Wednesday, February 18, 2015

பதநீர் 11-18/02/2015. * *

பதநீர் 10.
------------
கால் கீழ்
நீள் வேர்
ஆழ் குழாய்


தேர்ந்தெடுத்து
உறிந்தெடுத்து


பனம் பாளை
பக்குவத்தால்
தலைக்கெடுத்து


துளித் துளியாய்த்
தந்திடும்
புது நீர்
அது
பதநீர் !


கன்னல் கருப்பெட்டியைக்
கருவாய்ச் சுமக்கும்

தெளி நீர்
பிளி நீர்
பத நீர் !


மருந்துக்கும்
விருந்துக்கும்
தெரிந்தெடுத்து
காய்த்தெடுத்து
கடைந்தெடுத்த
கருப்பெட்டிக்குத்
தாய் நீர் !

தட்டிய பாளை
சொட்டிய முகத்தில்
கட்டிய கலசம்
முட்டிய பால்

தினம்
பட்ட பாட்டுக்குக்
கொட்டிக் கொடுக்கும்
பலன்


நித்திய சொத்தாய்
அதைத் திரட்ட
யுத்தியும் சக்தியும்
நிச்சயம் வேண்டும்


கறுத்த மரத்தை
வருந்திப் பழக்கி
சுறப்பைப் பெருக்கி
கறப்பது பதநீர்


உடல்
சூடு தணித்து
சுகத்தைக் கொடுக்கும்
பெலத்தைப் பெருக்கும்
பதநீர் !


காடும் மேடும்
பனை வளர்
தளமாயிருக்கும்


தானே முளைத்து
தானே வளர்ந்து
வந்து தந்த
உயர் வரம்


பருகரும் பதநீர்
சதா
பயன் நீர் !






 

No comments: