உயிர்த்தார் இயேசு ஓயாது உயிர்ப் பேச்சு
--------------------------------------------------------------
புதைத்துவைத்த மூன்றாம்நாள்
உயிர்த்துவந்தார் இயேசு
மூடிவைத்த பாராங்கல்லைப்
புரட்டுவதில்லையாம் இலேசு
அதைக்காத்த அரசுமுத்திரைகள்
பொடிப்பொடியாய்ப் போச்சு
அதிர்வடைந்த படைநடுங்கி
மூர்ச்சையடைந் தாச்சு
பயப்படாதே முந்தினவரும்
பிந்தினவரும் எழுந்துவந்தேன்
பேசுவதுஏசு உயிருள்ளவரும்
உடலுள்ளவரும் காட்சிதந்தேன்
செயல்இதோ சதாகாலமும்
உயிருடனே உலாவுவேன்
பாதாளத்துக்கும் மரணத்துக்கும்
திறவுகோலை உடையேன்
பாவம்போக்க வந்தவரைப்
பாவியாக்கித் தீர்த்தனர்
பழிச்சொல்லும் இழிச்சொல்லும்
பயிரங்கக்குற்றஞ் சாட்டினர்
பாவமூட்டைப் பாவிப்படைக்கும்
பரிதவிப்பாய்ப் பார்த்தார்
பரமபிதாவிடம் இயேசுதாமே
மன்னித்தருள வேண்டினார்
மண்டைஓட்டு மலைஉச்சியில்
கொண்டுவந்து ஏற்றினர்
ஆணியாலடித்து சிலுவையில்நட்டு
கொன்றுமுடித்தனர் பாதகர்
கண்டுகொண்டு கொண்டுவந்த
பக்தர்கூடிப் புதைத்தனர்
அண்டையிலே பகைப்படைகள்
கண்கொட்டாமல் காத்தனர்
அந்தரத்தில்சிந்தும் சொந்தரத்தம்
சொட்டச்சொட்ட இயேசு
மாந்தர்பாவம் மரணபாரம்
ரத்தயுத்தமாகிப் போச்சு
வந்தசேவகன் விலாவில்குத்தி
முடிந்தமுடிவாய் ஆச்சு
மரணபாவம் சுமந்துதீத்து
மரணத்தைப்புதைச் சாச்சு
ஆற்றல்இருந்தும் அடங்கிக்கிடந்தார்
அன்பால்பகைக்கும் இரங்கினார்
அன்புகொண்ட மக்களுக்காய்
அவரேதுயரைச் சகித்தார்
ஏற்றகாலமும் சுற்றிவந்ததும்
வார்த்தைபிரயோ கித்தார்
வெற்றிமட்டும் வெளித்தெரிந்தது
வேலைமறைவில் செய்தார்
உயிர்ப்பலிபோச்சு ஒரேபலாயாச்சு
இறுதிப்பலி இயேசு
பலிக்கிலியின் சிலுவைமரமோ
புனிதமரமாய் ஆச்சு
பயமில்லை பாவமில்லை
மீட்டார்மக்களை இயேசு
திறந்தகல்லறை திறந்தேகிடக்குது
உயிர்த்ததுக்குச் சாட்சி !
--------------------------------------------------------------
புதைத்துவைத்த மூன்றாம்நாள்
உயிர்த்துவந்தார் இயேசு
மூடிவைத்த பாராங்கல்லைப்
புரட்டுவதில்லையாம் இலேசு
அதைக்காத்த அரசுமுத்திரைகள்
பொடிப்பொடியாய்ப் போச்சு
அதிர்வடைந்த படைநடுங்கி
மூர்ச்சையடைந் தாச்சு
பயப்படாதே முந்தினவரும்
பிந்தினவரும் எழுந்துவந்தேன்
பேசுவதுஏசு உயிருள்ளவரும்
உடலுள்ளவரும் காட்சிதந்தேன்
செயல்இதோ சதாகாலமும்
உயிருடனே உலாவுவேன்
பாதாளத்துக்கும் மரணத்துக்கும்
திறவுகோலை உடையேன்
பாவம்போக்க வந்தவரைப்
பாவியாக்கித் தீர்த்தனர்
பழிச்சொல்லும் இழிச்சொல்லும்
பயிரங்கக்குற்றஞ் சாட்டினர்
பாவமூட்டைப் பாவிப்படைக்கும்
பரிதவிப்பாய்ப் பார்த்தார்
பரமபிதாவிடம் இயேசுதாமே
மன்னித்தருள வேண்டினார்
மண்டைஓட்டு மலைஉச்சியில்
கொண்டுவந்து ஏற்றினர்
ஆணியாலடித்து சிலுவையில்நட்டு
கொன்றுமுடித்தனர் பாதகர்
கண்டுகொண்டு கொண்டுவந்த
பக்தர்கூடிப் புதைத்தனர்
அண்டையிலே பகைப்படைகள்
கண்கொட்டாமல் காத்தனர்
அந்தரத்தில்சிந்தும் சொந்தரத்தம்
சொட்டச்சொட்ட இயேசு
மாந்தர்பாவம் மரணபாரம்
ரத்தயுத்தமாகிப் போச்சு
வந்தசேவகன் விலாவில்குத்தி
முடிந்தமுடிவாய் ஆச்சு
மரணபாவம் சுமந்துதீத்து
மரணத்தைப்புதைச் சாச்சு
ஆற்றல்இருந்தும் அடங்கிக்கிடந்தார்
அன்பால்பகைக்கும் இரங்கினார்
அன்புகொண்ட மக்களுக்காய்
அவரேதுயரைச் சகித்தார்
ஏற்றகாலமும் சுற்றிவந்ததும்
வார்த்தைபிரயோ கித்தார்
வெற்றிமட்டும் வெளித்தெரிந்தது
வேலைமறைவில் செய்தார்
உயிர்ப்பலிபோச்சு ஒரேபலாயாச்சு
இறுதிப்பலி இயேசு
பலிக்கிலியின் சிலுவைமரமோ
புனிதமரமாய் ஆச்சு
பயமில்லை பாவமில்லை
மீட்டார்மக்களை இயேசு
திறந்தகல்லறை திறந்தேகிடக்குது
உயிர்த்ததுக்குச் சாட்சி !
No comments:
Post a Comment