இன்று 61ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்நாடு..!
மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு தமிழகம் உருவாகி 60 ஆண்டுகள் ஆகிறது. அண்டை மாநிலங்களுடன் நதி நீர் பிரச்சினை உச்சம் அடைந்துள்ள நிலையில், மொழிவாரி மாநிலங்கள் உருவான வரலாற்றைச் சொல்கிறது இந்த தொகுப்பு..
இந்தியா விடுதலை அடைந்த போது, இன்றைக்கு இருப்பது போன்ற பல மாநிலங்கள் அன்றைக்கு இல்லை. பல மாநிலங்கள் இணைந்தே இருந்தன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அன்றைக்கு சென்னை தலைமாகாணம் என அழைக்கப்பட்டது. இன்றைக்கு இருக்கும் தமிழ்நாடு, ஆந்திராவின் 9 மாவட்டங்கள், கர்நாடகாவின் 2 மாவட்டங்கள், கேரளாவின் சிறு பகுதி அதில் அடங்கி இருந்தது.
மொழிவாரி மாநிலங்கள் நீண்ட போராட்டத்துக்கும், தியாகங்களுக்கும் பிறகு கிடைத்ததாக குறிப்பிடுகிறார் எழுத்தாளரும், காந்திய சிந்தனையாளருமான இராசமாணிக்கம்...
1956-ல் சென்னை மாநிலமாக உதயமான பின், 1967-ல்தான் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மொழி அடிப்படையில் தமிழகம் உருவானதன் காரணமாக சில பகுதிகளை இழந்து விட்டதாக கூறுகிறார் சுப. வீரபாண்டியன்...
மொழிவாரி மாநிலம் உருவான பின், அந்தந்த மொழிகளின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்க வழி ஏற்பட்டுள்ளதாக சொல்லும் எழுத்தாளர் இராசமாணிக்கம், மறுபுறம் மாநில உணர்வுகள் தலைதூக்கி தேசிய நலன் பின்னுக்குத் தள்ளப்படுவதாகவும் கவலை தெரிவிக்கிறார்.
கல்விக் கூடங்களில் பயிற்று மொழியாக, அரசின் ஆட்சி மொழியாக, நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக அந்தந்த மாநில மொழிகள் இடம் பெற மொழிவாரி மாநில சட்டமே வாய்ப்பளித்துள்ளது என்பதை நினைவுகூர வேண்டும்.
November 01, 2016
மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு தமிழகம் உருவாகி 60 ஆண்டுகள் ஆகிறது. அண்டை மாநிலங்களுடன் நதி நீர் பிரச்சினை உச்சம் அடைந்துள்ள நிலையில், மொழிவாரி மாநிலங்கள் உருவான வரலாற்றைச் சொல்கிறது இந்த தொகுப்பு..
இந்தியா விடுதலை அடைந்த போது, இன்றைக்கு இருப்பது போன்ற பல மாநிலங்கள் அன்றைக்கு இல்லை. பல மாநிலங்கள் இணைந்தே இருந்தன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அன்றைக்கு சென்னை தலைமாகாணம் என அழைக்கப்பட்டது. இன்றைக்கு இருக்கும் தமிழ்நாடு, ஆந்திராவின் 9 மாவட்டங்கள், கர்நாடகாவின் 2 மாவட்டங்கள், கேரளாவின் சிறு பகுதி அதில் அடங்கி இருந்தது.
மொழிவாரி மாநிலங்கள் நீண்ட போராட்டத்துக்கும், தியாகங்களுக்கும் பிறகு கிடைத்ததாக குறிப்பிடுகிறார் எழுத்தாளரும், காந்திய சிந்தனையாளருமான இராசமாணிக்கம்...
1956-ல் சென்னை மாநிலமாக உதயமான பின், 1967-ல்தான் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மொழி அடிப்படையில் தமிழகம் உருவானதன் காரணமாக சில பகுதிகளை இழந்து விட்டதாக கூறுகிறார் சுப. வீரபாண்டியன்...
மொழிவாரி மாநிலம் உருவான பின், அந்தந்த மொழிகளின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்க வழி ஏற்பட்டுள்ளதாக சொல்லும் எழுத்தாளர் இராசமாணிக்கம், மறுபுறம் மாநில உணர்வுகள் தலைதூக்கி தேசிய நலன் பின்னுக்குத் தள்ளப்படுவதாகவும் கவலை தெரிவிக்கிறார்.
கல்விக் கூடங்களில் பயிற்று மொழியாக, அரசின் ஆட்சி மொழியாக, நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக அந்தந்த மாநில மொழிகள் இடம் பெற மொழிவாரி மாநில சட்டமே வாய்ப்பளித்துள்ளது என்பதை நினைவுகூர வேண்டும்.
No comments:
Post a Comment