ஏலே’ “என்னலே’ என கொஞ்சும்
தமிழில் பேசி நெஞ்சம் அள்ளும்
ஊர்தான் திருநெல்வேலி சீமை!
மேற்குத் தொடர்ச்சி மலைத்
தொடர்களின்...
முழு அழகை இம்மாவட்டத்தில் காண
முடியும்.
திருநெல்வேலி என்றாலே பலருக்கும்
நினைவுக்கு வருவது “இருட்டுக்
கடை’ அல்வாதான்! மாலை 5
மணி ஆனதும், ஒற்றை விளக்கில் –
பழமை மாறாமல் இருக்கும் அந்தக்
கடையில்; வாழை இலையில்
சுடச்சுட, நெய் ஒழுக தரும் அந்த
அல்வாவை சாப்பிடும்
ருசியே தனிதான்! நாக்கில் பட்டதும்,
தேசிய நெடுஞ்சாலைகளில் வழுக்கிச்
செல்லும் வாகனங்களைப் போல அந்த
அல்வா வயிற்றுக்குள் போய்விடும்!
அதேபோல் குற்றால அருவி,
களக்காடு அருவி, பாபநாசம்
அருவி போன்றவைகளும், பல
அணைக்கட்டுகளும், அதைச் சார்ந்த
வனப்பகுதிகளும்,
மாஞ்சோலை எஸ்டேட்டும்
சுற்றுலாவாசிகளை கொள்ளை
கொள்ளும்!
இதில், சுற்றுலாவாசிகள் பலரும்
அறியாத ஒன்று தாமிரபரணி நதியின்
சிறப்பாகும்.
தமிழ்நாட்டில் ஒரேயொரு வற்றாத
ஜீவநதி தாமிரபரணி மட்டுமே!
தமிழகத்தில் பாயும் பிற நதிகள்
யாவும் கேரளா, கர்நாடகா,
ஆந்திராவில் உற்பத்தியாகின்றன.
ஆனால் தமிழகத்தில் உற்பத்தியாகி,
தமிழகத்தை மட்டுமே
வளப்படுத்துவதுடன்,
ஆண்டு முழுதும் நீரோட்டத்தைப்
பெற்றிருப்பதால் தாமிரபரணி தனிச்
சிறப்பு பெறுகிறது.
தோன்றும் இடத்திலிருந்து கடலில்
கலக்கும் மன்னார்
வளைகுடா வரையில்
தாமிரபரணி ஆற்றின் நீளம் 125 கி.மீ.!
திருநெல்வேலி மற்றும்
தூத்துக்குடி மாவட்ட மக்களின்
வாழ்வாதாரம் இதுதான். கி.மு. 400
வாக்கிலேயே இந்தப் பகுதியில்
நாகரீகமான மக்கள்
வாழ்ந்திருந்ததை ஆற்றின் கரைகளில்
மேற்கொண்ட அகழாய்வுக்
கண்டுபிடிப்புகள் சுட்டிக்
காட்டுகின்றன.
வரலாற்றாய்வாளர்களின் கருத்தில்,
இந்திய ஆறுகளில் மிக உயரிய
இடத்தைப் பெறுகிறது தாமிரபரணி.
தமிழில் பேசி நெஞ்சம் அள்ளும்
ஊர்தான் திருநெல்வேலி சீமை!
மேற்குத் தொடர்ச்சி மலைத்
தொடர்களின்...
முழு அழகை இம்மாவட்டத்தில் காண
முடியும்.
திருநெல்வேலி என்றாலே பலருக்கும்
நினைவுக்கு வருவது “இருட்டுக்
கடை’ அல்வாதான்! மாலை 5
மணி ஆனதும், ஒற்றை விளக்கில் –
பழமை மாறாமல் இருக்கும் அந்தக்
கடையில்; வாழை இலையில்
சுடச்சுட, நெய் ஒழுக தரும் அந்த
அல்வாவை சாப்பிடும்
ருசியே தனிதான்! நாக்கில் பட்டதும்,
தேசிய நெடுஞ்சாலைகளில் வழுக்கிச்
செல்லும் வாகனங்களைப் போல அந்த
அல்வா வயிற்றுக்குள் போய்விடும்!
அதேபோல் குற்றால அருவி,
களக்காடு அருவி, பாபநாசம்
அருவி போன்றவைகளும், பல
அணைக்கட்டுகளும், அதைச் சார்ந்த
வனப்பகுதிகளும்,
மாஞ்சோலை எஸ்டேட்டும்
சுற்றுலாவாசிகளை கொள்ளை
கொள்ளும்!
இதில், சுற்றுலாவாசிகள் பலரும்
அறியாத ஒன்று தாமிரபரணி நதியின்
சிறப்பாகும்.
தமிழ்நாட்டில் ஒரேயொரு வற்றாத
ஜீவநதி தாமிரபரணி மட்டுமே!
தமிழகத்தில் பாயும் பிற நதிகள்
யாவும் கேரளா, கர்நாடகா,
ஆந்திராவில் உற்பத்தியாகின்றன.
ஆனால் தமிழகத்தில் உற்பத்தியாகி,
தமிழகத்தை மட்டுமே
வளப்படுத்துவதுடன்,
ஆண்டு முழுதும் நீரோட்டத்தைப்
பெற்றிருப்பதால் தாமிரபரணி தனிச்
சிறப்பு பெறுகிறது.
தோன்றும் இடத்திலிருந்து கடலில்
கலக்கும் மன்னார்
வளைகுடா வரையில்
தாமிரபரணி ஆற்றின் நீளம் 125 கி.மீ.!
திருநெல்வேலி மற்றும்
தூத்துக்குடி மாவட்ட மக்களின்
வாழ்வாதாரம் இதுதான். கி.மு. 400
வாக்கிலேயே இந்தப் பகுதியில்
நாகரீகமான மக்கள்
வாழ்ந்திருந்ததை ஆற்றின் கரைகளில்
மேற்கொண்ட அகழாய்வுக்
கண்டுபிடிப்புகள் சுட்டிக்
காட்டுகின்றன.
வரலாற்றாய்வாளர்களின் கருத்தில்,
இந்திய ஆறுகளில் மிக உயரிய
இடத்தைப் பெறுகிறது தாமிரபரணி.
No comments:
Post a Comment