Showing posts with label இயேசு பிறப்பு. Show all posts
Showing posts with label இயேசு பிறப்பு. Show all posts

Monday, December 24, 2018

இயேசு பிறப்பு

              இயோசு  பிறப்பு  இன்று

பெத்தலை  ஓரத்தில்--பத்திரம்
சத்திரத்  தொழுவத்தில்
மரியின்  வயிற்றில்
நெறியின்  பயத்தில்
பாலன்  பிறந்தார்--இயேசு
பாலன்  பிறந்தார்
இரவின்  நடுவில்
இறைமுன்  உரைபோல்

இத்தரை  மீட்பன்--இயேசு
ரத்தத்திறன்  சுத்தப்பரன்
தந்நிலை  தாழ்த்தினும்
முந்நிலை  ரட்சகன்
புல்லணைப்  படுக்கை--பழந்துணி
மெல்லுடல்  உடுக்கை
உன்னத  மைந்தன்
மண்ணக  வேந்தன்

உறவுச்  சிறகால்--உலகை
வருடும் பரவசம் !
ஊருலகம்  கைகுலுக்கும்
உற்சாகத்  திருநாள்
இயேசுஅலை  வீசுநிலை--இந்நாள்
பேசிக்  களித்து
ஈரா  யிரம்மேல்
வேரோடும்  நூற்றாண்டுகள் !

Saturday, December 24, 2016

இயேசு பிறப்பு (24-12-2016) *

   இயேசு பிறப்பு
   -------------------
பெத்தலைப்  புத்திரன்
    இத்தரை  ரட்சகன்
பெற்றவள்  உத்தமி
    பிறந்தவர்  இயேசு !


நித்திரை  ராத்திரி
    சத்தமில்லை  கத்தவில்லை
ஒத்தைமரி  சித்தத்தில
    பெத்தெடுத்த  வித்தகன்


ஏழ்மையும்  தாழ்மையும்
    ஆளுமை  கொள்ளிடம்
வாழிடமோ  மாட்டுத்தொழுவம்
    புல்லணையே  அரியணை !


மத்திதரைக்  கடலோரம்
    மந்தைமேய்ப்பர்  தூக்கநோரம்
சத்தியஒளி  நின்றிறங்க
    கண்டமேய்ப்பர்  நடுநடுங்க


நற்செய்தி  பயப்படாதீர்
    பிறந்தகதை  சிறந்தகதை
சொற்பொழிய  இறங்குது
    வாழ்த்தும்  கீதமும் !
 

Friday, January 1, 2016

இயேசு பிறப்பு

         பிறப்பும்  2016  சிறப்பும்
            ------------------------
வெள்ளைத்  தாளாய்  மெள்ள  எழுந்தாலும்
             சுழல்வது  கால ஓட்டம்
புள்ளிப்  பொட்டாய்  கிள்ளிப்  பதிந்தாலுமந
             முழுமுதல்  வரலாராம்


நள்ளிரவில்  வெள்ளிமின்னல்  கீழ்வானில்  வால்நட்சத்திரம்
             முதலாம்  நற்செய்தி
வாழ்வளிக்கும்  ஆளுமைக்கு  ஒளியூட்டி  வழிகாட்டி
              அடையாளம்  நாட்செய்தி


ஈராயிரம்  அண்டுகள்முன்  ஊருலகம்  உறங்கையில்
             பாருலகை  உயர்விக்கும்
பேராத  பாறைகளை  புரட்டிப்போட்டு  வாழவைக்கும்
              பேராற்றல்  பாதம்பதித்தநாள்


உருண்டது  பருவம்  திரண்டது  வருடம்
             நிறைவும்  பிறப்பும்இன்றாம்
வருவது  புதுயுகம்  தருவதும்  பெருமைபெறும்
             ஈராயிரத்துப்  பதினாறாம் !


துளிரும்  தளிரும்  வளர்ந்து  எழுந்து
             வசந்தம்  அசைந்தாடும்
பொழியும்  பனியும்,  நுழையும்  தென்றலும்
             குழுமிச்  செழிப்பாக்கும்


கிமூகிபி  பிறந்தநாள்  கவலைதொல்லை  மறந்தநாள்
             சுபிட்சம்  மலர்ந்தநாள்
சமூக  மாற்றத்துச்  சிந்தைகள்  பிறந்தநாள்
             மறுமலர்ச்சி  கண்டநாள்


பொதுவுடைமை  முதல்வடிவம்  வரைந்து  விரைந்து
             ஒருமனம்  தந்தநாள்
எதுவந்தாலும்  எல்லோற்கும்  சம்மெனும்  சமநிலைக்கு
             எண்ணம்  இசைந்தநாள்


இறுதிக்  காலம்  உறுதி  கொள்வோம்
             மண்ணில்  எண்ணம்
சிறப்பது  அன்பு,  சேர்ப்போம்  கைகளை
             மனிதமேன்மை  காண்போம் !

Sunday, December 13, 2015

இயேசு பிறப்பு

நாள்உறங்க ஆள்உறங்க நடுஇரவில் இயேசுபிறந்தார்
             தோள்கொடுக்க துணைநிற்க தேவதூதர் வந்தார்
ஆள்பிடிக்க செய்திகொடுக்க காட்டுமந்தை ஓட்டம்வந்தார்
             ஓளிமின்னல் விழிதிறக்க நடுங்கிஎழுந்தார் ஆடுமேய்ப்பர்


பயப்படாதீர் யாவரும்மகிழ நவமாய் நற்செய்தி
             தாவீதூரில் இயேசுரட்சகர் இன்றுபிறந்தார் வந்தசெய்தி
உயர்ந்தபிள்ளை பிறந்துவிட்டது தாழ்மையின் எல்லையொட்டி
             கந்தையில்சுற்றி முன்னணையில் பிள்ளையாம் தூதர்வாயாலே


வானசபை அங்கேகூடிற்று ஞானப்பா பொங்கிப்பாடிற்று
             உன்னத்த்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும்
வானைநேக்கும் பூமியிலே சமாதானமும் என்றென்றும்
            மனிதர்மேல் பிரியமும் உண்டாகி மகிழ்வதாக


பெத்தலையில் பிறந்த கந்தலிலே கிடந்த
             பாலனையுங் காண மோய்ப்பர்கூடி நடக்க
அத்தனையும் உண்மை கண்டுணர்ந்த மேய்ப்பர்
             இயேசுவையும் மரியா யோசேப்பையும் கண்டார்


கேட்டதுகண்டதை நாட்டுக்குச் சொல்லிச்சொல்லி மகிழ
            கேட்டவர்களும் மூக்கில் விரல்வைத்துப் புகழ
கேட்டவர்களும் கண்டவர்களும் நம்பிக்கைஓளியில் நனைய
             துதித்துமகிழ்ந்து கொடுத்தார் சுடசச்சுட நற்செய்தி !

Tuesday, December 24, 2013

இயேசு பிறப்பு


இயேசு பிறப்பு 2014
-----------------
ஈராயிரத்து பதிநான்கு
ஆண்டுகளுக்கு முந்நாள்
மார்கழிப் பனி
நள்ளி ரவில்

ஆதி பாவ பாரம் போக்க
மீதி மக்களுக்கு
மீட்பராய்ப் பிறந்தார்
மனுக் குலத்தில்
இயேசு !

அன்று இசைத்த இசை ஒளி
இன்றும் மீள் இசைப்பில்
மக்கள்/

பூமியில் சமாதானம்
மனிதர்மேல் பிரியம்
தன்னைப்போல்  பிறரை நேசிக்க
மனித நேயம் கைகுலுக்க

இயேசு பறிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Monday, December 24, 2012

இயேசு பிறப்பு 5 *

பிறந்தார் இயேசு இன்று !
----------------------------------------
அன்பு சுமந்த
இயேசு பிறந்த
இன்ப நாள் !


பூ உலகோர்  பணிந்து
போற்றி பாடும்
புனித நாள்.


ஆச்சரிய  நட்சத்திரம்
அறிவித்த  முதல்
பிறந்த நாள்.


பார் காப்பர்
பிறந்த  சிற்றூர்
அதிசெய நாள்.


ஈராயிரத்து  பத்மூன்று
ஆண்டுகளும்
எதிர் காலங்களும்
பேசப்படும்
பெரும் பேறு பெற்ற
நந்நாள் .


சரித்திரம்  தரிசிக்கும்
நடுத் தீர்ப்பு நாள் .


மானுட  மறுமலர்ச்சி
துவக்க நாள் .


பாவம் பசி பிணி விட்டு
மக்கனள  மீட்க
தேவகுமாரன்
மனித  உருவில்
வந்ந நாள் .


நேசம் நீத்
உழைத்து  உண்ணும்
வாழ்வு நெறி
வாழ்ந்து  காட்ட
இறங்கி விட்ட பொன் நாள் .


ஓழுக்கம் நேர்மை
அதன்
உயர்வு பதிந்து வைக்க


மரி  மைந்தனாய்
பிறந்த நாள் !.


 

Wednesday, November 30, 2011

இயேசு பிறப்ப 6 *

இயேசு 2011
-----------------
து
ஈராயிரத்து  பதினொரு
ஆண்டுகளுக்கும்
முதல்  நாள்
ரவு
நடு
இரவு
னியும்  பனியும்  சூழ
பிறந்தது
தலைக்  குழந்தை
தாய்  தந்தைக்கும்
இடம்  அனுபவம்
எல்லா  புதுசு
ிடைத்த
கந்தல்  துணியில்  சுற்றி
புல்லணையில்  கிடத்தினார்
தாய்  சேயை
ந்த  நாள்
அந்நாட்டு
ஆட்டு  மந்தை  மேய்ப்பர்
காட்டு  வயலில்
தூதன்
அஞ்சிய  மேய்ப்பருக்கு
ஆறுதல்
பயப்படாதிருங்கள்
தோ
எல்லோரையும்  மகிழ்விக்கும்
நற்செய்தி
யூதேயா  நாட்டின்
பெத்தலேகேம் எனும்
தாவீது  சிற்றூரில்
உலக  ரட்சகர்
ஏசு
பிறந்தார்  
இன்று
பூமியிலே 
மனிதருக்குள்  சமாதானம்
வானிலே  மகிமையாம்
இதோ
உலகின்  முதல்
நற்செய்தி
பெயர்  தெரியா
கிழக்கு  தேசம்
வான்  உயர்ந்த
ஒளி  நட்சத்திரம்
வான  சாத்திர
ஞானிகள்
மாசு  பட்ட
மானுடத்தின்
தூசு  தட்ட
இயேசு  பிறந்ததை
உணர்ந்தார்
ன்றும்  எங்கும்
இயேசு  பிறந்த  நாள் 
துதி  பாட்டம்  
கூட்டம்  கொண்டாட்டம்













Saturday, December 11, 2010

இயேசு பிறப்பு 4

விண்ணிருந்து மண்ணிறங்கித் தான்பிறந்த சின்னேசைப் 
                                   போற்றும் புதுநாள்
விண்காப்பர் மண்மேய்ப்பர் கண்ணெதிரே கானகத்தில்
                                    வியர்ப்புப் பனிநாள்
கண்மணியில் விண்வெளியில் கிழக்கத்தி ஞானிக்கு
                                    காணித்த தனிநாள்

தாவீதின் பெத்தலையில் தாயாகும் புத்தூரில்
                                   கன்னி மரியார்
போகாத சத்திரமோ பாராத வெத்திடமோ
                                   வைத்து வையார்
நேராகத் தொழுவத்தில் பேர்காலக் கந்தையில்
                                     நோகாப் பாலகர்

ஆள்அரவம் இல்லாத நள்ளிரவில் பிறந்தாலும்  
                                       ஆங்கோர் தூதாம்
ஆளில்லை பெற்றவீட்டில் யோசேப்பும் மரியாரும்
                                      கேளாக் கிளையாம்
கேள்வியுற்று கண்தூங்கா மேய்ப்பரோடு ஞானியரும்
                                     ஆழ்ந்தும் தெளிந்தும்

ஆவலோடு மேய்ப்பர்கள் தேடலோடு தகவலிடம்
                                     போகவும் பார்க்கவும
ஆதாரங் கண்டதாலே தோதாகச் சொன்னதையும்
                                    ஆங்கோர் பரப்பும்
தேவசெய்தி மக்களிக்குத் தேங்கீத எதிரொலியாம்
                                     தீங்கில் உணர்வாம

கிழக்கத்தி சாத்திரிகள் விளக்கத்தில் எருசலேமின்
                                      வழியைத் துளாவ
விளங்கிப்போய் பெத்தலைக்கு ஒட்டகத்தை ஓட்டிடுமுன்
                                      வெள்ளிப் புள்ளிவழி
நடத்தித் தொழுவத்தில் தொழுதெழுவோர் பழுதிலார்
                                      விழுந்து எழுந்தார் !!!


Wednesday, November 10, 2010

இயேசு பிறப்பு 3

அரணில்லை அகழியில்லை கோட்டையில்லை கோபுரமில்லை
        தரணியாளும் அரசனக்கும்  அரசனாக ஓர்பிள்ளை
பரணில்லை பகட்டில்லை பந்தாக்கள் தானுமில்லை
        கறவைமாட்டுக் கொட்டிலுக்குள் முன்னணைதான் மறைவாகும்

படையில்லை குடையில்லை ஆணையில்லை ஆளுமில்லை
        பிறந்துவிட்டார் நள்ளிரவில் சிறந்துவிட்டார் இயேசுராஜா
உடுப்பில்லை எடுப்பில்லை அலங்கார வளைவில்லை
        கந்தையில் பொதிந்துகொண்டு ஏழையாய் இயேசுபாலன்

பெத்தலையில் வீடில்லை பட்டணத்தின் பெருந்தொல்லை
       பந்தமில்லை சொந்தமில்லை யோசேப்பின் ஊரெல்லை
பத்துமாதயெல்லை சுமந்துவரும் மரியன்னை பெருந்தொல்லை
      சொந்தமண்ணில் அந்நியராக ஊர்விட்டு ஊர்போனதால்

பெருமையில்லை பெருஞ்செலவில்லை பொருளில்லை பாராட்டில்லை
        மனிதனுக்காய் மனிதனாய் மனிதகுமாரன் பிறந்தார்
உறவெல்லை செல்வரில்லை சீமானில்லை உச்சமில்லை
       ஏழையின் தோழனாய் எளிமையின் கோலனானார்

தொலைக்காட்சியில்லை தொலைபேசியில்லை அலைவரிசையில்லை வானொலியில்லை
        ஆனாலுமந்த மந்தைதேடி பறந்தோடி நற்செய்தி
மலையிருட்டில் தலைஉச்சியில் உரசியதீக் குச்சிச்சீறலாய்
        இறங்கியதோ தெய்வீக ஒளியோடு தேவதூதன்

எதிர்பாரா நிசியிருட்டில் புதிரான ஒளியிறக்கம்
        மந்தைமேய்ப்பர் சிந்தைகனக்க வந்த்தூதர் கண்டுகொண்டார்
அதிர்ந்தமேய்ப்பர் ஆறுதலடைய நற்செய்திபயப் படாதீரென்றார்
        உலகரட்சகர் பெத்தலேகேம் மாட்டுத்பொழுவில் பிறந்தாரென்றார் !

Tuesday, November 9, 2010

இயேசு பிறப்பு 2 * *

நாள்உறங்க ஆள்உறங்க நடுஇரவில் இயேசுபிறந்தார்
             தோள்கொடுக்க துணைநிற்க தேவதூதர் வந்தார்
ஆள்பிடிக்க செய்திகொடுக்க காட்டுமந்தை ஓட்டம்வந்தார்
             ஓளிமின்னல் விழிதிறக்க நடுங்கிஎழுந்தார் ஆடுமேய்ப்பர்


பயப்படாதீர் யாவரும்மகிழ நவமாய் நற்செய்தி
             தாவீதூரில் இயேசுரட்சகர் இன்றுபிறந்தார் வந்தசெய்தி
உயர்ந்தபிள்ளை பிறந்துவிட்டது தாழ்மையின் எல்லையொட்டி
             கந்தையில்சுற்றி முன்னணையில் பிள்ளையாம் தூதர்வாயாலே


வானசபை அங்கேகூடிற்று ஞானப்பா பொங்கிப்பாடிற்று
             உன்னத்த்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும்
வானைநேக்கும் பூமியிலே சமாதானமும் என்றென்றும்
            மனிதர்மேல் பிரியமும் உண்டாகி மகிழ்வதாக


பெத்தலையில் பிறந்த கந்தலிலே கிடந்த
             பாலனையுங் காண மோய்ப்பர்கூடி நடக்க
அத்தனையும் உண்மை கண்டுணர்ந்த மேய்ப்பர்
             இயேசுவையும் மரியா யோசேப்பையும் கண்டார்


கேட்டதுகண்டதை நாட்டுக்குச் சொல்லிச்சொல்லி மகிழ
            கேட்டவர்களும் மூக்கில் விரல்வைத்துப் புகழ
கேட்டவர்களும் கண்டவர்களும் நம்பிக்கைஓளியில் நனைய
             துதித்துமகிழ்ந்து கொடுத்தார் சுடசச்சுட நற்செய்தி !

Monday, November 8, 2010

இயேசு பிறப்பு 1

ஓளியில்லை விழியில்லை ஊரடங்கு நள்ளிரவில்
    தெளிவில்லை திடனில்லை தூங்கிக்கிடக்கும் மேய்ப்பர்களில்
தீப்பந்தமில்லை விண்கல்லில்லை தெய்வீகஓளி வயல்வெளியில்
    பயமில்லை பாவமில்லை பிறந்தார்ரட்சகர் தாவீதூரில் !

மாடமில்லை கூடமில்லை மாட்டுத் தொழுவத்தில்
    மெத்தையில்லை முற்றமில்லை மேற்குவித்த புல்லணையில்
பெற்றவரில்லை சுற்றவரில்லை புத்தம்புது மரியருகில்
    பெத்தலையில் புத்திர்ராய்ப் பிறந்தாரேசு நடுராவில் !


நாவில்லை நரம்பில்லை வார்த்தை இருந்தது
   தொடக்கமில்லை தொடங்குவாரில்லை தேவனாய் இருந்தது
தொட்டதில்லை கைபட்டதில்லை தேவதூதன் சொன்ன
    தேவவார்த்தை ஆவிவந்து மரிவயிற்றில் மனுவானது !

வீணில்லை வீம்பில்லை கிருபைசத்தியம் குவித்திருந்தார்
    தானில்லை வேறில்லை கிருபைமேல்கிருபை நமக்களித்தார்
காலியில்லை குறைவில்லை பரிபூரணத்தில் பலனளித்தார்
    பேரில்லை புகளில்லை எளிமையிலும் எளியர்தோழர் !


தாய்க்கில்லை தகப்பனுக்கில்லை தேவனுக்கே மகிமையென்றது
    போரில்லை புகைச்சலில்லை பூமியிலே சமாதானமென்றது
மேலில்லை கீழில்லை மனிதர்மேல் பிரியமென்றது
    ஆளில்லை படையில்லை தேவசேனை பூமிவந்த்து !

பகலில்லை பார்வையில்லை வால்நட்சத்திரம் வான்கிழக்கில்
    தயக்கமில்லை மயக்கமில்லை சாஸ்திரிகளுக்கு இயேசுபிறப்பில்
தடையில்லை நடையில்லை ஓட்டினார்ஒட்டகம் மேற்றிசையில்
    நட்சத்திரம் வழிகாட்ட காணிக்கைகூட்ட வீழ்ந்தார்காலில் !