Monday, June 7, 2010

அசைந்தால் 01

நாவசைந்தால் நாடசையும் நன்மை நடக்கும்
........ நரம்பசைந்தால் இசைபிறக்கும் நாதம் பிறக்கும்
பூவசைந்தால் மணம்பரவும் பொசியுந் தேனும்
........ புள்ளசைந்தால் வானளக்கும் பாதை பிறக்கும்
கா(ல்)வாய்நீர் அசைந்தாலே கழனி செழிக்கும்
........ கதிர்க்குலைகள் அசைந்தாலே கும்பி குளிரும்
மேவிமேகம் அசைந்தாலே மழையாய்ப் பிழியும்
........ பருவகாலச் சிறப்பாலே பசுமை அசையும்

அவள்அங்கம் அசைந்தாலோ ஆசை பிறக்கும்
........ வளைவுகளைக் கண்டுவிட்டால் ஆண்மை துடிக்கும்
அவள்கண்கள் அசைந்தாலே அர்த்தம் இருக்கும்
........ அகராதி அகத்துள்ளே நுழைந்து புரளும்
அவள்அழகு சதுராட சிந்தை செயலும்
........ அந்தரத்தில் ஏறிவிடுது இன்ப மயக்கம்
அவள்குழல்மென் தமிழினிய இசையில் ஓலிக்கும்
........ அவள்என்னை மயக்குகிறாள் அந்திக் கிரக்கம்

No comments: