Wednesday, September 1, 2010
நீ...நீ...நீர்...நீர் !!! 3
கிடக்கும் இடத்தில்--அடங்க
உடலை வடித்தேன்
இடறி விடாமல்--நிறமும்
எடுத்து முடித்தேன்
விடாமல் தொடரும்--மடமைப்
பிடியில் கிடப்போர்
விடுபடப் பாடம்---பேசாமல்
புகட்டி விட்டேன்
சாக்கடை யாகநான்--சகதிக்
குட்டை யாகநான்
போகும் போதுநான்--முழுப்
பரிசுத் தமாகி
ஆவி யாகி--நான்
அசுத்தம் போக்கி
தாவி ஏறி--வான்
உயரும் உயர்வில்
கசிந்து பொசிந்து--கீழே
ஊறி மாறி
சுத்தி கரித்து--நிதம்
பத்திரங் காத்தேன்
கீழேயும் மேலேயும்--நான்
சுத்தம் உன்னோடு
வாழும் பூமியில்--நாடே
அசுத்தம் அசுத்தம்
கற்ற பாடச்--சுமை
காற்றிலா? சுயநலம்
சுத்த மில்லை--நகரோ
சாக்கடைக் குளியல் !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment