Wednesday, September 1, 2010

நீ...நீ...நீர்...நீர் !!! 3


கிடக்கும் இடத்தில்--அடங்க
         உடலை வடித்தேன்
இடறி விடாமல்--நிறமும்
         எடுத்து முடித்தேன்

விடாமல் தொடரும்--மடமைப்
         பிடியில் கிடப்போர்
விடுபடப் பாடம்---பேசாமல்
         புகட்டி விட்டேன்

சாக்கடை யாகநான்--சகதிக்
         குட்டை யாகநான்
போகும் போதுநான்--முழுப்
         பரிசுத் தமாகி

ஆவி யாகி--நான்
         அசுத்தம் போக்கி
தாவி ஏறி--வான்
         உயரும் உயர்வில்

கசிந்து பொசிந்து--கீழே
         ஊறி மாறி
சுத்தி கரித்து--நிதம்
         பத்திரங் காத்தேன்

கீழேயும் மேலேயும்--நான்
         சுத்தம் உன்னோடு
வாழும் பூமியில்--நாடே
         அசுத்தம் அசுத்தம்

கற்ற பாடச்--சுமை
         காற்றிலா? சுயநலம்
சுத்த மில்லை--நகரோ
         சாக்கடைக் குளியல் !!!

No comments: