குமரி அனந்த சேரன்
·
முன்பு எந்த ஒரு குடும்ப விழாக்களிலும் முன்னிலை வகுப்பது வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு. இந்த பழக்கத்தை அன்னியரால் புகயிலையை புகுத்தி படிப்படியாக அழித்து விட்டார்கள். தற்போதைய நவீன தமிழர்கள் வெற்றிலை பாக்கு போடுவதை கௌரவ குறைச்சலாக நினைக்கின்றனர்.
பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கபட்டவை.
தலைமுடி திருத்துவது முதல் மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கப்படும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கி உள்ளன.
வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கிறது.
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போடுவது மட்டுமே! இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.
பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும், மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும், ஆயுர்வேதமும் சொல்லுவது என்னவென்றால்,
உடம்பில் உள்ள 'வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)' போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்வருகிறது. இது முற்றிலும் சரியான காரணமாகும்.
இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் (நோய் எதிர்ப்பு சக்தி) உடலில் அதிகரிக்கும்.
இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை குறைக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.
இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.
இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது.
தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றுடன் புகையிலையையும் சேர்த்து போடும்போது தான் அது தீய பழக்கமாக மாறி விடுகிறது.
நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை வைக்கமாட்டார்கள். புகையிலை என்பது இடையில் சேர்க்கப்பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய பிரச்னைகளில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்.
சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.
ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே.
ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது. தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறைகள் நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டிருக்கிறது.
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் அதிகமாகாமல் பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது, இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.
வெற்றிலை போடும் போது குரல் வளமையாகவும், இனிமையாகவும், கணீரென்றும் இருக்கும்.
பண்டைய நம் தமிழன் வகுத்த பண்பாட்டையும், கலாசாரத்தையும், இயற்கை மருத்துவத்தையும் பேணி பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை.
நலம் தரும் உணவுகளை உண்போம்! நலமுடன் வாழ்வோம்!! ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டமைப்போம்!!!
·
முன்பு எந்த ஒரு குடும்ப விழாக்களிலும் முன்னிலை வகுப்பது வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு. இந்த பழக்கத்தை அன்னியரால் புகயிலையை புகுத்தி படிப்படியாக அழித்து விட்டார்கள். தற்போதைய நவீன தமிழர்கள் வெற்றிலை பாக்கு போடுவதை கௌரவ குறைச்சலாக நினைக்கின்றனர்.
பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கபட்டவை.
தலைமுடி திருத்துவது முதல் மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கப்படும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கி உள்ளன.
வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கிறது.
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போடுவது மட்டுமே! இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.
பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும், மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும், ஆயுர்வேதமும் சொல்லுவது என்னவென்றால்,
உடம்பில் உள்ள 'வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)' போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்வருகிறது. இது முற்றிலும் சரியான காரணமாகும்.
இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் (நோய் எதிர்ப்பு சக்தி) உடலில் அதிகரிக்கும்.
இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை குறைக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.
இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.
இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது.
தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றுடன் புகையிலையையும் சேர்த்து போடும்போது தான் அது தீய பழக்கமாக மாறி விடுகிறது.
நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை வைக்கமாட்டார்கள். புகையிலை என்பது இடையில் சேர்க்கப்பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய பிரச்னைகளில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்.
சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.
ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே.
ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது. தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறைகள் நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டிருக்கிறது.
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் அதிகமாகாமல் பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது, இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.
வெற்றிலை போடும் போது குரல் வளமையாகவும், இனிமையாகவும், கணீரென்றும் இருக்கும்.
பண்டைய நம் தமிழன் வகுத்த பண்பாட்டையும், கலாசாரத்தையும், இயற்கை மருத்துவத்தையும் பேணி பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை.
நலம் தரும் உணவுகளை உண்போம்! நலமுடன் வாழ்வோம்!! ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டமைப்போம்!!!
No comments:
Post a Comment