Monday, April 11, 2011

ஈஸ்டர் பண்டிகை 1

  •  (24-04-11)
  •             
  • கல்லறையில்  உயிர்த்தார்  இயேசு
  • ---------------------------------------------
  • கல்லில்லை   கல்லுக்குப்பின்   உடலில்லை
  •              பல்மணத்தால்  பூசிக்க  மூலமில்லை
  • சொல்லில்லை  மகதலேனா   மரிவாயிலே
  •              புதைத்தயேசு  உடல்போன  இடந்தெரியலே

  • விடியவில்லை    வெளிச்சங்கண்   திறக்கவில்லை
  •             வந்துவிட்டாள்  கொல்கதாவின்  கல்லறைக்கே
  • துடிப்புடையாள்  பிடிப்புடையாள்  பக்தியிலே
  •             சுகமளித்த   இயேசுவைத்  தொழுதெழவே

  • கொல்கதா  மலைமட்டும்  இயேசுமேல்
  •             சுமத்திய   சிலுவைமேல்  இயேசுவையே
  • பொல்லாத  மனிதகூட்டம்  சுமத்திவைத்து
  •             கால்களிலும்   கைகளிலும்   கடாவினார்ஆணி

  • கொல்லுண்ட  கொல்கதா  மலைமேலே
  •             குடைந்திருந்த  புத்தம்புதிய  குகையிலே
  • நல்லுளங்கொண்டோர்  மெல்லியதிணியில்  நறுமணத்தோடு
  •             பொதிந்தெடுத்த  உடலையும்   வைத்தனரே

  • காத்திருந்த  ஓய்வுநாள்  கடந்துபோக
  •             பாத்திருந்த   வாரத்தின்  முதலாம்நாள்
  • தோத்தரிக்க  வந்தவளோ  துடிதுடித்தாள்
  •             தேடினாளே  திகைத்தாளே  திண்டாடினாளே

  • அறியாமலே  மரியாளும்   இயேசுவிடமே
  •             இயேசுவைப்  பற்றியசெய்தி   கேட்கையிலே
  • அறிந்துகொண்டு  இயேசுதாமே  மரியாளே
  •            அதிர்ந்துநின்று  உணர்ந்துகொண்டு  ரபூனியென்றாளே

  • மண்ணுல  கெலாமே   கொண்டாடும்
  •            புனிதர்   இயேசுவின்  ஈஸ்டர்நாள் 
  • முன்னுரைப்   படியே  மூன்றாம்நாள்
  •             உயிர்ப்பு  நடந்த   இந்நாளே .

No comments: