத்து வாழ்வு.அப்போது தான் மகிழ்ச்சி.
நோயின்றி வாழ இயற்கையைப் பாதுகாப்போம்.
''நன்மையில் முழு பங்கு வகிக்கும் நுங்கு'' பனை வழங்கும் அறிய பொருள் நுங்கு குறித்து பார்ப்போம்.
இயற்கையின் அருட்கொடை
பனையை அழித்தும் விட்டோம் அழிந்தும் வருகிறது.அவை அளித்த நன்மைகளை நாம் மறக்க முடியுமா?

‘வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. பனை-வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்-படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசி-யையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு & இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
நுங்கில் ‘ஆந்த்யூசைன்’ என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

No comments:

Post a Comment