உலக வாயை
மூடிப்போட்டு ஆட்டுது
கொரோனாப் பேயே .
காடு அமைய
பலர், நாடு அமைக்க
ஒருவர் வாயே !
குளிர் மலையில்
கொதிக்கும் இதயங்கள்
கண்மூடாக் காவல் !
பறக்கும் பாலம்
போக்கு வரத்து களால்
நவ நகரம் !
மிரண்டு விட்ட
மனக்குளப்பங்களால்
மிரட்டக் கிட்டே...!
ஆயத்த ஆடை
மட்டுமா தயாராக?
நாக்காலி கூட !
கவச வாழ்க்கை
கட்டாய மாக்கித் தந்தார்
காக்கிற நோக்கை !
தங்கந் தாங்கிகள்
மங்கலச் சுமைகளை
விரும்பும் மக்கள்...!
மலர்ந்த குடை
தொலைக் காட்சிகளுக்கு
நீக்குது தடை !
திறக்க வச்ச
ஊடகங்கள் ! வாய் மூடி
கொரோனா வாச்சே !!
கடல் முழுதும்
மீன்களல்ல ! எங்குப்
போர் கப்பல்களாம் !!
விமானம் தூங்க
போர் விமானமோ, விண்ணில்
கர்சனை கேட்கே !
தேவைப் பட்டாலே
தூசி தட்டப் படுமாம்
கோப்பு களிலே !
கொரோனாப் படி
எல்லாம் விட்டாலும்,இன்னும்
முடியா குடி .
இருவர் சேந்தால்
பலருக்கு எரிச்ணல்
இது உலகியல் .
அடங்கா வம்பு
புடுங்கா பல்லிருந்தால்
நஞ்சுடன் பாம்பு .
நம்பிக்கைகளை
உடைத்து,ஆசைகளை
சாதிக்கிறார்கள் !