- உலகமும் துயரமும்
- மீண்டும் மீண்டும் சுனாமி ஊழல்
- ஆண்டுக் காண்டு தீவிர வாதம்
- நீண்ட நாளாய் வீழ்ந்துபோய் பணமே
Showing posts with label இயற்கையும் செயற்கையும். Show all posts
Showing posts with label இயற்கையும் செயற்கையும். Show all posts
Monday, March 28, 2011
இயற்கையும் செயற்கையும் -12
Sunday, March 27, 2011
இயற்கையும் செயற்கையும் 11
- நாட்டில் நாட்டம்
- மலைவிழுங்கி ஊழல்விஞ் ஞானிகளை மீறீயே
- தலைதூக்கும் தனமானங் காக்குதே மன்னேற்றம்
- அலையலை ஊழலிலும் எழுந்துதாடே நடக்குதே .
இயற்கையும் செயற்கையும்10
- கண்திறக்கும் பண்பகம்
- அறிவும் உழைப்பும் செல்வமாய் மாறியதால்
- அறிவைப் பெருக்க கலாசாலுகள் குவியுதே
- பெரிய சிறிய தடையையும் உடையுதே .
இயற்கையும் செயற்கையும் 9
- தேவையும் தேடலும்
- விஞ்ஞான வேகத்துக்கும் இயற்கையின் சீற்றத்தும்
- மெஞ்ஞானம் பெற்று ஈடுகொடுக்க வேண்டுவது
- மிஞ்சிய விஞ்ஞானந் தேடுது மனங்களே .
இயற்கையும் செயற்கையும் -8.
- மனமாற்றி வியாபாரம்
- கலக்காய் வியாபா ரத்துக் காக
- விலைபோகும் மனிதமனம் பத்தாண்டுக் கொருவித
- நிலைப்பா டாக மாற்றப் படுகிறதே.
இயற்கையும் செயற்கையும் -7.
- பேரிடரை எதிர்கொண்டு
- சுனாமி தீவிரவா தத்தில் மனிதகுலம்
- வினாவும் விடையும் கண்டுகொண் டிருக்குது
- இணைந்த ஐக்கியத் துணையோடு உலகமே .
இயற்கையும் செயற்கையும் -6.
- சுற்றுலா
- நீரிலும் நிலத்திலும் ஓடுது பேருந்து
- ஊர்சுற்று கூட்டமாய் உலகிலுள்ள மக்களெல்லாம்
- ஏறித்தான் சுற்றுலா ? வீரிட்டுப் பாயுது .
இயற்கையும் செயற்கையும் -5.
- மனம்
- அடுத்தவன் உயர்வதை கெடுப்பது வயிற்றெரிச்சல்
- எடுத்ததை முடிப்பது திடமன கடமையே
- கேடுநினைத் தவன்கெடுவது தடுப்பது கடினமே.
Saturday, March 26, 2011
இயற்கையும் செயற்கையும் -4.
- இனக்கவர்ச்சி
- (ஆசிரியத்தாழிசை)
- பாலியலும் தோலியலும் நாலா பக்கமுமே
- வேலியும் தாண்டலும் வேட்கையில் மூழ்குதே
- மலிவான மனிதமும் வீழ்ந்துதான் போகுதே!
இயற்கையும் செயற்கையும். -3.
- நாகரீகம்
- (ஆசிரியத் தாழிசை)
- அன்றுஅது ஆற்றங் கரைச்சுயமாய் வளர்ந்த்து
- இன்றுஅது தொழிற்சா லையைச் சுற்றியே
- தனைஇழந்து வளருது பன்னாட்டு நாகரீகமே.
Thursday, March 24, 2011
இயற்கையும் செயற்கையும்.2
- வசந்தச் சேர்க்கை.
- செயற்கை வசந்தம் சிரித்துக் கிடக்குது
- பெயரும் புகழும் குவித்து
- உயர்ந்த தலைவர் தோட்ட வீட்டிலே!
இயற்கையும் செயற்கையும் .1
- ஆண்டுக்கொரு வசந்தம்
- மழையில் குளித்து மரங்கள் துளிர்த்து
- குலைகளாய்ப் பூத்துப் பழுத்து
- அழகாடை யணிந்த வசந்த பூமியே
Subscribe to:
Posts (Atom)