- (24-04-11)
- கல்லறையில் உயிர்த்தார் இயேசு
- ---------------------------------------------
- கல்லில்லை கல்லுக்குப்பின் உடலில்லை
- பல்மணத்தால் பூசிக்க மூலமில்லை
- சொல்லில்லை மகதலேனா மரிவாயிலே
- புதைத்தயேசு உடல்போன இடந்தெரியலே
- விடியவில்லை வெளிச்சங்கண் திறக்கவில்லை
- வந்துவிட்டாள் கொல்கதாவின் கல்லறைக்கே
- துடிப்புடையாள் பிடிப்புடையாள் பக்தியிலே
- சுகமளித்த இயேசுவைத் தொழுதெழவே
- கொல்கதா மலைமட்டும் இயேசுமேல்
- சுமத்திய சிலுவைமேல் இயேசுவையே
- பொல்லாத மனிதகூட்டம் சுமத்திவைத்து
- கால்களிலும் கைகளிலும் கடாவினார்ஆணி
- கொல்லுண்ட கொல்கதா மலைமேலே
- குடைந்திருந்த புத்தம்புதிய குகையிலே
- நல்லுளங்கொண்டோர் மெல்லியதிணியில் நறுமணத்தோடு
- பொதிந்தெடுத்த உடலையும் வைத்தனரே
- காத்திருந்த ஓய்வுநாள் கடந்துபோக
- பாத்திருந்த வாரத்தின் முதலாம்நாள்
- தோத்தரிக்க வந்தவளோ துடிதுடித்தாள்
- தேடினாளே திகைத்தாளே திண்டாடினாளே
- அறியாமலே மரியாளும் இயேசுவிடமே
- இயேசுவைப் பற்றியசெய்தி கேட்கையிலே
- அறிந்துகொண்டு இயேசுதாமே மரியாளே
- அதிர்ந்துநின்று உணர்ந்துகொண்டு ரபூனியென்றாளே
- மண்ணுல கெலாமே கொண்டாடும்
- புனிதர் இயேசுவின் ஈஸ்டர்நாள்
- முன்னுரைப் படியே மூன்றாம்நாள்
- உயிர்ப்பு நடந்த இந்நாளே .
Monday, April 11, 2011
ஈஸ்டர் பண்டிகை 1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment