Monday, September 29, 2014

சிறப்புச் செய்தி 29/9/14.


மூளைதான் உணர்கிறது, சிந்திக்கிறது, நேசிக்கிறது, வெறுக்கிறது, அதிர்ச்சியடைகிறது, மகிழ்ச்சியடைகிறது. மனசு என்பது உடலின் ஒரு அங்கமல்ல, மூளையின் செயல்பாடுகள்தான். ஆனாலும், “மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்” என்பது போன்ற சொற்களைச் சொல்கிறபோது நம்மையுமறியாமல், நம் இதயம் இருக்கிற நெஞ்சைத் தொட்டுச் சொல்கிறோம். உற்சாகமோ, துக்கமோ, கோபமோ, ஏக்கமோ - மனதில் ஒரு வலி ஏற்பட்டால் இதயத்தைப் பிடித்துக்கொள்கிறோம். மனதில் - அதாவது மனதில் இப்படிப்பட்ட உணர்வலைகள் பொங்குகிறபோது அதை எதிர்கொள்வதற்காக மூள...ைக்குக் கூடுதல் ரத்தம் பாய்ச்சுகிற தேவை ஏற்படுகிறது, அப்போது இதயம் கூடுதலாக இயங்குகிறது. அதனால் ஏற்படும் அழுத்தமே நம் கரங்களை இயல்பாக நெஞ்சகத்தை நோக்கி இழுக்கிறது.
ஆரோக்கியமான இதயத்திற்கான பல அறிகுறிகளை மருத்துவ அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். அந்த ஆரோக்கிய அறிகுறிகள் அனைத்தும் இருக்கிற சிலபேர்...
கடவுளின் நாமத்தால் அறிவை முடக்குகிறார்கள், மதத்தின் பெயரால் மானுட உறவுகளுக்கு வரப்புக் கட்டுகிறார்கள். சாதி வெறியோடு சுவரெழுப்புகிறார்கள். திறமை இருப்பவர்கள் முன்னேறட்டும் என்று சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாய்ப்புக் கதவுகளை அடைக்கிறார்கள், அரசியல் நெருக்கடிகள் ஏற்படுகிறபோது அப்பாவி மக்களைத் தவிக்க விடுகிறார்கள், உரிமைகள் என்பதெல்லாம் உலகமயமாக்கல் யுகத்தில் பிற்போக்கானவை என்று உழைப்பாளிகளைக் காட்டிக்கொடுக்கிறார்கள், அடங்கியிருப்பதே பெண்ணுக்குப் பெருமை என்று வீட்டு வேலைகளோடு முடக்குகிறார்கள், மீறி எழும் பெண்கள் மீது கோழைத்தனமாக பாலியல் வக்கிர அவதூறுகளை வீசுகிறார்கள், காதலர்களைக் கொச்சைப்படுத்திக் குதர்க்கமாகச் சிரிக்கிறார்கள்...
இவர்களெல்லாம் இதயம் உள்ளவர்கள்தானா?
இன்று (செப்டம்பர் 29) உலக இதய நாள்.
See More

No comments:

Post a Comment