Showing posts with label பனை(யை) நினை. Show all posts
Showing posts with label பனை(யை) நினை. Show all posts

Sunday, August 11, 2019

பனை(யை) நினை


பனை
...............
வரப்போரம் மலைபோலே
வரிசையாக நிமிர்ந்திருக்கு,
கருப்பசாமி போலத்தானே
வயல்காட்டில் காவலிருக்கு.
பரமனுக்கும் பனையிதற்கும்
ஏதோவொரு தொடர்பிருக்கு,
நுங்கினுள்ளே முக்கண்ணும்
அவனைப்போலே படர்ந்திருக்கு.
பிரம்மனவன் கரங்களிலே
ஓலைச்சுவடி தானிருக்கு,
வருங்காலத்தை நிர்ணயிக்க
அதில்தானே குறிப்பிருக்கு.
தூரத்தினில் பார்க்கும்போது
தும்பிக்கையைப் போலிருக்கு,
வேழமதன் கரியநிறமும்
இயல்பாகவே ஒத்துயிருக்கு.
மரபுத்தமிழின் சாரமெல்லாம்
பனையோலையே தாங்கியிருக்கு,
பலகாலங்கள் கடந்தபோதும்
இளமையுடனே தங்கியிருக்கு.
ம.கமலக்கண்ணன்.

Monday, September 15, 2014

பனை(யை) நினை 15/9/14.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
''''பனையை அழித்தோம் வினையை அறுவடை செய்கிறோம் ''
இயற்கையின் பொக்கிஷம் பனை மரம்.
பனையில் இருந்து நுங்கு.கிழங்கு பனங் கல்கண்டு பனங்கள்ளு மற்றும் பனை ஓலை என்று மிகவ...
ும் பயனளித்து வந்ததை நாமும் அழித்தோம் இயற்கையும் எஞ்சியுள்ள மரங்களை மழை தவிர்த்து நானே அழித்து விடுகிறேன் என்று தன் பங்குக்கு அழித்து வருகிறது..
எப்போது திரும்பும் நம் கிராமத்து வாழ்வு.அப்போது தான் மகிழ்ச்சி.
நோயின்றி வாழ இயற்கையைப் பாதுகாப்போம்.
''நன்மையில் முழு பங்கு வகிக்கும் நுங்கு'' பனை வழங்கும் அறிய பொருள் நுங்கு குறித்து பார்ப்போம்.
இயற்கையின் அருட்கொடை
பனையை அழித்தும் விட்டோம் அழிந்தும் வருகிறது.அவை அளித்த நன்மைகளை நாம் மறக்க முடியுமா?

‘வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. பனை-வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்-படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசி-யையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு & இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
நுங்கில் ‘ஆந்த்யூசைன்’ என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

Wednesday, June 11, 2014

பனை(யை) நினை 11/6/14.

தமிழக அரசு சின்னங்களில் மாநில மரமாக இடம்பெற்றிருக்கும் பனை மரம் அழிவின் விளிம்பில் பாதுகாக்கப்படுமா?
































அழிவின் விளிம்பில் நிற்கும் பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா?
======================================================
தமிழக அரசு சின்னங்களில் மாநில மரமாக இடம்பெற்றிர...ுக்கும் பனை மரம் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக வெட்டப்பட்டு அழிவின் விளிம்பினை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.
மாநில அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், மாநில மலர் செங்காந்தள், மாநில பறவை மரகதப் புறா, மாநில விலங்கு வரையாடு, மாநில விளையாட்டு சடுகுடு, மாநில நாள்காட்டி திருவள்ளுவர் ஆண்டு, மாநிலத் திருநாள் தைப் பொங்கல் போன்ற மாநில சின்னங்களின் வரிசையில் மாநில மரமாக இருப்பது பனைமரம்.
மக்களின் இயல்பு நிலையை பனை, தென்னை, வாழை என்று 3 மரங்களின் இயல்புடன் ஒப்பிட்டு, திரைப் பாடல் ஒன்று விளக்குகிறது. எந்தவிதப் பயனையும் பெறாமல் பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள் பனை மரத்துக்கு ஒப்பானவர்கள் என விளக்கும் வகையில் உயர்ந்த இடத்தைப் பெற்றது பனை மரம்.
கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 10 கோடி மரங்களும், தமிழகத்தில் சுமார் 5 கோடியும் இதில் தென் மாவட்டங்களில் மட்டும் 50 சதவீதம் உள்ளது. ஓராண்டில் ஒரு மரம் 150 லிட்டர் பதனீர், 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் வழங்குகிறது. இதேபோல் ஒரு மரம் 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்களைத் தருவதாகக் கணக்கிட்டுள்ளது.
1985- 86ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் 6.94 லட்சம் பேருக்கும், மாநில அளவில் 5.87 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பினை வழங்கியது. இதில் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் அடங்குவதாக வாரியக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இத்தகைய சிறப்புடைய பனையின் நிலை குறித்து சிவகங்கை சிவப்பு நட்சத்திர மக்கள் இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாவட்டச் செயலர் எல். ஆதிமூலம் கூறியதாவது:
பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
கார்த்திகைத் திருநாளில் ஆண் பனையிலிருந்து பாலைகளை வெட்டி குழி தோண்டி தீ வைத்து மூட்டம் போட்டு கரியாக எடுத்து உரலில் இடித்து துணிப்பையில் வைத்து மாவலி சுற்றுவது இளைஞர்களின் வழக்கமாகும். பனை ஓலை குருத்துகளைப் பிரித்தெடுத்து, பகலில் வெயிலிலும், இரவில் பனியிலும் பதப்படுத்தும் முன்பாக ஓலையின் நடுப்பகுதியில் உள்ள ஈக்கியுடன் ஓலையைப் பிரித்தெடுத்தும் ஈக்கியில்லாத ஓலையைத் தனியாக பிரித்து எடுத்து நுட்பமாகப் பயன்படுத்தி உள்ளனர்.
அரைப்படி முதல் 5 படி வரை கொள்ளவு கொண்டவை கொட்டான்கள் எனவும், 7 படியிலிருந்து 11 படி வரை கொள்ளளவு உள்ள பெட்டி வகைகள் சீர்வரிசைப் பெட்டிகள் எனவும், 20 படியிலிருந்து 30 படிகள் வரை கொள்ளளவு கொண்ட நார்பெட்டிகள் அரைப்பெட்டிகள் என்றும், 5 மரக்கால் அளவுள்ள பெரிய நேர்த்தியான நார்பெட்டிகள் கடகம் என்றும், நெல் இதர தானியங்களை காற்றில் தூற்றி தரம் பிரிக்கப் பயன்படுத்துபவை தூற்றுப் பெட்டிகள் என்றும், தானியங்களை புடைத்து எடுக்க சொழகு அல்லது முறம் என்றும் சரக்குகளை கட்டி அனுப்ப பனைப் பாய்கள் என அழைத்து அதனைப் பயன்படுத்தி வந்தனர். இதைத் தவிர, மட்டையிலிருந்து நார் எடுத்து மெத்தைகள், பிரஷ்கள், ஆடைகள், கால்மிதிகள், வீட்டு அழகு சாதனப் பொருள்களும் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பதனீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் விருத்தியாகும், நோய் உண்டாக்கும் கிருமி தொற்றுகளைத் தடுக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
பனை விவசாய அழிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சொந்த மரமில்லாததால் பனைமரம் ஏறியவர்கள் வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர். சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பூமியின் வறட்சி காரணமாகவும், சீமைக் கருவேல் மரங்களின் எல்லையில்லா வளர்ச்சி காரணமாக பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பனைமரங்கள் வெட்டப்பட்டு, செங்கல் சூளைக்கு எரிபொருளாக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன என்றார்.
திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்
கொள்வர் பயன் தெரிவார் -என்ற குறளின்படி எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி மனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும். பனையின் பயனைப் பெற புதிய வழிகளை உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் அடையாளமாக உள்ள பனை மரத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.
ஆர்வலர்களின் விருப்பம் நிறைவேறுமா?

Sunday, June 1, 2014

பனை(யை) நினை *

நினையாப்  பனையால்  பீரங்கி !
---------------------------
எதிர் நீச்சல் போட்டும்
கோடுபோல்  உயர்ந்து வரும்
நாடார் குல
வீரரே வணக்கம் !

ஆளவும் வாழவும்
பன்முகத் திறன் கொண்ட
மூத்த குடி தோன்றி
மண்ணு லகாண்ட
மா மனித வர்க்கமே

சதி  யென்ற
விதி கொண்டு
பனங் காட்டில் ஒடுக்கி
ஒருமுக மாக்கப் பட்டுக் கிடந்த
ஒரு காலமுண்டு

சந்தித்த இன்னல்
சரித்திர இருட் டடிப்பு
உரிமை மறுப்பு

ஊதிய  மில்லா உழைப்பு
எனும் பட்டியல்......
நீண்டு....கொண்டே...போம்

கும்மிருட்டில் ஓளிர்
மின்னலாய்
வீர நாடார்
வரலாற்று
நற்சாட்சி
இதோ...

குமரி மாவட்ட
குளச்சல் துறை முகத்தில்
எழுந்துள தூண்
போர்ச் சின்னம்

அது நாடார் கு
வீரத்தின் மதி நுட்பத்தின்
குறி ஈடு !

வல்லவனுக்குப் புல்லும்
ஆயுதம் என்ற நிரூபணம் !

ஆனாலும்
ஏட்டில் எழுதவில்லை
பாட்டில் வடிக்க வில்லை
வலைத் தளங்கள்
பதவி படைத்தவரைத்தான்
முன் மொழிகிறது !
இன்று
ஓர் ஆய்வாளரின்
ஒற்றைக் குரலாய்
ஒலிக்கிறது

அந்த வெற்றிகள்
வந்த பின்புலத்தில் இருப்பவர்
நாடார்கள்-ஆம்
நாடார்கள் மட்டுமே !

அன்றும் உண்டு
ஆட்சி யாளரிடம்
ஒரு படை
முழுதும்
நாடார் படை
திடீர் எதிரி
அரபிக் கடலில்
அலை மோதின
போர்க் கப்பல்கள்
காலாட் படை
குதிரைப் படை
பீரங்கிப் படை

அனைத்தும் மேனாட்டுப் படை
விஞ்ஞான உச்சத்தின்
வெடி மருந்து
பீரங்கிப் படை

பயிற்சி பெற்ற வீரர்
நிச்சயிக்கப் பட்ட வெற்றிக் களிப்பில்
டச்சுப் படை

அச்ச மூட்டும்
உச்ச கர்ச்சனை !

வில்லும் கல்லும்
மல்லும் கம்புமே
கையிலே கொண்ட
மன்னர் படை .
களமிறங்கும்  தளபதி
ஆழாமாய் யோசித்தார் யோசித்தார்.........
யோசித்தார் நாட்களாக
பிறந்தது  வழி !

படை எண்ணிக்கையைக்
கூட்டிவிட முடி வெடுத்தார்
திரண்டது  திடீர்ப் படை
நெல்லையின் தென் எல்லை
நாடார்கள்
துணை வந்தார்கள் !

பீரங்கி பாரெங்குமே
கிளப்பியது
அதிர் வலைகள்

புதிய கண்டு பிடிப்பு
வெடி மருந்தும்
பீரங்கியும்
நாடுகள்  வீழ்ந்தது
காலனி ஆதிக்கத்துள்.

வெட்டிப் போட்ட
வடலி  போல் கிடந்தது
கப்பல் தளத்தில் பீரங்கி !

மன்னர் படையாம்
நாடார் மூளை
உண்டாக்கியது பீரங்கி
அதுவோ
மனை மரத்தால் !

பனையை வெட்டி
குடைந்து சோற்றை  நீக்கி
கல்லும் வெடி மருந்தும்
திணித்து
கொளுத்தினார்
தென்னவர்

எதிரி எண்ணத்தில்
மண்ணைப் போட்டது
பனைப் பீரங்கி !

உச்சி வெயில்
கொதி மணல்
படை குவிந்தது
பனை ஓலை விரிப்பில் களம்
தண்ணீர் கொட்டியதில்
சொட்டியது ஓலை
தணிந்தது சூடு !

புதிய களம்
ஆயுதம் பயிலா
முகப்பு வீரர்
மோத வந்தார் !

உடை இல்லை
வீர
நடை இல்லை
படைப் பாங்கே இல்லை !

டச்சுக்காரனுக்கு
வராதா சிரிப்பு ?

எவனுக்குத் தெரியும்
கச்சை கட்டிய
நாடார் படை பலம் ?
கல் உடைப்பு
வெடி மருந்து
மரம் வெட்டு
தச்சுப் பணியெல்லாம்
தேர்ந்தவர் நாடார் அன்றே

பனைக்கும் தரைக்கும் தானே
உலகோர் கண்கள்
கண்டது !

போர்க்கலை
பயிர்த் தொழில்
வீடு கட்டல்
கல்வி ஆட்சி
பன்முகத் திறனில்
நாடார் நாடார் .நாடார்
எங்கும் நிறைந்திருந்த
காலமுண்டு .

பனையால் பீரங்கி
வேறு எவன் சிந்தையில் வரும் ?
அனல் கக்கும்
அச் சம்பவ ஆண்டு  1741
மாதமோ ஜீலை
தேதி 31.
மன்னர்
மார்த்தாண்ட வர்மா
சண்டை

டச்சுப் படைக்கும்
திருவிதாங்கூர் படைக்கும்.
குளச்சல் துறைமுகம்
உச்சி வெயில்
மத்தியான வேளை
கொதி மணல்.

டச்சுத் தளபதி டிலனாய்
அரசு படை நாடர்
சண்டை காரணம்
படையோடு டச்சுக்காரன்
டிலனாய் தூதுவனாய்

அரசு தரப்பில்
அனந்த பத்ம நாப நாடர்

டச்சுக் காரன்
கேட்டதுங் கேட்டான்
கேட்கக் கூடா ததையெல்லாம்
கேட்டுவிட்டான் .

வாசனைத் திரவியம்
வாங்க வந்தவன்
வய்ச் சொல்லே
நாற்றமாய்ப் போச்சு !

அவன் போட்டியாளர்
ஆங்கிலேயர்
பிரஞ்சுக்காரர்  கப்பல்கள்
நங்கூரமிட
குளச்சலில் அனுமதிக்கக் கூடாது
கட்டளை தொக்கிய வேண்டுகோள்

எலம் கிராம்பு
அவன் கேட்ட
விலைக்கே
கொடுக்க வேண்டும்

மறுத்தால்
நவீனம் பயின்ற
படை உண்டு

விஞ்ஞான உச்சத்தில்
பீரங்கி உண்டு
படைக் கப்பல்
கடற் பரப்பெல்லாம்
மார் தட்டினான் டிலனாய் !

தன்னுயிர் கொடுத்தும்
அன்னை மண் காக்கும்
அனந்த பத்ம நாப நாடார்
கொதித் தொழுந்தார் !

கல்லும் வில்லுமே
கையிருப்பாய் இருந்தாலும்
யுத்தத்திற்கே  துணிந்து விட்டார் .

மார்த்தாண்ட மன்னர் படைக்கு
குமார மார்த்தாண்ட நாடார்
தலைமை ஏற்றார்
போர் தந்திரம்
வியுகம்
அனைத்திற்கும்
அந்த பத்ம நாப நாடார்.

நாடார்களின் மூளை
குவியங் கொண்டது
கருத்துக்கள் உதய  மாகிடிச்சு
அபாயச் செய்தி
பறந்தது
நெல்லை எல்லைக்கு
காயாமொழி  தண்டப்பத்து
கொம்மடிக் கோட்டை
குட்டம் கொற்கை
உடன் குடி திசையன்விளை
சாத்தான் குளம்
களக்காடு ஏர்வாடி ஊர்
மட்டுமா ?

இடைப்பட்ட சிற்றூர் களிலும்
திரண்டது  திடீர்ப் படை
ஜயாயிரம் சான்றோர்
மலைக்குட்டி நாடார்
தலைமையில் !

கருக்கோடு வரவில்லை
வாலிப
முறுக்கோடு வந்தார்கள்

மூண்டது போர்
நாடார்களின்
போராற்றலின்
பேராற்றல் பிறந்தது
தளபதி வீரம்
படை வலிமை
கண்திறக்கு முன்னே
சுக்கு நூறாகி
புற முது கிட்டது
டச்சுப்படை !

உலகமே கண்டு கேட்டிராத
திடீர் பீரங்கிப் படை
பனை தந்த
பயன் ஆயுதப் படை!

எதிர் பாராத டச்சுக்கள்
கை நடுங்கி
கால் நடுங்கி
389 துப்பாக்கிகள்
வீரர் பலர்
தளபதி டிலனாயை
விட்டு விட்டு ஒளிந்தனர்.

இரக்கம் பரிவு
தோற்றவரிடமும் காட்டிய
நாடார் பண்பு

சரண்டைந்த டிலனாய்
சாகும் வரையில்
திருவிதாங்கூர் படையின்
உயர் பதவியில் !

குமரி புலியுர் குறிச்சி
உதயகிரிக் கோட்டைக்குள்
டிலனாய் சமாதி இன்றும் .

மூன்று நாடார்களின்
தலைமையில்
மூண்ட போர்
வெற்றித் திலகமிட்ட
வீரர் குலம் வாழ்க !
விவேக இனம் வாழ்க !
வழி வழி என்றென்றும் வாழ்க !