நகரத்தார்களும் - தமிழ் பெருந்தச்சர்களும் :-
###########################################
இதனை நான் எனது பாட்டனார் வாயிலாகக் கேட்டுள்ளேன், இன்றும் எங்கள் வீட்டு விருந்தினர்களுக்கும் சொல்லி நன்றி பாராட்டுகின்றேன். எனது குழந்தைகளுக்கும் என் உறவினர்களுக்கும் கூட இதனைத் தெரியப் படுத்தி வரலாற்றில் தமிழ்ப்பெருந்தச்சர்கள் எனப்பட்ட தமிழ் ஆச்சாரி சமூகத்தின் நுட்பத்தை அணு தினமும் மறவாமல் இருக்கின்றேன்.
நகரத்தார்களின் வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்வில் பங்கு கொண்டு, கொடுத்துதவி வாழ்ந்த சமூகங்கள் பல.
அன்று நகரத்தார்கள் சிறுபான்மையாகவே இருந்தாலும் தமிழ் தேசியம் என்ற மிகப்பெரும் ஆலமரத்தின், அடி வேராகவே இருந்து, தமிழ் விழுதுகள் தாங்க வாழ்ந்த பெருமை ஒரு உன்னத வரலாறு.

இந்த வீடு எந்த ஒரு ஆங்கிலக் கல்வியாளர்களாலும் வடிவமைத்துக் கட்டப்படவில்லை. எங்கள் ஊர் மர வேலை ஆச்சாரிகள் வடிவமைத்துக் கட்டியதே. ஆண்டுகள் நூறு ஆகிய பின்னும் புதுமை சொல்லும் காண்பவர் உள்ளத்தில்.


தேர் போன்ற தோரண வாயில் கொண்ட தலை வாசல்.
கவிகை போல் முன் விரிந்து காந்தர்வர்கள் - வருகின்ற
விருந்தினருக்கு மாலையணிவிக்கும் மரச் சிற்பங்கள்,
அண்ணாந்து பார்க்க நுட்பமாக இருக்கும் அழகு,
நாட்டிலே கோட்டை இதுவென்ற குமிழ்ப் பூண் தரித்த அழகு,
தேர் கொண்ட தோரண வாயிலை குதிரை பூட்டி நிற்கும் முன்னமைப்பு,
வாரணங்கள் மாலை சூட்ட திருமகள் அமர்ந்த கோலம்,
மீனாட்சி சுந்தரேசுவரர் நின்ற திருமணக் கோலம்,
பாரினில் உண்டோ இதற்கு ஈடு...????!!!!!!!
-- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
அன்புடன்,
காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "
No comments:
Post a Comment