Sunday, April 12, 2020

ஈஸ்டர் 2020. *

                                ஈஸ்டர்--2020
                                --------------
உயிர்த்தெழுந்தார்  இயேசு  உயிர்த்தெழுந்தார்
      உயிர்பிரிந்த  மூன்றாம்நாள்  உயிர்த்தெழுந்தார்
ஜெயித்தெழுந்தார்  சொல்லிவைத்தே  ஜெயித்தெழுந்தார்
      ஜெகத்திலிருந்த  பாவங்களைச்  ஜெயித்தெழுந்நார்


அன்னைப்பிறப்பு  அந்தரமரிப்ப்  குகைக்குள்புதைப்பு
      பக்தர்தவிப்பு  பகைவர்களிப்பு  விளைவுதனிப்பு
கண்களில்தோல்வி  கருத்தினில்கேள்வி  ஓய்வுநாள்ஆய்வு
      வாரமுதநாள்  வந்ததுதீர்ப்பு  தேவதீர்ப்பு

அடித்ததுஆணி  இடித்ததுமேனி  ரத்தக்கொட்டும்
      துடித்தஉடல்  அடித்தோலில்  வியர்வைச்சொட்டும்
குடித்தசிலுவை  படிப்படியே  புனிதமணிதலும்
      தருகிறதாம்  என்றென்றும்  சாட்சிக்காட்சியும்

மறுக்கவுமில்லை  ஏற்கவுமில்லை  சாட்டியகுற்றம்
      முடிவையறிந்து  மவுனங்காத்து  பொறுத்திருந்தார்
பொறாமையும்  வெறுப்புமே  பகைத்திருந்ததாம்
      பழியும்இழியும்  பலமிருந்தும்  சகித்துக்கொண்டார்

முப்பத்துமூன்றாம்  ஆண்டுமாண்டு  மீண்டெழுந்தார்
      பழமைகளைக்  களையும்வழி  தெளிவையளித்தார்
ஒப்பற்றமகிமை  காப்பாற்றி  பக்தியளித்தார்
      ஒவ்வொரு  உள்ளத்திலுமே  மகிழ்வுவிதைத்தார்.

No comments:

Post a Comment