Saturday, October 31, 2015

ஐக்கூ பற்றி......,

ஹைக்கூ
இதோ சில விதிகள்.
  1. ஒரே வரியில் 17 சொற்கள்.
  2. மூன்று வரியில் 17 சொற்கள்.
  3. மூன்று வரியில் 17 சொற்கள் 5 - 7 - 5 என்ற வரிசையில்.
  4. சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் - நடு வரி மட்டும் சற்று நீளம்.
  5. மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.
  6. ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.
  7. மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.
  8. வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.
  9. எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.
  10. உவமைகளை உபயோகிக்காதிருத்தல்.
  11. தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.
  12. ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.
  13. உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.
  14. இயற்கை காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).
  15. எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.

No comments: