Showing posts with label காமராசர்.. Show all posts
Showing posts with label காமராசர்.. Show all posts

Wednesday, December 30, 2015

காமராசர்(30/12/2015)

எழுத்தாளர் சாவி பேட்டி (2.7.1961):

பெருந்தலைவர் முதல்வராக இருந்த சமயம்…. அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார்.
அந்தப் பேட்டியை இப்போது படிக்கும் போது, நெஞ்சம் விம்முகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைக்காமல் போனதுதான், ‘அரசியல்வாதிகள் என்போர் சமூக விரோதிகள்’ என்ற புதிய அர்த்தத்தை உருவாக்கியிருக்கிறது.

அந்தப் பேட்டி (2.7.1961):
விருது நகர் தெப்பக் குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வேறொரு சந்து திரும்புகிறது.
அப்புறம் இன்னொரு சந்து. அதற்கப்புறம் மற்றொரு சந்து. அந்த சந்துக்குள்ளேதான் சுலோசன நாடார் வீதி எனும் அந்த சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ்நாட்டின் தவப் புதல்வர் காமராஜர் அவர்களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.
மிகச் சாதாரணமான ஓர் எளிய இல்லம். நாங்கள் போன சமயம் வாயில் கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம்மையார் படுத்திருந்தார். சின்ன இடம்தான். ஆனால் துப்புரவாக இருந்தது. நாலு பக்க சுவர்களிலும் தேச பக்தர்களின் படங்கள். அவற்றுக்கிடையே வேல்முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்யமூர்த்தியின் உருவம்.
கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். மூச்சுத் திணறியது.

“வாங்கய்யா…” என்று அன்புடன் இன்முகம் காட்டி அழைத்தபடியே எழுந்துபோய் மின்சார விளக்கின் சுவிட்சைப் போட்டார். விளக்கின் ஒளி அந்த எளிய வாழ்க்கையின் தூய்மையை இன்னும் பளிச்சென்று எடுத்துக் காட்டியது.

பண்புமிக்க அந்த மூதாட்டியார், ‘நீங்கள் யார்?’ என்று கூட கேட்கவில்லை. நாங்களாகவேதான் சொன்னோம் (இன்றைக்கு முதல்வரின் தாயார் அல்லது உறவினரை பேட்டியெடுக்க நேரம் கேட்டு மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும்!).

# “ஓர் ஒப்பற்ற தேசத் தொண்டனை, தியாகியை, தலைவனை, தவப் புதல்வனைப் பெற்றெடுத்த, தங்கள் திருமுகத்தைக் கண்டுபோகவே வந்துள்ளோம். அந்த உத்தமனைப் பெற்றெடுத்த பாக்கியசாலி அல்லவா நீங்கள்?”

“ஆமாம் அய்யா… அது ஒரு சாதாரண பிள்ளை இல்லை. இணையற்ற ரத்னம்!” தொட்டிலில் இட்டு, தாலாட்டி வளர்த்த தாயின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட மணிவாக்கு இது.

# “தங்கள் திருமகனைப் பற்றி தாங்கள் ஏதாவது சொல்ல வேண்டும்…”
“நான் என்ன சொல்லப் போறேன் அய்யா. எனக்கு வயதாகிவிட்டது.

அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருஷம் உப்பைத் தள்ளி பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்கிறேன்..”

# “சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா… என்று கேட்டபோது, அம்மூதாட்டியார் முறுவலித்தார்…”

“நல்லாச் சொன்னீங்கய்யா… அவன் மந்திரியாகி (முதல்வர்) ஏழெட்டு வருஷமாகுது. இதுவரைக்கும் நானங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன்…"

# “போனால் ஒரு மாதம் இரண்டு மாதம் தங்கிவிட்டு வருவீர்களா…?”

“நல்லாச் சொன்னீங்கய்யா… தங்கறதாவது. போன உடனே, என்னை ஊருக்கு திரும்ப பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாக இருப்பானே! பட்டணம் பார்க்கணும்னா சுத்திப் பாரு, திருப்பதிக்கு போகணும்னா போயிட்டு வா… எல்லாத்தையும் பாத்திட்டு உடனே விருதுநகருக்குப் போய்ச் சேரும்பானே…!”

# “இந்த வீட்டுக்கு வந்து உங்களைப் பார்ப்பாரா?”

“உம்.. ஆறுமாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். சவுக்கியமாம்மா?, என்று கேட்பான். இப்படியே திரும்பி, அப்படியே போயிடுவான். அவனுக்கு ஏது நேரம்?”

# “மாசச் செலவுக்கு உங்களுக்கு பணம் அனுப்புகிறாரா?”

“அனுப்பறான். பொட்டிக் கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்…”

# “எவ்வளவு பணம் அனுப்பறாரு..?”

“120 ரூபாய்… பத்துமாய்யா? தண்ணி வரியே 13 ரூபா கட்டறேன். எனக்கு ஒரு மகள். அவள் புருஷன் இறந்து போயிட்டாரு. அவளுக்கு இரண்டு ஆம்பிளைப் பிள்ளைங்க. ஒருத்தன் வேலைவெட்டி இல்லாம இருக்கான். தங்கச்சி குடும்பம், குழந்தைங்கன்னு கவனிக்க மாட்டான். தங்கச்சி மகன்தானே.. ஒரு வேளை செஞ்சு வைப்பானா… செய்ய மாட்டான்யா.. மாசம் அந்த 120 ரூபாதான் கொடுப்பான். அதுக்குமேல செலவு செய்யக் கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான்… நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா…
ரேசன் வந்தது பாருங்க. அப்ப இங்க வந்திருந்தான். அவனக் கேட்டேன். ‘என்னப்பா, இருந்த வீட்டிலும் கேப்பை சாப்பிட்டதில்ல, வந்த வீட்டிலயும் சாப்பிட்டதில்ல. இப்ப இப்படி கேப்பையும் கம்பும் போடறாங்களே… இதை எப்படி சாப்பிடறது.. நெல்லு வாங்கித் தரப்படாதா?’-ன்னு கேட்டேன்…

‘நெல்லுப் பேச்சுப் பேசாதே… ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணா…”ன்னு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா….”
(அதாவது காமராஜர் முதல்வராகும் முன்பு கூட அவர்கள் நெல்லு சோறு சாப்பிட்டவர்கள்.. ஆனால் அவர் முதல்வரான பிறகு கேப்பையும் கம்பும்தான் உணவு. முதல்வர் வீடாக இருந்தாலும், மக்களுக்கு என்னவோ அதுதான் தன் தாய்க்கும் என்பது பெருந்தலைவரின் கண்டிப்பான நிலைப்பாடு!)

# “இந்த வீடு எப்போது கட்டினது?”

“அவன் பிறக்கிறதுக்கு முந்தியே கட்டினது. எனக்கு 17 வயசிலயே அவன் பிறந்தான். எனக்கு இருவத்தியஞ்சில அவன் தகப்பனார் இறந்து போனாரு. நிலம் நீச்செல்லாம் இருந்தது. இவன் செயில்ல இருக்கிறப்போ அதையெல்லாம் வித்து வித்து செலவழிச்சிட்டேன். இந்த வீடு ஒண்ணுதான் மிச்சம். சின்ன வயசுல, இவனைப் படிக்க வைக்கணும்னு நான் கொஞ்சமான பாடா பட்டேன். ஒரு வாத்தியார இட்டு வந்து படிக்கச் சொன்னேன்…”

# “ஏன் படிப்பை விட்டுட்டாரு…”

“எட்டு வரைக்கும் படிச்சான். அப்புறம் மூளைக்கு எட்டலேன்னு விட்டுட்டான். வீட்டுல தங்க மாட்டான். தலை முழுக வரமாட்டான். பாடா படுத்துவான். கொட்ற மழையில எங்க போவானோ… எங்க திரிவானோ… வலைப் போட்டு தேடுனாலும் அம்பட மாட்டான். சரி, வெயிலடிச்சா வருவானா… அப்பவும் வரமாட்டான்.
ஆனா ஒண்ணு.. அப்பவும் தலைவலின்னு படுத்ததில்ல.. இப்பவும் படுத்ததில்லை. சின்னப் பிள்ளையில ரொம்ப அடம்பிடிப்பான். இப்ப எங்க போச்சோ தெரியல அந்தக் கோவமெல்லாம். அப்படி இருந்தவனா இப்படி அறிவாளியாகிட்டான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கய்யா… அதோ இருக்காரே முருகன்… அவன்தான் இவனுக்கு இவ்வளவு அறிவைக் கொடுத்திருக்கணும்..!”


இதைக் கூறும்போது, அந்த அன்னையின் முகத்தில் பெருமையும் மகிழ்ச்சியும் தாண்டவமாடின. ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்’, என்ற வள்ளுவரின் வாக்கு எவ்வளவு மெய்யான வாக்கு!

# “உங்கள் மகன் படிக்கவில்லைதான். ஆனாலும், அவர் அறிவாளுக்கிடையே ஒரு சிறந்த அறிவாளியாக விளங்குகிறார். இந்த நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கிறார்…”

“ஆமாம் அய்யா… அவன் என் வயிற்றில் பிறந்த மாணிக்கம். இந்தக் கைகளால் அவனைத் தாலாட்டினேன், சீராட்டினேன்…”, தன் மணிக் கரங்களை பெருமையுடன் பார்த்து மகிழ்ந்தவண்ணம் கூறினார் அந்த அன்னை.

# “நீங்கள் உங்கள் கைகளால் அவரைத் தாலாட்டினீர்கள். இன்று அவர் கைகள் இந்த நாட்டு மக்களையே தாலாட்டுகின்றன…”
“உண்மைதானய்யா…”

# “நேரு இங்கு வந்திருந்தபோது, தங்களைப் பார்த்துவிட்டுப் போனாராமே… அவர் என்ன சொன்னார்?”

“சிரித்தபடியே மகிழ்ச்சியோடு என் கையைப் பிடித்து குலுக்கிவிட்டு ஏதோ சொன்னார். என் மகனும் அப்போது பக்கத்திலே தான் இருந்தான்.”

# “நேருஜி என்ன சொன்னார்?”

“அவங்க பாஷை எனக்குப் புரியுதாய்யா… என்னமோ சொன்னாரு… வேறென்ன சொல்லியிருப்பாரு… எல்லாரையும்போல் ‘இந்த மகனைப் பெற்றெடுத்த நீங்கள் பாக்கியசாலின்னு’ சொல்லியிருப்பாரு…!”

“இத்தகைய மகனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான். தமிழ்நாட்டுக்கு இப்படியொரு உத்தமனைப் பெற்றுக் கொடுத்த தங்களை வணங்குகிறோம் அம்மா… நாங்கள் விடை பெற்றுக் கொள்ளலாமா?”

“மகனைப் பெற்று வளர்த்து இந்த நாட்டுக்குக் கொடுத்துவிட்டேன். அவன் நீண்ட காலம் இருந்து இந்த நாட்டுக்கு மேலும் மேலும்
சேவை செய்துகிட்டிருக்கணும் என்பதுதான் என் ஆசை…”


அந்த அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன.

# “ஏன் கண்கலங்குகிறீர்கள்… இந்த மகனைப் பெற்றதற்கு மகிழ்ச்சியடையுங்கள்.”

“துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை அவர் தாய் துறந்துவிட்டதைப் போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக துறந்துவிட்டு நிற்கிறேன்”, என்று கூறினார்.

தம்முடைய ஒரே தவப்புதல்வனை நாட்டுக்காக தியாகம் செய்துவிட்டு தனிமையில் வாழ்வதைக் காட்டிலும் பெரிய சோகம் ஒரு தாய்க்கு வேறென்ன இருக்க முடியும்!

Monday, June 2, 2014

காமராசர் 2/6/14.

காமராஜர்

வறண்ட பூமியான தமிழகத்தின் மண்ணை அணைகள் கட்டி வளம் கொழிக்க வைத்தவர் காமராஜர் ஒருவரே!தமிழகத்தை தங்கத் தமிழகமாக மாற்றிய பெருமை அவருக்கே உண்டு .
முதல்வராக இருந்து அ...வர் நிறைவேற்றிய திட்டங்கள் :

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மணிமுத்தாறு அணை கட்டப் பட்டது.இதனால் 20 ஆயிரம் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேட்டூர் அணையில் 2.5 கோடி செலவில் கால்வாய்கள் அமைக்கப் பட்டன .இதனால் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

அமராவதி அணை 3 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டது இதனால் 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது .

2.5 கோடி செலவில் வைகை அணை கட்டப் பட்டது.இதனால் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது

2.5 கோடி ரூபாய் செலவில் சாத்தனூர் அணை கட்டப் பட்டது.இதனால் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

வாளையாறு அணை 1 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டது இதனால் 6,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

மங்கலம் அணை 50 லட்சம் செலவில் கட்டப் பட்டது.இதனால் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

ஆரணி அணை 1 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டது, இதனால் 1,100 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.

காவேரி டெல்டா பகுதியில் 30 லட்சம் செலவில் கால்வாய்கள் புதுப்பிக்கப் பட்டன .

கிருஷ்ணகிரி அணை 2 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டது.இதனால் 7, 500 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகிறது.

10 கோடி ரூபாய் செலவில் கீழ் பவானி திட்டம் ஏற்படுத்தப் பட்டது.
இதனால் 2 லட்சம் ஏக்கர் பயன் பெறுகிறது.


புள்ளம்பாடித் திட்டம் 1.5 கோடி ரூபாயில் உருவாக்கப் பட்டது. இதனால் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன .

கோமுகி ஆற்றுத் திட்டம் 75 லட்சம் செலவில் உருவாக்கப் பட்டது.இதனால் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன .

பேச்சிபாறை ,ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் குந்தா ஆகிய அணைகள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்டன

Tuesday, June 25, 2013

காமராசர்

Sathi Moorthi shared  photo.
******************************************************************
 


*******************************************************************
எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை?
யார் சிறந்த மனிதர்? எது 100 ஆண்டு பேசும் சாதனை?
*******************************************************************

காமராசரின் ஆட்சி காலம்:
=========================

... ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச்
சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக
ஆட்சியில் அமர்வது.

ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்
திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம்
தீட்டி நிறைவேற்றினார்!
நிதிப் பற்றாக்குறை, அரசாங்க
கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப்
பிச்சைக் கார மாநிலமாக
முன்னிருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ்
அதே பிச்சைக்காரத்
தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
கொண்டுவந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித்
தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட்
தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14

இன்னும் சொல்லவா?

159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.
மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே...!
காமராஜ் ஆட்சி புரிந்தது 9
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில
விடுபட்டுள்ளன)
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த
இந்தச் சாதனைகளில்...
இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர்
செய்தது சாதனையா..?
இல்லை
"இலவச"த்தின் பேரில் நம்மைப்
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா..?

Wednesday, November 14, 2012

காமராஜர்  110வது பிறந்தநாள்  விழ
----------------------------------------------------------------
வணக்கம்
எண்ணத்து  உண்மைகளை
கவியாக்குந்  துணை
எந்தாய்த்  தமிழுக்கு
முதல்  வணக்கம் !

நாடார் கூடாரத்துள்
நாடிவந்த
நாடார்  குலப்  பெருமை
பாட  வந்த
பாட்டளி நாட்டளியின்
பணிவான  வணக்கம் !

சிறந்த  நாள்-அது
காமராஜர்   பிறந்த  நாள்
இன்று  கொண்டாடும்
இத்  திரு  நாள்.
நூற்றி  ஒன்பது
ஆண்டுகளுக்கு  முன்

ஆம்-அது
ஜூலை  பதினைந்தாம்  நாள்
1903.

வானம்  பாத்த
கரிசக்க்  காட்டு
விருதுப்  பட்டியில்

தமிழருக்கு  விருதாக !
நாடாருக்கு  விடிவாக !

பிறந்தது  ஒரு
குழந்தை
அது-காமராஜ் !

குமார  சாமி  நாடார்
சிவகாமி  அம்மா
பெற்றோர் .

குழந்தை
ஆறுவயதில்  தந்தை
இழந்தது

பனிரெண்டு  வயதில்
பள்ளிப்  படிப்பை
இழந்தது

அத்தோடு
குழந்தை  விளையாட்டையும்
இழந்த்து

குடும்ப  பாரம்
தோளில்  வந்தது

துணிக்  கடையில்
பணி

தேச-சுதந்திரக்  கனல்
கொளுந்து விட்டது

நாட்டுப்  பற்றே
வீட்டுப்  பற்றை
மீறியது.

மனம்  மாற்ற
இட  மாற்றம்.

மரக்  கடையில்
திருவனந்த  புரத்தில்
பணியமர்த்தப்  பட்டார்.

அரசியல்  அங்கும்
வைகம்  போராட்டத்தில்
தானுங்  குதித்தார் .

பதினைந்தாம்  வயதில்
அப்  பாதகம்  நிகழ்ந்தது
அது-ஜாலியன்  வாலா
படுகொலை !

தேசத்தோடு
தானும்
உலுக்கப்  பட்டார்.
ஈரெட்டு  வயதில்
வீரிட்டு  எழுந்தார்
காமராஜர்.

ஏறிட்டுப்  பார்த்தார்
அடிமைத்  தளையில்
அன்னை  நாட்டு  அவலம் !

பதினைந்தாம்  வயதில்
தேசீய  அரசியலில்
தூழைந்தார் .
அயராது  உழைத்தார்

பெற்ற  தாயை  விட
பிறந்த  நாட்டையே
மேலாக  எண்ணி
விடுதலைப்  போராளியானார் .

இருபத்தி  ஏழாம்  வயதில்
உப்புச்  சத்தியாக் கிரகம்
ஈராண்டு  சிறைக்குள்ளே !

முப்பத்தி  ஏழாம்  வயதில்
தமிழ்நாட்டுக்  காங்ரஸ்
தலைமை-நாக்காலியில் .

நாற்பத்தி  ஒன்பதாம்  வயதில்
சட்ட  சபை படிக்கட்டுகள்
ஏறினார்

ஐம்பத்து  ஒன்பதாம்  வயதில்
தமிழ்நாட்டு  முதல்வர்
சிம்மாசனத்தில்

மூன்று  முறைகள்
முதல்வராய்த்  தேர்ந்தெடுக்கப்  பட்டு
ஒன்பது  ஆண்டுகள
நல்  ஆட்சி !!!

கல்வி, தொழில், விவசாயம்
கால்விய்  வெட்டு,அணைக்  கட்டு
மின்திட்டங்கள்

உயர்த்தப்  பட்டது
தமிழகம்.

குறைந்த  வருவாயிலும்
சிறந்த  திட்டங்கள்
நிறைவேற்றினார்.

அறுபதாம்  வயதில்
அகில  இந்திய  காங்கிரஸ்
தலைவர்  மகுடம்

பிரதமர்களை
உருவக்கினார் !

காமராஜர்  ஆட்சிக்கு  முன்
ஒன்பது  முறை  கைது
மூவாயிரம்  நாட்கள் 
சிறை  வாசம்.

சிறை  வாசத்தையும்
செயல்  வாசமாக்கிக்  கொண்டார்

தன்  கல்விக்  குறைவை
நிறைவாக்கிக்  கொண்டார்
ஆம்
சிறைக்குள்ளும்
சுயமாய்ப்  படித்தார் !

காமராஜரின்
நேர்மை-நிர்வாகம்
அறிவு-தலைமைப்  பண்பு
செயல்  தறன்
ஊழலற்ற  உழைப்பு
அடக்கம்  எல்லாம்
அவர்  மீது  மட்டுமல்ல
அவர்  பிறந்த  சமூகத்தின்  மீதும்
பிற-சமூகத்தின்
கண்ணோட்டத்தை
மாற்றியது.

பதினாறாம்  நூற்றாண்டில்
தென்பாண்டிச்  சீமையின்
மகுடம்  அசைந்தது
ஆம்
பாண்டியர்  ஆட்சி
வீழ்த்தப்பட்டது

பண்டியர்  மரபில்  வந்த
நாடார்  களுக்கும்
இன்னல்  பல  வந்தது.

பண்டிய  ஆட்சியில்
கிராம  நிர்வாகம்
வரி  வசூலித்தல்  செய்தவர்
  "கிராமணி "  பட்டத்தோடு
நாடார்  குலத்தவர்

பல-கிராமங்கள்  சேர்ந்தது  நாடு
நாட்டை  நிர்வகித்தவர்
நாடார்.

ஆட்சி  போனது
காட்சி  மாறியது
நாடார்கள்
பணங்காட்டுக்கும்
தேரிக்  காட்டுக்கும்
துரத்தப்பட்டார்கள்.

நாஞ்சில்  நாட்டில்
ஐயா
முத்துக்  குட்டி

நாடார்களுடன்
தாழ்த்தப்பட்ட
பதினெட்டுச்  சாதியினருக்கும்
ஆட்சி  அதிகாரம்  கொடுத்த
கொடுமைகளை
எதிர்த்துப்  போராடி
வெற்றி  கண்டார்.

எந்த  அரசியல்
நானாரகளைத்
தாழ்த்தியதோ

அதே  அரசியல்
காமராஜரை  உயர்த்தியது.
ஏகலைவர்  களாக
நாடார்களும்
உயர்ந்தார்கள்

காமராஜர் தமிழர்  வாழ
தன்  உழைப்பை  அர்ப்பணித்தார்.

அவரை  நல்லோர்
 "நாடார்  உயர்வு
நாட்டுயர்வு "  என்றார்கள்.

 "பச்சைத்  தமிழன் "  என்றார்கள்.
கறுப்புக்  காந்தி-கரும  வீர்ர்
பெருந்தலைவர்-கிங்மேக்கர்
படிக்காத  மேதை
கல்விக்கண்  தறந்தவர்
மதிய  உணவு  தந்தவர்
என்றெல்லாம்  புகழாரஞ்
சூட்டினால்கள்
நம்  சந்த்தியும்
கல்வி,தொழில்
வியாபாரத்தில்  சிறந்து
உலகெலாம்  பரந்து
வாழ்கிறார்கள்  இன்னும்
வளர்வார்கள்
மேன்  மேலும் !காமராஜர்
அனுபவ  ஞானியாய்
மவுன  மொழிபேசி
ஆலோசனை  தந்து
அற்புதங்கள்  செய்தார் !

"தங்கம்  செய்யாத்தை
சங்கம்  செய்யும் "

முந்நூறு  ஆண்டுகள்
அணையா
சிவகாசி  விளக்கைப்போல்
தூபாயில்  தீபமேற்றிய
தம்பிமார்
செந்தில்
இராம  மூர்த்தி
மதகை  பிரபு  மன்னின்று
ஏற்றிய  தூபமாம்

 "துபாய்  நாடார்  சங்கம் "
வாழ்க!  வளர்க!! வளமுடன்!!!

தமிழர்  நம்  இனம்
நானார்  நம்  குலம்
இனமுங்  குலமும்
நகமும்  சதையுமாய்
வாழ்வதே நம்  குணம்

இனத்தையும்
குலத்தையும்
இணைக்கும்
தமிழ்  வாழ்க.
வணக்கம்.
கவிஞர்-மணிமுத்து.

Saturday, June 30, 2012

K.Kamaraj - தலைவன் என்ற சொல்லுக்கு உதாரணம்.

http://kamarajar.blogspot.com/2007/10/copy.html

http://www.youtube.com/watch?v=TmFhZIZwVbw

http://ta.wikipedia.org/wiki/காமராசர

http://www.youtube.com/watch?v=-ZbjMmKuXhs

http://www.perunthalaivar.org/

https://www.facebook.com/kumaraswamikamaraj

http://ta.wikipedia.org/wiki/காமராஜ்_(திரைப்படம்)

Friday, April 20, 2012

காமராஜர் - 3

Tamil Mani Osai: வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்......: வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....: பெருந்தலைவர் காமராஜர் - 3 : "தமிழ்த்தாய் ஈன்ற தவமகன்! -பழ கருப்பையா நெடிய பெரிய உருவம...

காமராஜர் - 2

Tamil Mani Osai: வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்......: வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....: பெருந்தலைவர் காமராஜர் - 2 : "சட்டமன்றத்தில் திமுக முதற்பெரும் எதிர்க்கட்சியாய் நுழைந்...

காமராஜர் - 1

Tamil Mani Osai: வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்......: வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....: பெருந்தலைவர் காமராஜர் - 1

Sunday, June 26, 2011

காமராசர்.

காமராசருக்கு ஒரு வெண்பா மாலை

நக்கீரன் வம்சம் இவர் :

காந்திவழி யில்மனிதம் காத்திருப்போம் என்றவர்;

காந்தியின்ஓர் வார்த்தைக்குக் கண்டனமும் செய்தார்

தவறைத் துணிந்துதட்டிக் கேட்பார்; எதற்கும்

தயங்காத நக்கீரன் பார். (21)

 

கே – பிளான் / காமராஜர் திட்டம் :

புதிய தலைமுறை முன்செல்ல வாழ்த்தி

முதிய தலைமுறை தானாய் ஒதுங்கி

வழிவிடச் சொன்னார்; பதவி விலகி

வழிகாட்டித் தான்நின்றார் முன்பு. (22)

வருமானவரிக்கான தலைவரின் விளக்கம் :

கூரைக்குள் என்ன இருக்கும்; எதுவுமில்லா

ஏழையிடம் என்னதான் வாங்க முடியும்;

வளரும் இடத்தில் வரிவாங்கு; மூழ்கித்

தளர்வோர்க்கு நன்றாய் உதவு. (23)

1963 – கடலில் இறங்கினார் :

’இறந்தவர்கள் மீள முடியாது; நம்பி

இருப்போரை மாளாமல் காத்திடுவோம்’ என்று

புயலில் அழிந்த தனுஷ்கோடி வந்து

செயல்பட்டார் எல்லார்முன் நின்று. (24)

கார்மேகம் காமராஜ் :

வேலைவாய்ப்(பு) உண்டாக்க எண்ணெய்;சுத் தப்படுத்தும்

ஆலையுடன்; சேலம் இரும்பாலைக் கொண்டுவந்தார்;

நெய்வேலி மின்நிலையம் தந்தார்; தமிழகத்தின்

பொய்க்காத கார்மேகம் பார். (25)

அணைகளின் நாயகன் :

வீழும் உழவைப் பெருக்கித் தமிழகத்தின்

வாழ்வுயர்த்த ஒன்ப(து) அணைகள் அமைத்தார்;

’அணைகளின் நாயகன்’ என்ற பெயரால்

நினைவில் இருப்பார் நிலைத்து. (26)

கடைசிச் செய்தி / 1975குடியரசுதினச் செய்தி :

’அன்புக்(கு) அடிபணிவோம்; மிஞ்சிடும் ஆளுமையின்

முன்அஞ்சோம் என்னும் உறுதியில் நாம்நிலைப்போம்’

தம்இறுதிச் செய்தியில் தானைத் தலைவர்

நமக்களித்த ஊக்கக் குறிப்பு. (27)

1975/அக்டோபர் -2 :

தென்நாட்டுக் காந்தி இறந்தநாள் வந்தமைந்த(து)

இந்நாட்டுக் காந்தி பிறந்தநாள் அன்று;

குருவின் பிறந்தநா ளில்சாந்தி என்ப(து)

எவரும் அடைந்திடா(த) ஒன்று. (28)

உலகப் பார்வை :

பெரும்தலைவர் நம்மைப் பிரிந்தநாள் அன்று

பதறி உலகம் கதறி எழுதியது;

’இந்தியா வின்கடைசி காந்திய வாதியும்

மண்ணுள் மறைந்துவிட்டார்’ என்று. (29)

 

இன்றும் இருக்கிறார் :

நம்முள்ஓர் அங்கம்என்(று) ஆனார்; வழிகாட்டும்

’நம்மவர்’ என்றவரைப் போற்றுகிறோம், நம்மிடையே

இல்லா(து) இருந்தாலும் இன்றுவரை; மூவேந்தர்க்(கு)

இல்லாச் சிறப்பாகும் இது. (30)


காமராசருக்கு ஒரு வெண்பா மாலை
Published June 26, 2011 | By venshagan@gmail.com

‘அப்பச்சி’ முப்பது
வல்லமை