மரிமகன் உயிர்த்தார்
மரபினை உடைத்தார்
முறைப்படி மூன்றாம்நாள்
மறுஉயிர் எடுத்தார்
புதைகுழி உதைபட
புதைத்தவர் பதைபட
நிதமெழும் விதமாக
நாதரேசு நடந்தார்
புதையுடல் எழுந்தொரு
புதுமையைச் செய்தார்
கதையிலுங் காணாத
காவிய நாயகர்
கதவென உதவிய
கல்லையும் புரட்டிட
பதவியால் கதவினைக்
காத்தவர் நொடிந்திட
எமாவூர் வழியிலே
இறைமகன் நடந்திட
தமதுடன் பாதையில்
நடந்நவர் தொடர்ந்தார்
கிழமை வெள்ளியில்
துணியில் சுருட்டி
பழமை முறைப்படி
மணமிட்டுப் புதைத்தார்
தொழுதிட கிழக்கொளி
வெளுமுன் ஞாயிறில்
விழித்தனர் வழிபடுபெண்கள்
திகைத்தன பலகண்கள்
பொதிந்த துணிகள்
பிரிந்து கிடந்தன
புதிய சூழலில்
புதைகுழி தொரிந்தது
ஒருமைப் பட்டு
மகழ்ந்த சீடரின்
அறையுள் இயேசு
வருகை விருந்தாய்
உடலும் உயிரும்
கரங்கால் தழும்பும்
புறத்தில் தெரிந்தது
புத்துயிர் தரிசனம் .
மரபினை உடைத்தார்
முறைப்படி மூன்றாம்நாள்
மறுஉயிர் எடுத்தார்
புதைகுழி உதைபட
புதைத்தவர் பதைபட
நிதமெழும் விதமாக
நாதரேசு நடந்தார்
புதையுடல் எழுந்தொரு
புதுமையைச் செய்தார்
கதையிலுங் காணாத
காவிய நாயகர்
கதவென உதவிய
கல்லையும் புரட்டிட
பதவியால் கதவினைக்
காத்தவர் நொடிந்திட
எமாவூர் வழியிலே
இறைமகன் நடந்திட
தமதுடன் பாதையில்
நடந்நவர் தொடர்ந்தார்
கிழமை வெள்ளியில்
துணியில் சுருட்டி
பழமை முறைப்படி
மணமிட்டுப் புதைத்தார்
தொழுதிட கிழக்கொளி
வெளுமுன் ஞாயிறில்
விழித்தனர் வழிபடுபெண்கள்
திகைத்தன பலகண்கள்
பொதிந்த துணிகள்
பிரிந்து கிடந்தன
புதிய சூழலில்
புதைகுழி தொரிந்தது
ஒருமைப் பட்டு
மகழ்ந்த சீடரின்
அறையுள் இயேசு
வருகை விருந்தாய்
உடலும் உயிரும்
கரங்கால் தழும்பும்
புறத்தில் தெரிந்தது
புத்துயிர் தரிசனம் .
No comments:
Post a Comment