Showing posts with label தமிழ்-தமிழர் பற்றி. Show all posts
Showing posts with label தமிழ்-தமிழர் பற்றி. Show all posts

Monday, January 16, 2017

தமிழ்-தமிழர் பற்றி 16-1-2017.

 1)இலக்கியம் என்பது மற்ற கதைகளைப்போல ‘அடுத்தது என்ன?’ என்று புரட்டிப்புரட்டி வாசிக்கவேண்டிய ஒன்று அல்ல. அதிலுள்ள எல்லா வரிகளுமே முக்கியமானவை. .

2) இலக்கியம் ஒரு மையக்கருத்தைச் சொல்வது அல்ல. ஒரு வாழ்க்கையை நாம் கற்பனையில் வாழச்செய்கிறது அது. அந்த வாழ்க்கையில் நாம் என்ன அனுபவத்தையும் சிந்தனைகளையும் அடைகிறோமோ அதுதான் அந்த இலக்கியத்தின் சாராம்சாம்.

3) இலக்கியம் கொஞ்சம் சொல்லி நிறைய ஊகிக்கவைக்கும் கலை. ஆகவே இலக்கியப்படைப்பில் சொல்லப்படாமல் விட்டுவிடப்பட்டவை என்ன என்பதை நோக்கியே நாம் நம் கற்பனையை விரிக்கவேண்டும்.

வாசிப்பு வழிகாட்டி| புனைகதை: ஜெயமோகன்
தமிழ் ஹிந்து

Tuesday, January 10, 2017

தமிழ்-தமிழர் பற்றி 10-1-2017

ஏர்தழுவல்
----------
பல்லாயிரம் ஆண்டுகள்
பாரம்பரியம்


காலத்துக்கேற்ற
மாற்றம்


ஊர் கூடி
வீரர் ஓடி
ஏர் தழுவும்
வீர விளையாட்டு


சரித்திரம் மறந்து
உணர்வுகளை
குப்பையில் எறிந்து


வீடு புகுந்து
உரிமை பறிப்பது

முரட்டு  அதிகார
குருட்டுக் கோர தாண்டவம்


இடித்த இதயத்தில்
மீண்டு மீண்டும்
இடிக்குந் தார்
சொட்டு ரத்தம்


எதுர் அனல்
பற்றிக் கொள்ளுமுன்
மீட்டெடுத்தாக வேண்டும் .

Sunday, January 8, 2017

தமிழ்-தமிழர் (8-1-2017)

அது வெறும் மயிரு அல்ல.. வாழ்வு..
-----------------------------------------------------

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும்.. அல்லது பொது பழக்கத்திலிருக்கும் பழமொழிகள் யாரோ ஒருவரை காயப்படுத்தும் என்பதை சமயங்களில் நாம் அறிவதில்லை. ஒருமுறை நான் அப்படி ஒரு தவறை செய்தேன்.
...Continue Reading

Saturday, December 31, 2016

தமிழ்-தமிழர் (31-12-2016)

தமிழால் இணைவோம். தொல்காப்பியம் அறிவோம்....

 
 
 
தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு என்னும் தலைப்பில் புலவர் பொ.வேல்சாமி…
youtube.com

Thursday, December 29, 2016

தமிழ்-தமிழர் (29-12-2016)

தமிழால் இணைவோம். தொல்காப்பியம் அறிவோம்....
 
 
 
புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் தொல்காப்பியமும் உரையாசிரியர்களும் என்ற தலைப்பில்…
youtube.com

Wednesday, December 3, 2014

தமிழ்-தமிழர் 3/12/14. *


https://www.youtube.com/watch?v=tJP8HTF8ZtI
மகாதேவனின் துள்ளல் தாளம்...

தமிழ் 3/12/14.








தமிழர் பற்றி 3/12/14.


இந்த நிழற்படம் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டது இல்லை. முல்லை பெரியார் அணை கட்டபடுவதர்க்கு முன்பு நம் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டது.
முன்பு ஒரு முறை மழை பொய்த்து ...போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது. அதன் காரணமாக இருக்கும் மக்களுக்கு உணவளிக்க முடியாததால்
பல்வேறு நாடுகளுக்கு உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் பர்மா ,மலேசியா,மொரீசியஸ் மக்கள் அங்கு அனுப்பப்பட்டனர் இன்னும் நம் மக்கள் அங்கு
வாழ்வதுகுறிப்படத்தக்கது.

இத்தகைய பஞ்சத்தை பார்த்து மக்கள்
மடிவதை பார்க்க சகிக்காமல் தான்
பென்னி குயிக் என்பவர் அரசாங்கம்
நிதி உதவி செய்ய முன்வராத போது கூட
தன் சொத்தை எல்லாம்
விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார்.

அனைவரும் அரிய முடிந்த வரையில் பகிருங்கள்

Tuesday, December 2, 2014

தமிழ்-தமிழர் பற்றி 2/12/14

                         சிரிப்பு மூலம் சிந்தனை


நாஞ்சில் நாட்டில் ஒழுகினசேரி என்ற கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29 அன்று கலைவாணர் பிறந்தார்


கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘இந்து டாக்கீஸ்’ பகுதியில் வெளியான கண்ணீரை மறைத்த சிரிப்பு மேதை’ கட்டுரை அருமை. அப்போதையத் தமிழ்த் திரைப்படங்களில் தன்னுடைய நகைச்சுவையின் மூலம் பகுத்தறிவு கருத்துக்களைப் புகுத்தியவர் கலைவாணர். அவருடைய நகைச்சுவை யாருடைய மனதையும் புண்படுத்தாது. கலைவாணர் போன்ற நடிகர்களின் நகைச்சுவை ரசிகர் மனதில் என்றும் நிலைத்து இருக்கும். காரணம், மக்கள் மனதில் சமுதாயப் பிரச்சினைகள் பதியும்வண்ணம் நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்குவது அவரது தனிச்சிறப்பு.


என்.எஸ்.கிருஷ்ணனிடம் எண்ணற்ற கலையாளுமைகள் இருந்தன. நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், மூடத்தனங்கள், ஏமாற்றுக்காரர்கள் ஆகியோரை
வன்மையான சொற்களைக்கூடப் பயன்படுத்தாமல் மென்மையாகப் பகடி செய்த சமூக விஞ்ஞானி அவர். பாடலையும் நகைச்சுவைக் காட்சியாக மாற்ற முடியும் என்ற மாயத்தைத் திரையில் முதலில் செய்துகாட்டியவர்.


 தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை பாடல்களாகவும் அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர். சொந்தக் குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார். சில படங்களை இயக்கியுள்ளார். அண்ணாவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இவர், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரு டாக்டரைப் பற்றி புகழ்ந்து பேசினார். கடைசியில், ‘இவ்வளவு நல்ல டாக்டரை சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு யார் வைத்தியம் பாப்பாங்க? அதனால் அவரை இங்கேயே வைத்துக்கொண்டு அண்ணாவுக்கு ஓட்டு போட்டு சட்டசபைக்கு அனுப்பிவையுங்கள்’ என்றார்.


நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. அவர் வாழ்வும் 49 ஆண்டுகளில் சுருக்கமாக முடிந்தாலும் வரலாறு அவர் பெயரை வாரி அணைத்துக் கொண்டது என்பது மட்டும் உண்மை.


எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கே.: இன்று என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்  30/9/1957.

Sunday, November 30, 2014

தமிழ்-தமிழர் பற்றி 30/11/14. *








அமெரிக்கர்களின் தமிழ் பாட்டு
பார்த்து ரசித்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Thursday, September 25, 2014

தமிழ்-தமிழர் பற்றி 25/9/14.

தமிழர்கள் தமிழை கற்காமல் இருப்பதே மிகப் பெரிய துரோகம்: கனடா பேராசிரியர் வேதனை!
தமிழர்கள் தமிழை கற்காமல் இருப்பதே மிகப் பெரிய துரோகம்: கனடா பேராசிரியர் வேதனை!
Posted Date : 12:32 (24/09/2014)Last updated : 16:48 (24/09/2014)
புதுச்சேரி: தமிழர்கள் தமிழை கற்காமல் இருப்பதே மிகப் பெரிய துரோகம் என்று கனடா பேராசிரியர் வேதனை தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் 13வது உலக தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தமிழ் பேராசிரியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இணையத்தில் தமிழ் மொழி சந்திக்கும் பிரச்னைகள், தமிழ் மொழியை கையடக்க கருவிகளில் எவ்வாறு கொண்டு செல்வது, தமிழ் மொழித் தொடர்பான புதிய மென்பொருள் கண்டுப்பிடிப்புகள் என மொழி சார்ந்த பல விவதாங்கள் இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. பொது அமர்வு, சிறப்பு அமர்வு என மூன்று நாட்களும் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு 100க்கும் அதிகாமான பேராசிரியர்களின் தமிழ் மொழி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. 

இந்திய அறிவியல் பயிலகத்தை சேர்ந்த பேராசிரியர் ஏ.ஜி.ராமகிருஷ்ணன் நம்மிடம் பேசும்போது, ''15 வருட முயற்சியின் பயனாக பல புதிய தமிழ் மென் பொருட்களை கண்டுபிடித்து வருகிறோம். ஓ.சி.ஆர். எனப்படும் 'அச்சு உணறி' என்ற மென் பொருள் மூலம் ஒரு புத்தகத்தை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் ப்ரெய்லி புத்தகமாக எளிதாக மாற்ற முடியும். இதுவரை நாங்கள் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவ்வாறு மாற்றியுள்ளோம். அதேபோல், கையெழுத்து உணறி மென்பொருளையும் கண்டுப்பிடித்துள்ளோம். அதனை அடுத்த கட்டம் எடுத்து செல்வதற்கான முயற்சிகளில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.

''டெக்ஸ்ட் டூ ஸ்பீச்'' எனப்படும் எழுத்தை ஒலியாக மாற்றும் மென்பொருளும் எங்களுடைய கண்டுப்பிடிப்புகளில் ஒன்று. இந்த முறையை இன்னும் மேம்படுத்த உள்ளோம். இதனை 'டெய்சி' என்பார்கள். புத்தகத்தை போன்றே ஒலி மூலம் பக்கம் பக்கமாக பிரித்து கேட்க முடியும். அதேபோல், ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் தமிழ் தட்டச்சிற்கான மென் பொருளையும் உருவாக்கியுள்ளோம். இது, 'இன்டிக் கீ போர்ட்' என்ற பெயரில் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கின்றது. அதன் மூலம் திராவிட மொழிகள் அனைத்தையும் கையடக்க கருவிகளில் பயன்படுத்த முடியும். எங்களுடைய எதிர்கால லட்சியமாக ஒரு புகைப்படத்திலிருக்கும் ஆங்கில எழுத்துக்களை தனியாக பிரித்தெடுத்து தமிழ் மொழிக்கு மாற்றம் செய்வதில் தீவிரமாக முயற்சித்து வருகிறோம். ஆங்கிலத்தில் எப்படி 'யூனிக்கோட்' பொதுவாக உள்ளதோ அதுப்போன்று தமிழிலும் பொதுவான எழுத்துரு அமைந்தால் எங்களுடைய முயற்சி வெற்றி பெறும். இணையத்தின் எட்டுத் திக்கிலும் தமிழ் மொழி சென்று சேர வேண்டும் என்பதே என்னுடைய கனவு" என்றார்.

கனடா பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சி.ஆர்.செல்வகுமார் கூறும்போது, ''தமிழ் நாட்டில் தான் தமிழுக்கு பெரும் தட்டுப்பாடு. கனடாவில் அப்படியல்ல. தமிழ் நாட்டில் எல்லாமே ஆங்கிலத்தில்தான் உள்ளது. சூழல் இப்படி இருந்தால் தமிழை யார் கற்பார்கள்? ஆங்கில மொழி மோகம் என்பது தமிழர்களே உருவாக்கி கொண்ட ஒன்று. அதில் ஆட்சியாளர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. தமிழர்கள் தமிழை கற்காமல் இருப்பதே தமிழினத்திற்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். ஓன்டோரியோ நகரில் 55 பள்ளிக் கூடங்களில் தமிழ் சொல்லித்தருகிறார்கள்" என்றார்.

சுவிஸ் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் கல்யாணி கூறும்போது, ''தமிழ் மொழியை இணையம் மூலம் மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்னுடைய முக்கிய பணி. மால்கம் கூப்பர் என்பவர் முதன் முதலில் தமிழ் மொழிக்கான எழுதுருவை தயாரித்தார். அது தமிழ் இணைய வரலாற்றிலே மிகப் பெரிய மைல் கல். 85களில் கணிணிகளில் தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதன்பின் வந்த மின்னஞ்சல், வலைப்பூ போன்றன இணையத்தில் தமிழ் ஆர்வலர்களை ஒன்றிணைத்தன. 94களில் 'மயிலே' என்ற எழுத்துருவை சொந்தமாக உருவாக்கி சோதனை ஓட்டமாக திருக்குறள்களை தட்டச்சு செய்து வெற்றிகரமாக அனுப்பினேன். சமூக வளைத்தளங்கள் தான் இன்று மனிதனுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள். நம் தாய் மொழித் தமிழில் கருத்துக்களை பதிவிடுவதை பெருமையாக கருத வேண்டும்" என்றார்.

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மு.இளங்கோவன், ''தமிழ் மொழி இணையத்தில் கடந்து வந்த பாதை, இன்னும் செல்ல வேண்டிய தூரத்தை இந்த மாநாட்டின் மூலம் அடையாளப்படுத்தி உள்ளோம். வெளிநாடுகளிலிருந்து முக்கியமாக மலேசியாவிலிருந்து மட்டும் 60 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். அடுத்த கட்டமாக தமிழை கையடக்க கருவிகளில் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்களை இம்மாநாட்டின் மூலம் தீர்வு கண்டிருக்கிறோம். தமிழ் மொழி தொடர்பான புதிய மென் பொருள் தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ் இணைய ஆர்வலர்களுக்கு புதிய உத்வேகத்தை இந்த மாநாடு வழங்கி இருக்கிறது" என்றார்.

நா.இள.அறவாழி

படங்கள்:
ஜெ.முருகன்

Sunday, September 21, 2014

தமிழ்-தமிழர் பற்றி 21/9/14 * * * *

 பட்டுக்கோட்டை பாட்டுகள் 


பட்டுக்கோட்டையில்
இருந்து வடக்கே திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் சாலையின் 13-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 'சங்கம் படைத்தான்காடு' என்னும் சிற்றூர். இங்கு அருணாசலம்பிள்ளை - விசாலாட்சி தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம்.
 ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த கல்யாணசுந்தரம் உள்ளூர் திண்ணைப் பள்ளியில் மூன்றாவது வகுப்பிற்கு மேல் படிக்க வசதியும் வாய்ப்பும் இல்லாததால், ஏழெட்டு வயதிலேயே வயலில் இறங்கி ஏர் உழவேண்டிய நிலை ஏற்பட்டது.
 தகப்பனாரான அருணாசலம் பிள்ளை பிழைப்புத்தேடி சிங்கப்பூர் சென்றுவிட்டார். அவர் 'இயற்கைப்புலமை' பெற்றிருந்தார். அதைக்கொண்டு 'முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்மி' என்னும் தலைப்பில் கவிதைகள் - பாட்டுகள் இயற்றி அவற்றை ஒரு நூலாக அங்கு வெளியிட்டார்.
 இளமையிலேயே முறையான கல்வி அறிவு பெறாத கல்யாணசுந்தரம், தந்தை 'மரபணு' மூலம் பெற்ற கவிதை அறிவு உதிரத்தில் பெருக்கெடுத்து ஓடியதால், 'எழுத்து', 'சொல்', 'பொருள்', 'யாப்பு', 'அணி' என்னும் ஐந்து பகுதியான ஐந்திலக்கண வரம்பு முறைக்கெல்லாம் அப்பாற்பட்டு, எதுகை மோனையை மட்டும் பிடித்துக்கொண்டு அதை வைத்து தனது கற்பனையில் தோன்றியவாறு 'இட்டுக்கட்டிப்பாடுதல்' என்னும் பழைய வழியைப் பின்பற்றிப் பாடல்களை எழுதுகோல் கொண்டு எழுதாமலே வாயாலேயே பாடலானார்.
 வரப்பில் அமர்ந்தவாறு சிந்தித்த அந்த இயற்கை இளங்கவி இனி வயலில் இறங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். பிறந்த மண்ணைவிட்டுப் பிரிந்து, அந்நாட்களில் பிரபலமாயிருந்த 'சக்தி நாடக சபா'வில் போய்ச் சேர்ந்தார்.
 எதுவுமே தெரியாத அவரை 'எதற்கும் இருக்கட்டுமே' என்று சபாவின் முதலாளியான சக்தி டி.கே.கிருஷ்ணசாமி தம் நாடகக்குழுவில் சேர்த்துக்கொண்டார். இந்த சக்தி நாடக சபாவில்தான் சிவாஜிகணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, எஸ்.ஏ.நடராஜன், ஓ.ஏ.கே.தேவர் முதலியோர் நடிகர்களாக இருந்தனர்.
 கல்யாணசுந்தரம் சிறுசிறு நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துக்கொண்டே கவிதைகளும் எழுதி வந்தார். அவற்றில் 'எண்ணம்' சரியாக இருந்தது. ஆனால், எழுத்துப்பிழைகள் நிறைய இருந்ததைப்பார்த்த அவரது நாடக நண்பர்கள், "நீ முறையாகத் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டால், வருங்காலத்தில் ஒரு சிறந்த கவிஞனாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நடிப்பதை விட்டு விட்டு நேராக பாரதிதாசனிடம் போய்ச்   சேர்ந்துவிடு. பலர் அவரிடத்தில்தான் கவிதை எழுதக் கற்றுக்கொண்டு, கவிஞர் களாகியிருக்கின்றனர்" என்று கூறினார்கள்.
 அதைக்கேட்டு கல்யாணசுந்தரம் புதுச்சேரிக்குப் போய் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைப் பார்த்துக் கும்பிட்டு, அவர் முன்னே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்து பணிவுடன் நிற்க, பாரதிதாசன் அவரைக்கேட்டார்:-
 பாரதி:- யாருப்பா நீ?
 கல்யாணசுந்தரம்:- கல்யாணசுந்தரம்.
 பாரதி:- எந்த ஊரு?
 கல்யாணசுந்தரம்:- பட்டுக்கோட்டைக்குப் பக்கத்துல சங்கம்படைத்தான்காடு.

 பாரதி:- என்ன விஷயமா இங்கே வந்திருக்கே?
 கல்யாணசுந்தரம்:- பாட்டு எழுதணும்.
 பாரதி:- என்ன படிச்சிருக்கே?
 கல்யாணசுந்தரம்:- (சற்று நேர மவுனத்திற்குப்பின்) சொல்லிக்கிற மாதிரி பெரிசா ஒண்ணும் இல்லேங்கய்யா.

 பாரதி:- பரவாயில்லே சொல்லு.
 கல்யாணசுந்தரம்:- (விரலைக்காட்டி) மூணாங்கிளாஸ்.
 பாரதி:- தமிழ் எழுதத் தெரியும்ல.
 கல்யாணசுந்தரம்:- தப்புத்தப்பா எழுதுவேன்.

 பாரதி:- அப்ப எதை வச்சு பாட்டெழுதணும்னு ஆசை உனக்கு உண்டாச்சு?
 கல்யாணசுந்தரம்:- எங்கப்பா ஒரு கவி. முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்மின்னு சிங்கப்பூர்ல புத்தகம் போட்டாரு. அப்பா மாதிரி நானும் ஒரு கவி ஆவணும்னு ஆசை.

 பாரதி:- வேற என்ன வேலை தெரியும்?
 கல்யாணசுந்தரம்:- விவசாயம் நல்லா செய்வேன். பாத்திங்களாய்யா? (தன் கைகளைக்காட்டி) கலப்பை புடிச்சு உழுது உழுது, மம்பட்டி புடிச்சு வெட்டி வெட்டி எங்கையே காய்ச்சிப்போயிடுச்சு. அதோட வீட்டு வேலைங்கள்ளாம் செய்வேன். வேட்டித் துணிமணித் தொவைச்சிப் போடுவேன். உங்களுக்கு முதுகு தேய்ச்சி விடுவேன். எண்ணெய் தேச்சிக் குளிப்பாட்டி விடுவேன். நீங்க எந்த வேலை சொன்னாலும் தட்டாமச்செய்வேன். வேணும்னா பாருங்க.

 பாரதி:- இந்த ஊர்ல உனக்கு வேண்டியவுங்க, தெரிஞ்சவுங்க வேற யாராவது இருக்காங்களா?
 கல்யாணசுந்தரம்:- இல்லிங்கய்யா. அதான் நீங்க இருக்கீங்களே. அப்புறம் என்னா?
 கள்ளங்கபடம் இல்லாத கல்யாணசுந்தரத்தின் வெள்ளை மனதையும் வெகுளித்தனத்தையும் நன்கு விளங்கிக்கொண்ட கனகசுப்புரத்தினம் என்கின்ற பாவேந்தர் பாரதிதாசன் சற்று யோசித்து, "பழனியம்மா" என்று அழைக்க, உள்ளிருந்து அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் வந்து நின்று...

 பழனி:- என்னங்க?
 பாரதி:- இந்தப்பையன் எங்கிட்டே பாட்டெழுதக் கத்துக்குறதுக்கு பட்டுக்கோட்டையிலிருந்து வந்திருக்கான். இங்கே அவனுக்கு வேற யாரும் இல்லே. நம்ம வீட்டோட இருந்துக்கட்டும். கிராமத்துப் பையன். வீட்டை நல்லா கவனிச்சிக்குவான். பார்த்துக்க.
 பழனி:- சரிங்க. வாப்பா சாப்பிடலாம். வா.
அந்நாட்களில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ அதிபர் அமரர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து மாபெரும் வெற்றி பெற்ற 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', 'பொன்முடி' (புரட்சிக்கவிஞரின் குறுங்காப்பியமான 'எதிர்பாராத முத்தம்' திரைப்பட வடிவத்தின் மாற்றுப்பெயர் 'பொன்முடி') 'வளையாபதி', 'சதி சுலோசனா' முதலிய படங்களுக்கு பாரதிதாசன் திரைக்கதை - வசனம் - பாடல்கள் எழுதியதன் மூலம், அந்தப்பட நிறுவனத்தின் நிரந்தர ஆஸ்தான ஆசிரியராக இருந்து வந்தார்.
 பொதுவாக பாரதிதாசனிடம் ஒரு வழக்கம் உண்டு. படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை அவர் எழுதிய பிறகு அவற்றில் மற்றவர்கள் திருத்தமோ அல்லது மாற்றமோ சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார். தப்பித்தவறி சில வேளைகளில் ஏற்றுக்கொள்வதும் உண்டு. அது அப்போதைய அவருடைய மனோ நிலையைப் பொறுத்தது.
 ஒருமுறை தன் மாணவன் கல்யாணசுந்தரத்தையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் வந்த பாவேந்தர் அப்போது அங்கு தயாராகிக் கொண்டு இருந்த 'மகேஸ்வரி' படத்திற்காக எழுதிய ஒரு பாடலில் அவரது குணமும், கோபமும் தெரிந்தும்கூட, வேறு வழி இன்றித் திருத்தம் சொன்னார்கள். உடனே அவருக்குக் கோபம் வந்து வழக்கம்போல அவர்களைத்திட்டி, "இந்தப்பாட்டை நான் எழுதமாட்டேன். இதோ எங்கூட வந்திருக்கான் பாரு - என் மாணவன் கல்யாணசுந்தரம். இவன் நல்லா எழுதுவான்.
 இவன்கிட்டே எழுதி வாங்கிக்குங்க. அப்பா நீ எழுதுடா" என்று கூற இதை எதிர்பாராத அவர் வெல வெலத்துத் தயங்கியபடி கூறினார்.
 கல்யாணசுந்தரம்:- ஐயா! என்னங்க திடீர்னு இப்படிச் சொல்லிட்டிங்க? நான் எப்படி எழுதுறது?... எனக்கு...
 பாரதி:- (குறுக்கிட்டு) பயப்படாதே! நான் சொல்றேன். தைரியமா எழுது. எல்லாம் நல்லா வரும். எழுது என்று அவரைத் தட்டிக்கொடுத்தார். ஆகவே தன் பக்திக்கும், பாசத்திற்கும் உரிய ஆசானின் பாதம் தொட்டு வணங்கி முதன் முதலாக அவர் சினிமாவுக்கென்று எழுதிய பாடலின் பல்லவி இது:-
"அம்பிகையே முத்து மாரியம்மா - உன்னை
 நம்பி வந்தேன் ஒரு காரியமா
 ஆளை விழுங்குற காலமம்மா - இங்கு
 ஏழை நிலைமையைக் கேளுமம்மா."

 இந்தப் பாடலை இசை அமைப்பாளர் பாடிப்பார்த்தார். சரியாக இருக்கவே இன்புற்று எல்லோரும் பாராட்டினர். செய்தி அதிபர் டி.ஆர்.எஸ்ஸின் செவிகளுக்குச் சென்றது.
 உடனே அவர் உத்தரவிட்டார். "இனிமே இந்தப் பையனை வச்சே நம்ம மத்த எல்லாப் படங்களுக்கும் வேண்டிய பாட்டுங்களை எழுதி வாங்கிக்குங்க. பெரியவருக்கு சிரமம் கொடுக்கவேண்டாம். அவரோட சிஷ்யன் தானே! ஒண்ணும் சொல்லமாட்டாரு."
 முதல் முறையாகத் தன் குருநாதருடன் சேலம் வந்த கல்யாணசுந்தரம் அடுத்தடுத்து அவரது அனுமதியுடனும், ஆசியுடனும் அடிக்கடி தனியாகப் பாட்டெழுத வரவேண்டியதாயிற்று.
கவிஞர் புதுச்சேரியில் இருந்தபொழுது பாவேந்தர் 'குயில்' என்னும் கவிதை இதழை வெளியிட்டு வந்தார். அதில் அ.கல்யாணசுந்தரம் என்பதைச் சுருக்கி 'அகல்யா' என்ற புனைப்பெயரில் அவர் ஒரு கவிதை எழுதி அஞ்சலில் அனுப்ப அது அங்கு வந்து அதனுடன் சேர்ந்து வந்த மற்ற தபால்களையும் அவரே கொண்டுபோய் குருநாதரிடம் கொடுத்தார்.
 தனக்கு வந்த தபால்களுடன் சேர்ந்திருந்த உறையைப் பிரித்து குறிப்பிட்ட அந்த கவிதையைப் படித்துப்பார்த்த பாவேந்தர் மனம் மகிழ்ந்து மற்றவர்களிடம் காட்டி "யாரோ 'அகல்யா'ன்னு ஒரு பொண்ணு இந்தக் கவிதையை எழுதி அனுப்பியிருக்கு. நல்லாருக்கு. இதை இந்த வாரம் நம்ம 'குயில்' இதழ்ல பிரசுரிங்க" என்றார். அதற்கு அவர்கள்:-
 "ஐயா! அகல்யாங்குறது வேறு யாரும் இல்லேங்க. நம்ம கல்யாணசுந்தரந்தான். அ.கல்யாணசுந்தரம்கிற தன் பேரைச் சுருக்கி 'அகல்யா'ன்னு வச்சிக்கிட்டிருக்காரு" என்று கூறியதைக்கேட்டு, அப்பொழுதே அவர் தன் இளங்கவிஞரின் கைநாடியைப் பிடித்துப் பரிசோதித்துப் பார்த்ததுபோல, "இந்தக் கவிக்குயில் வருங்காலத்தில் மிக இனிமையாகக் கூவிப் புகழ் பெறும்" என்று சொல்லி வாயார வாழ்த்தினார். அதன் எதிரொலிதான் 'மகேஸ்வரி' படத்திற்கு அவரைப் பாட்டெழுதச் சொல்லி, உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தியது.
 'மகேஸ்வரி' வழங்கிய ஆசியுடன் மாடர்ன் தியேட்டர்ஸின் 'ஆரவல்லி' மற்றும் 'பாசவலை' ஆகிய படங்களுக்கும் கல்யாணசுந்தரம் பாடல்கள் புனையலானார்.
 அடங்காப்பிடாரிகளான ஆரவல்லி - சூரவல்லி சகோதிரிகளால் சிறையில் அடைக்கப்பட்ட ஆண் கைதிகள் கழுதையை வைத்துக்கொண்டு சிலேடையாகப் பாடுவதாக அவர் எழுதிய பல்லவி இது:-
"பழக்கமில்லாத கழுதைகிட்டே கொஞ்சம்
 பாத்துக் கறக்கணும் பாலை - அது
 பட்டுன்னு தூக்கிப்புடும் காலை - அப்போ
 பல்லு போகுமோ மூக்குப் போகுமோ சொல்லமுடியாது அதனால்" (பழக்கமில்லாத) 'பாசவலை' படத்தில் புகழ் பெற்ற அவருடைய வேதாந்த பாடல் வரிகள் இவை:-

 "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்; குள்ள நரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பாக்கப்போனா எட்டடிதான் சொந்தம்."
 இந்தத் தத்துவப்பாடலைக்கேட்டு அதிபர் டி.ஆர்.எஸ். மட்டுமல்ல, மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவின் அத்தனை பேரும் மயங்கி நம் கவிஞரைப் பாராட்டினர்.
 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டுப் புகழ்க்கொடி சேலத்தைத் தொடர்ந்து சென்னைப் பட உலகிலும் பறக்கத்தொடங்கியது. எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோரை வைத்துப் படம் தயாரிக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் கல்யாணசுந்தரத்தின் கால எழுச்சிப் பாடல்களுக்காகக் காத்திருந்தன.
அவருடைய பாடல்கள் எழுச்சி பெற்ற அந்தக் காலக்கட்டம் 1957, 1958-, 1959 ஆகிய மூன்றே மூன்று ஆண்டுகள் மட்டும்தான். அவருடைய பாடல்கள் எதுவுமே என்னால் மறக்க முடியாதவை!
 1957-ல் நான் துணை வசனகர்த்தாவாகப் பணிபுரிந்து ஜெமினிகணேசன், சாவித்திரி நடித்த 'சவுபாக்கியவதி'யில் கவிஞர் முதன் முதலாக ஒரு முழு படத்திற்குமான எல்லாப் பாடல்களையுமே எழுதுவதற்கு அதன் வசனகர்த்தாவான அமரர் ஏ.எல்.நாராயணனும், நானும் ஏற்பாடு செய்தோம்.
 'சவுபாக்கியவதி' படத்தைத்தொடர்ந்து அதுவரையில் பின்னணிப் பாடகராக மட்டுமே இருந்த என் இனிய நண்பர் ஏ.எம்.ராஜா முதன் முதலாக இசை அமைத்து ஸ்ரீதர் முதன் முதலாக இயக்கிய 'கல்யாணப்பரிசு' படத்தின் எல்லாப் பாடல்களையுமே கல்யாணசுந்தரம் அற்புதமாக எழுதித் தன் பாட்டுக்கோட்டைக்கு ஒரு பலமான அஸ்திவாரத்தைப் போட்டுக்கொண்டார்!
 இதைப்போல நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், 'நாட்டியப் பேரொளி' பத்மினியும் நடித்த ஜூபிடர் பிக்சர்ஸ் 'தங்கப்பதுமை' படத்தில் ஒரு சோகக்காட்சி: கண்கள் குத்தப்பட்டுக் குருடாக்கப்பட்ட தன் கணவனைக் கண்டு அவன் மனைவி கதறித் துடித்துக் கண்ணீர்ப் பெருக்கோடு கேட்கிறாள்:-
 "அத்தான்! இக்கொடிய தண்டனை பெறக்கூடிய அளவிற்கு அப்படி என்ன கொலைக்குற்றம் புரிந்துவிட்டீர்கள்?" அதற்கு அவன் கூறுகின்ற பதிலாக நம் கவிஞர் வடித்த கவிதைப் பாடலின் தொகையரா (கஜல்) இது:-
'ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான் - அவள்
 இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
 வாழத்தகுந்தவளை வாழாமல் செய்துவிட்டுப்
 பாழும் பரத்தையரால் பண்பதனைக் கொன்றவன் நான்,
 அந்தக் கொலைகளுக்கே ஆளாயிருந்து விட்டேன் இனி
 எந்தக் கொலை செய்தால்தான் என்னடி என் ஞானப்பெண்ணே'.

 திரைப்பட உலகில் பாடல் துறையில் அவர் ஆரம்பித்த அந்தத் 'தன்னாட்சி' மிகக் குறுகிய காலமான மூன்றே ஆண்டுகளில் முடிந்து போய்விட்டது. புகழின் உச்சாணிக் கொம்பைத் தாவிப் பிடித்த அவரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அக்கொம்பு தானும் முறிந்து அவரையும் தள்ளி வீழ்த்திவிட்டது.
 மூக்கின் உட்பகுதியில் தோன்றிய ஒரு சிறு கட்டியை (பரு) அகற்றுவதற்காக அதன் மீதே தவறாக ஊசி குத்தியதால் மூளை பாதிக்கப்பட்டு மூர்ச்சையாகி சொற்ப நேரத்திற்குள் அவரது விழிகளை மூடச் செய்துவிட்டது. வியப்பிற்குரிய வேகத்துடன் விறுவிறு என்று வளர்ந்து வந்த அந்த விந்தைமிகு கவிஞரின் விஷயத்தில் 'விதி' சற்று முந்திக்கொண்டு அவசர அவசரமாக அதன் வேலையை முடித்துக்கொண்டு விட்டது!
"கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி - மானே
 வளர்த்தவனே எடுத்துக்கொண்டான்டி"

 என்று 'தங்கப்பதுமை' படத்தில் அவர் பாடியது அவருக்கே பலித்துவிட்டது.
 கல்யாணசுந்தரம் 29 ஆண்டுகள் 5 மாதங்கள் 28 நாட்கள் மட்டுமே இந்த நற்றமிழ் மண்ணில் நடமாடினார். அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் ஒரு நூறு பாடலுக்குச் சமம். அப்படிப்பார்த்தால் 1957, 1958, 1959 ஆகிய மூன்று ஆண்டுகளில் அவர் பாடிய 200 பாடல்களும் இருபதாயிரம் பாடல் களுக்கு நிகரானவை ஆகும்.
 (மரணத்தை வென்ற கண்ணதாசன் - அடுத்த வாரம்).

பட்டுக்கோட்டையாரின் வருத்தம்
ஒருநாள், என் இதயங்கவர்ந்த கவிஞரிடம் இதைக்கேட்டேன்:-
 'ஏன் கவிஞரே? பாரதிதாசன்கிட்டே நீங்க என்ன செய்தீங்க? பழைய இலக்கண இலக்கியங்கள்ளாம் படிச்சிங்களா? அவர் கவிதைங்க சொல்லச் சொல்ல அதையெல்லாம் உங்கக் கைப்பட எழுதினீங்களா?'.
 இதற்கு அவர் சொன்ன பதில் இது:-
 'ஊகூம், அதெல்லாம் ஒண்ணுமில்லே. அவரு எழுதி வைக்குற காகிதங்கள்ளாம் காத்துல பறக்கும். அதை  எடுத்துச் சரியா அடுக்கி வைப்பேன். அப்பப்போ எனக்குத் தோண்றதை எழுதி அவர்கிட்டே காட்டுவேன். அதுல இருக்கிற தப்பையெல்லாம் திருத்துவாரு. எப்படி எழுதணும்? எப்படி எழுதக்கூடாதுன்னு எனக்குச் சொல்லிக்கொடுப்பாரு. அவ்வளவுதான்.
 எப்படியோ, பாட்டு எழுதுற அந்த முறையை முழுசா அவர்கிட்டேருந்து நான் கத்துக்கலேன்னாலும் முக்கால்வாசி தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கு முந்தியெல்லாம் சும்மா வாயாலேயே இஷ்டத்துக்குப் பாடிக்கிட்டிருந்த நான், அவர்கிட்டே போய் சேர்ந்தப்பறந்தான் அதைக் காகிதத்துல கவிதையா எழுத ஆரம்பிச்சேன்.
 அவர் மட்டும் என்னை சேலத்துக்குக் கூட்டிக்கிட்டுப்போயி, அங்கே அவருக்கு கோவம் வந்து, அவர் எழுதவேண்டிய 'மகேஸ்வரி' படப்பாட்டை என்னை எழுதச் சொல்லலேன்னா, இன்னும் ரெண்டு வருஷம் அவரோடயே இருந்து, நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டு இன்னும் நல்லா கவிதைங்க எழுதக் கத்துக்கிட்டு ஒரு முழுக்கவிஞனா ஆகியிருப்பேன். அதுக்குள்ளே எனக்கு சினிமா சான்ஸ் வந்திடுச்சு. அதான் தப்பா போயிடுச்சு. அதான் எனக்கு வருத்தமாயிருக்கு'.
 தவிட்டோடும், உமியோடும் தம்மிடம் வந்த கல்யாணசுந்தரம் என்னும் அந்த அரிசியை புரட்சிக் கவிஞர் புடைத்து, நேம்பிக்கல் பொறுக்கி, வேக வைத்துச் சோறாக ஆக்கி அவரைச் சமைத்தார். சரியாக அமைத்தார்!
 பட்டுக்கோட்டையின் வயல் வரப்பில் தானாக முளைத்த அந்தத் தமிழ்ச்செடிக்கு புதுச்சேரி பாவேந்தர் தண்ணீர் வார்த்து வளர்த்திடாவிடில் அந்த இட்டுக்கட்டிப்பாடல்கள் எல்லாம் சங்கம் படைத்தான் காட்டுச் செம்மண்ணில் கலந்து செத்து மடிந்து மக்கி மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கும்.
 அந்தக் குரு பக்தியினால்தான் கல்யாணசுந்தரம் எதை எழுதினாலும் அக்காகிதத்தின் உச்சியில் 'பாரதிதாசன் துணை' என்று எழுதினார்.

Wednesday, September 17, 2014

தமிழ்-தமிழர் பற்றி 17/9/14.

சும்மா கிடந்த சொல்லை எடுத்து -20
மனிதர் நிலை தெரிஞ்சுக்கோ ...
சு.பொ.அகத்தியலிங்கம்
“ எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? /பணத்தை எங்கே தேடுவேன்? / உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்? / உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்? / அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்? / எங்கே தேடுவேன்? / ..... /கருப்பு மார்க் கெட்டில் கலங்குகின்றாயோ? / கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? / கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ? /… / அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை / எங்கே தேடுவேன் பணத்தை /எங்கே தேடுவேன்? /....பூமிக்குள் புகுந்து புதையலானாயோ? /பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ? /சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?/ சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ? /..எங்கே தேடு வேன்? பணத்தை எங்கே தேடுவேன்? / திருப்பதி உண்டிய லில் சேர்ந்து விட்டாயோ? / திருவண்ணாமலை குகை புகுந் தாயோ? / இரும்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ? / இரக்க முள்ளவரிடம் இருக்காத பணந்தனை / எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்?/தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ? / தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ? / சுவற் றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ? / சூடஞ் சாம்பிராணி யாய்ப் புகைந்து போனாயோ? / எங்கேதேடுவேன் எங்கே தேடு வேன்? / பணத்தை எங்கே தேடுவேன்?/ உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே “ “பணம் ” (1952) திரைப்படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் தானே எழுதிப் பாடிய பாடல் இது .
கல்வி , மருத்துவ வியபாரி களிடம் சேர்ந்து விட்டாயோ ? நிலக் கொள்ளையர் மணல் கொள்ளையர்களிடம் சுருண்டு விட்டாயோ ! சுவிஸ் பேங்கில் புகுந்து விட்டாயோ என சேர்த்தால் இன்று இப்பாடல் முழுமையாகி விடுமே!அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் உடுமலை நாராயணகவி எழுதினார்.”தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் / காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன்செல்லாதடி / ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் / காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே “ இதே படத்தில் வரும் “ முட்டாப்பயலை எல்லாம் தாண்டவக்கோனே! காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே ! கட்டி அழும் போதும் தாண்டவக் கோனே ! / பணப்பெட்டி மீது கண் வையடா தாண்டவக்கோனே ” என்ற வரிகளை உச்சரிக்காத உதடுகளே இருக்கமுடியாது . “பாண்டித்தேவன்” ( 1958) திரைப்படத்தில் சூரியனை பார்த்துப் பாடுவதுபோல் ஒரு பாடல் பட்டுக்கோட்டை எழுதி யிருப்பார் . “ வா வா சூரியனே / மனிதர் நிலை தெரிஞ்சுக்கோ / வஞ்சகர் அதிகம் உண்டு / நோக்கம் பார்த்து நடந்துக்கோ ” சூரியனை இப்படி ஏன் எச்சரித்தார் தெரியுமா ? அடுத்து ஒரு சரணத்தில் விடை சொல்லுவார் , “ உலகத்தை நினைச்சாலே/ உடம்பு நடுங்குது / ஊரு கெட்ட கேட்டைப் பார்த்து / நீதி பதுங் குது/ உருவங்கள் மனிதர்கள் போல / ஓடி அலையுது / உள்ளத் திலே எண்ணமெல்லாம் / நஞ்சா விளையுது ” இப்படி சமூகச் சூழல் இருப்பதைக் கண்டு நொந்தவர்.மனம் வெந்தவர். மாற்று வர மார்க்கம் சொன்னவர் பட்டுக்கோட்டை.
திரைப்படத்துறையில் இலட்சிய நோக்கோடு பாடல்கள் புனைந்த காலமொன்றிருந்தது. பட்டுக்கோட்டை வாழ்ந்த காலத்தும் அதற்கு முன்பும் எனப்பார்த்தால் மதுரகவி பாஸ்கர தாஸ் , சந்தானகிருஷ்ணநாயுடு, பாபநாசம்சிவன் , பாபநாசம் ராஜகோபாலய்யர் , உடுமலை நாராயணகவி , ச.து.சு. யோகி , அ.மருதகாசி , கண்ணதாசன் எனப் பலர் திரையுலகில் கொடி கட்டிப்பறந்தனர் . பின்னர் வாலி, புலமைப்பித்தன் , கவி கா மு ஷெரிப், வைரமுத்து, ந. முத்துக்குமார் என தொடருது படை வரிசை. படத்தின் தேவை கருதி அரசியல் பாடல்களை கிட்டத்தட்ட எல்லோரும் எழுதியுள்ளனர். ஆயினும் பட்டுக் கோட்டையின் தனிச் சிறப்பென்ன ?
“மதுரகவி பாஸ்கரதாஸ் தேசியக்கோட்டைக்கு அதிபதி யாய்த் திகழ்ந்தார் .உடுமலை நாராயணகவி சுயமரியாதைக் கோட்டைக்கு அதிபதியாய்த் திகழ்ந்தார் . பட்டுக்கோட்டை ஒரு வரே இன்றுவரை பொதுவுடைமைக் கோட்டைக்கு அதிப தியாய்த் திகழ்கிறார் ” என்ற கே.ஜீவபாரதியின் கணிப்பு திரைத் துறையைப் பொறுத்தவரை மிகச்சரியே ! திரைத்துறைக்கு வெளியே பாடல்களைப் புனைந்த திருமூர்த்தி , பாவலர் வரதரா சன் ,தமிழ் ஒளி இன்று நம்மிடையே வாழும் இன்குலாப் , தணிகைச்செல் வன் , பரிணாமன் , நவகவி இன்னும் பலர் பட்டுக்கோட்டையின் தொடர்ச்சியும் நீட்சியுமாய் - அவரவருக்கே உரிய பலம் பலவீனத்தோடு திகழ்கிறார்கள் .பண்பாட்டுப் போரிலும் அரசியல் போரிலும் பாடல்களும் கவிதைகளும் கூர்மையான ஆயுதம் என உணரவேண்டும் . அவர்கள் பாடல்களை எங்கும் உரக்க இசைக்க வேண்டும் . இதனை ஆசையினால் சொல்ல வில்லை அனுபவமும் அதுவே !
“எனது முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் எவற்றால் ஆனவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களால் ஆனது!’’ - 1982-ம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வானொலிக்கு அளித்த பேட்டியின்போது, அவரது ஆழ்மனதில் இருந்து வந்த வார்த்தைகள் இவை.
அந்த பட்டுக்கோட்டை பொதுவுடைமைப் பிரச்சாரத்தை வலிந்து திணித்தவன் என இன்றும் சில இலக்கிய விமர்சனப் புலிகள் முனகிக்கொண்டிருப்பதுடன் அதனாலேயே அவரது கவித்துவ மேதமையை உரிய அங்கீகரிக்க மறுத்துவருகிறார்கள். ஆனால் மக்கள் அங்கீகாரம் என்றும் பட்டுக்கோட்டைக்கே . எம்ஜிஆரின் மேலே சொன்ன வாக்குமூலம் மட்டுமல்ல ; இன் றும் எம்ஜிஆர் என்கிற ஈர்ப்பு நீடிப்பதன் பின்னால் பட்டுக் கோட்டையின் பாடல் வரிகள் உண்டு .
கவிஞரின் பாடல்களில் பொதுவுடைமை கருத்துகள் இயல்பாய் விழுந்தது எப்படி ? அவரின் நண்பர் பி.ரத்தினம் பிள்ளை ஒரு பேட்டியில் (ஆதாரம் : காலமறிந்து கூவும் சேவல்) கூறுகிறார் , “ அவன் எந்தப் பாட்டு எழுதினாலும் எங்காவது ஒரு இடத்தில் பொதுவுடமக் கருத்தச் சொல்லிடுவான், ‘ இது எப்படியப்பா ஒன்னால முடியுது’ன்னு ஒரு தடவ அவங்கிட்ட கேட்டேன் . அதற்கு அவன் , ‘ அது என்ன அறியாமலே வந்திடுது.அதச் சொல்லாம இருக்க முடியல…’ன்னு சொல்லிச் சிரிச்சான் ”
ஆம், பொதுவுடைமைச் சிந்தனை அவன் இரத்தத் தோடும் நரம்போடும் பின்னிக்கிடந்தது .ஆகவேதான் பக்தி பாடல் எழுத நேர்ந்தபோதும் பாதை மாற வில்லை . மஹேஸ்வரி (1955 ) படத்தில் அம்மனைக் கும்பிடும் பாடல் . “ அறம் காத்த தேவியே! / குலம் காத்த தேவியே நல் / அறிவின் உருவமான ஜோதியே ..” என்றுதான் தொடங்குவான். இதில் எதை அறம் என்கிறான் - எதை அறிவு என்கிறான் - எதைகுலம் என்கிறான் என்பதுதான் முக்கியம் .” துன்பம் இல்லாமல் எல்லோரும் மனம் / ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம் ..” என்றும் ; “ மலிந்த கொடுமை நீக்கவே / இம் / மனித வாழ்வில்உயர்வு காணவே “ எனவும் “ ஏழைகளின் வாழ்வில் சுகம் தா” எனவும் தெளிவு படுத்துவான் . அறம் , அறிவு , குலம் அனைத்தும்இவ்வரிகளில் விளக்கமாகும்.
தோழர். எம். மாசிலாமணி பட்டுக்கோட்டை வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக இருந்தவர் . பட்டுக்கோட்டை யுடன் உரிமையோடு பழகியவர் . அவர் ஒரு பேட்டியில் கூறுவார். “ 1942 முதல் 1953 வரை இந்த மாவட்டத்தில் (ஒன்றாயிருந்த தஞ்சை மாவட்டத்தில்) நடந்த பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு 83 தோழர்கள் இறந்திருக்காங்க . அவர்களைப் பற்றி உழைக்கும் மக்கள் பாடுவதற்கு கும்மி , நாடோடிப் பாட்டு வடிவத்தில் பாட்டுகள் எழுதித் தரும்படி கவிஞரிடம் கூறினேன். அவரும் எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறினார் .1957 தேர்தல்ல கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலை வர்கள் தோற்றனர் . தோல்விக்கான காரணத்தை கவிஞர் என்னிடம் விவாதித்தார் . தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் நம்முடையகருத்துகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல இந்தத் தேர்தலைப்பயன்படுத்துவது பற்றியும் நமக்கிருக்கிற வாய்ப்பு வசதியில் இவ்வளவுதான் செய்ய முடிஞ்சதுன்னும் சொன்னேன்.“சரி ! சரி ! அடுத்த தேர்தலுக்கு நான் பிரச்சாரத்திற்கு வருகி றேன் டேப் அடிச்சு ஜனங்களைத் திரட்டி , நம்ம தோழர்களை ஜெயிக்க வைக்க முயற்சிக்கிறேன் .” என்றார் .அடுத்த எலெக்ஷன் வந்தது .ஆனால் , மக்கள் கவிஞர் திரும்பி வரமுடியாத இடத்துக்கு சென்றுவிட்டார்.” பட்டுக்கோட்டை நினைத்ததை முடிக்கும் முன்பு செத்துப் போனார். அவரது படைவரிசை அதைத் தொடரவேண்டாமா?
“ கோடிக்கால் பூதமடா தொழிலாளி
கோபத்தின் ரூபமடாநாடி எழுந்தது பார் குவலயம்
நாற்றிசையும் அதிர
தேடிய தேகம்ஒன்றே நடை நெஞ்சு
தீப்பொறிப் பார்வை ஒன்றே !
சாடிக் குதித்துமுன்னே முன்னேறித்
தாவியே செல்வதைப் பார் !” என வீறுமிகுகவிதை யாத்தார் ப.ஜீவானந்தம். பட்டுக் கோட்டையும் ஜீவாவைப் போலவே பாட்டாளி இயக்கம் மீதான நம்பிக்கையைப் பிரகடனப் படுத்தியவர். அதனை மேலும் பார்ப்போம்.

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 15 - 09 -2014

Wednesday, May 7, 2014

தமிழ்-தமிழர் பற்றி-7/5/14 *




கல்லணை

****************
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க க...
ாவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
********************************************************************************************
உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை....
********************************************************************************************
கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி

Tuesday, May 6, 2014

தமிழர் பற்றி,

பெரியவர் கோவை ஞானி அவர்களைத் தெரியாதவர் இருக்க முடியாது.அற்புதமான மார்க்ஸீயக் கோட்பாட்டாளர்,ஆசிரியர்,பத்திரிக்கை ஆசிரியர் என பன்முக ஆளுமைகள் கொண்ட நம் காலத்தின் சீரிய சிந்தனையாளர். அவரைப் புதிதாகச் சந்திக்கச் செல்கிற யாருக்கும் ஒருஆச்சரியம் காத்திருக்கும்.அவரைச் சுற்றிலும் அவரது இடுப்பு உயரத்திற்கு
புத்த்கங்களாக அறை முழுவதும் நிறைந்திருக்கும் , இவை சுவரின் அலமாரிகளில் இடம் கிடைக்காத புத்தகங்கள். இதற்குஇடையில்தான் அவர் நடமாட்டமெல்லாம். பார்வை பறிபோன பின்னால்க் கூட நண்பர்களின்... உதவியோடு அவர் படித்ததும் எழுதியதும் ஏகப்பட்டவை. சுமார் 4000த்திற்கும் அதிகமான புத்தகஙகள் அவரது சேகரிப்பில் உள்ளன. சகோதரி முனைவர் மீனாகுமாரி, என்னிடம் சொன்னார்,”ஞானி என்கிற மகா காவியத்தின் பக்கங்கள் தன் கடைசிக் காண்டங்களில் படபடத்துக் கொண்டிருக்கிறது,அவரது சேகரிப்பில் உள்ள அபூர்வமான புத்தகங்களின் மதிப்பு பல லட்சங்கள் பெறும், அதனை தனிநபர்களோ,பெரிய தனியார், அரசு பல்கலைக் கழகங்களோ வாங்கிக் கொள்ளுமானால் அவருக்குப் பேருதவியாக இருக்கும்” என்று. இந்த அரிய பணியை முன்னெடுக்க யாராவது உதவுங்களேன்.

See More

Sunday, May 4, 2014

தமிழ்- பற்றி -4-5-14


நம்மில் பலருக்கு தமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் இதற்காக தமிழ் டைபிங் கற்றுக்கொள்ள தேவையில்லை.
இணையத்தில் எங்கிருந்தாலு...
ம் தமிழ் மொழியில் தட்டச்சு செய்வதை Google Input Tool எளிதாக்குகிறது.
Google Input Tool download link
http://www.google.co.in/inputtools/windows/
Google Input Tool ய் பயன்படுத்தும் விதம் பற்றிய பயனுள்ள காணொளி தமிழில்.
காணோளியை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Friday, February 21, 2014

தமிழ் பற்றி,

தமிழை நினைக்காதவன் தமிழனா ?

தமிழை நாளும் சிதைக்கின்றனர் ஊடகத்தில்
தமிழை நினைக்காதவன் தமிழனா ? சிந்திப்பாய் !
...

தமிழின் பெருமை தரணி அறிந்துள்ளது !
தமிழின் அருமை தமிழன் அறியவில்லை !

பேசும் சொற்களில் பெரும்பகுதி ஆங்கிலம் !
பேச்சில் நல்ல தமிழ் காணமல் போனது !

இந்நிலை இப்படியே தொடர்ந்தால் நம் !
இனிய தமிழின் நிலை என்னாகும் சிந்திப்பீர் !

உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும் !
உயர்மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் !

நல்ல தமிழ் பேசினால் கேலி பேசாதீர்கள் !
நல்ல தமிழ் பேசி அனைவரும் முயலுங்கள் !

ஆடு மாடு உலக உயிரினங்கள் யாவும் !
அம்மா என்று அழகு தமிழில் ஒலிக்கின்றன !

தமிழன் மட்டும்தான் தாய்மொழி தமிழ் மறந்து !
தமிங்கிலம் பேசித் தமிழை சிதைக்கின்றான் !

மம்மி என்றால் செத்தப்பிணம் என்று பொருள் 1
மம்மி என்று அழைப்பது மடமை உணர்ந்திடு !

அப்பா என்று அழைப்பது தான் அன்பு !
டாடி என்பது தமிழ் அல்ல நீ நம்பு !

பெரியப்பா சித்தப்பா மாமா என்று !
பெரிய பட்டியலே உறவுச்சொற்கள் உண்டு !

பெரிய ஆங்கிலத்தில் அங்கிள் என்ற !
பதத்தில் ஒற்றைச் சொல் மட்டுமே உண்டு !

பெரியம்மா சின்னம்மா அத்தை அண்ணி என்று !
பெரிய பட்டியலே உறவுச்சொற்கள் உண்டு !

உலக மொழி என்று சொல்லும் ஆங்கிலத்தில்
ஒற்றைச் சொல் ஆண்ட்டி மட்டுமே உண்டு !

அகிலம் முழுவதும் ஒலிக்கும் மொழி தமிழ் !
ஆங்கிலேயரும் புகழும் மொழி தமிழ் !

முப்பாலை உலகிற்கு தந்த மொழி தமிழ் !
முத்தமிழை உலகிற்கு தந்த மொழி தமிழ் !

தாயை மறந்தாலும் தமிழை மறக்காதீர் !
தாயினும் உயர்ந்தது தமிழ் உணர்வீர் !

- கவிஞர் இரா .இரவி