- தொட்டவனைத்
- திட்டவில்லை
- பாட்டியா ?
- இல்லையவள்
- பருவப்பெண் !
- கெட்டவனைக் கண்டு
- ஒதுங்க வில்லை
- விரும்பினாளா ?
- இல்லை
- பரிதாபப் பட்டாள்!
- அவனும் வாலிப வசந்தத்தில்
- நின்றான்
- காமமும் மனிதமும்
- சந்தித்த கணம்
- கூப்பிட்டாள்
- போனான்
- தேநீர் கடைக்கு
- சாய்ந்து விட்டது
- சரக்கென்று
- பூரித்து
- கற்பனையில் குதித்தான்
- தேநீரோடு கொஞ்சம்
- தெளி புத்தியும்
- புகட்டினாள்
- நொந்து போய்
- தன் செயலுக்கு
- வருந்தினான்
- திருந்தினான் !
- கனத்த நெஞ்சோடு
- நடந்து
- பூங்கா ஒன்றுக்குள்
- அடைக்கலமானான்
- அது ஒரு
- மத்தியானம்
- மர நிழல்
- மனித வேடந்தாங்கலாய்
- தோன்றின
- பள்ளித் தோழனைக்
- கண்டான்
- இறுதி வகுப்பு
- கடைசி வரிசை
- ஆள் அவன்
- இவனோ
- முதல் வரிசை
- இரு வரிசைக்கும்
- உருவத்தில்
- வயதில்
- உலக அனுபவத்தில்
- பள்ளி சாரா
- அனுபவ படிப்பில்
- வித்தியாசப்
- படிகள் பல
- அவர் சந்தித்த இடம்
- வேலை தந்த
- நம்
- பொருளாதார
- நகரம் !
- தாய் தந்தை
- கண்காணிபபோ
- அறுந்த நிலை
- முதல் வரிசை
- கடைசி வரிசையிடம்
- தன் குமுறலை
- கசிய விட்டான்
- பாடந் தவிர
- வேறு ஏதும்
- படிக்காதவன்
- முதல் இருக்கை
- பெண் பற்றி
- பேசினாலே
- முகஞ் சுழித்து
- பழி சொல்லி
- விலகுவான் அன்று
- சில ஆண்டுகளில்
- பெண் பித்தனாக
- பரிணமித்தான்
- கண்டு கொண்டான்
- தொடர் வண்டியில்
- பெண் கூட்டம்
- வேலைக்குப் போகும்
- நேரம்
- நெருக்கடியானது
- காற்றுப் புக
- முடியா நெருக்கு
- அந்த நேரத்தைத்
- தேர்ந்து கொண்டான்
- வண்டி நகர
- ஓடி அந்தப் பெட்டியில் ஏறி
- சுவரும் பல்லியுமாய்
- மாறிப்போவான்
- இதில்
- சுகம் காணுவோர் சிலர்
- பரிதாபப் படுவோர் சிலர்
- செயலிழந்து கொதிப்போர் சிலர்
- அந்தப் பெண்களில்
- ஒருத்திதான்
- தேனீர் காரியும்
- தேனீர்காரி
- உனக்கு
- தாய் சகோதரி இல்லையா ?
- அவர்களிடம்
- ஒருவன் இப்படி நடந்தால்
- என்ன செய்வாய் ?
- அதைப்போல் எல்லோரையும்
- நினை !
- உணர்ந்து திருந்திய
- முதல் வரிசைக் காரன்
- கடைசி வரிசையிடம்
- சத்தியம் செய்தான்
- இனி இப்படி நடக்காது .
Wednesday, February 2, 2011
தெருக் குரல் 11
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment