பதநீர்--3
இனிக்கும் பதநீர்
கசக்கும்
உழைபுக்குபுபின்
பனையும்
பூப்படையும்
ஆண்டுக்கு
ஒரு முறை
ஆணும் பூக்கும்
பெண்ணும் பூக்கும்
பெண்தான் காய்க்கும்
ஆண்தான் மகரந்தம்
உதிர்க்கும்
தேனீ ,குழவி
சிறு வண்டுகள்
மகரந்தம் எடுத்து
பெண் மடி
சேர்க்கும்
கருவுற்ற பசு
மடு வளர்வதாய்
பெண் பாளைக் குலை
குரும்பல் பிடித்து
கொஞ்சம்
கொஞ்சமாக
வடிவழகு பெறும்
நுங்காகி பழமாகி
விழுந்து
வம்ச விருத்தி
நடக்கும்
ஆண் பெண் பனைகளும்
மதுரமாய் பதனீர் தரும்
அந்த பாளைகளை
பருவம் பாத்து
பக்குவப் படுத்தும்
முறைமை
இரண்டு பனைகளுக்கும்
வேறு வேறு
அக் கலையில்
தேறியவன்
பனைத் தொழிலாளி
பல்லைப் பாத்து
மாட்டின் வயதைக்
கணிப்பது போல
பாளை உருவம்
ஒளி முகம் பார்த்தே
தக்க பருவத்தைக்
கணித்து விடும்
தகுதி பெற்றவன்
பனைத் தொழில் வல்லுனன்
இடுக்கும் பாளை
இளையதாய் இருந்தால்
இடுக்கைத் தாங்காது
முதிர்ந்து விட்டாலோ
திமிரிவிடும்
பலன் தராது
கண்களால் அளந்து
கருத்தாலே
கணிக்க வேண்டும்
தகுதியை
அதிகமாக
இடுக்கி விட்டாலோ
குருதி கொட்டும்
இடுக்கு
குறைவானால்
பலன் தராது
நிமிர்ந்து விடும்
குருதி என்பது
பதநீரை விட
கட்டியான திரவம்
கொட்டும்
அதன் மணம்
குணம் வேறு
மனிதர் குடிக்க
இயலாது
கருப்புக் கட்டிக்கு
ஆகாது
ஆண்பனைக்கு
கட்டுப் பாளை என்றும்
பெண் பனைக்கு
பருவப் பனை என்றும்
தொழில் பெயர்கள்
பருவப் பனை
கட்டுப்பாளை
தயார் படுத்தும்
தொழில் நுட்பங்கள்
வேறு வேறு
இடுக்கும் முறைகளும்
வேறு வேறு
இடுக்கு முன்னே
அந்நதந்த முறைமை படி
பனைகளைச்
சுத்திகரிக்க வேண்டும்
முதலில்
பனைந் தொழிலாளி
எந்தப் கனையிலும்
ஏறி இறங்கும்
தகுதி பெற்றிருக்க வேண்டும் .
இனிக்கும் பதநீர்
கசக்கும்
உழைபுக்குபுபின்
பனையும்
பூப்படையும்
ஆண்டுக்கு
ஒரு முறை
ஆணும் பூக்கும்
பெண்ணும் பூக்கும்
பெண்தான் காய்க்கும்
ஆண்தான் மகரந்தம்
உதிர்க்கும்
தேனீ ,குழவி
சிறு வண்டுகள்
மகரந்தம் எடுத்து
பெண் மடி
சேர்க்கும்
கருவுற்ற பசு
மடு வளர்வதாய்
பெண் பாளைக் குலை
குரும்பல் பிடித்து
கொஞ்சம்
கொஞ்சமாக
வடிவழகு பெறும்
நுங்காகி பழமாகி
விழுந்து
வம்ச விருத்தி
நடக்கும்
ஆண் பெண் பனைகளும்
மதுரமாய் பதனீர் தரும்
அந்த பாளைகளை
பருவம் பாத்து
பக்குவப் படுத்தும்
முறைமை
இரண்டு பனைகளுக்கும்
வேறு வேறு
அக் கலையில்
தேறியவன்
பனைத் தொழிலாளி
பல்லைப் பாத்து
மாட்டின் வயதைக்
கணிப்பது போல
பாளை உருவம்
ஒளி முகம் பார்த்தே
தக்க பருவத்தைக்
கணித்து விடும்
தகுதி பெற்றவன்
பனைத் தொழில் வல்லுனன்
இடுக்கும் பாளை
இளையதாய் இருந்தால்
இடுக்கைத் தாங்காது
முதிர்ந்து விட்டாலோ
திமிரிவிடும்
பலன் தராது
கண்களால் அளந்து
கருத்தாலே
கணிக்க வேண்டும்
தகுதியை
அதிகமாக
இடுக்கி விட்டாலோ
குருதி கொட்டும்
இடுக்கு
குறைவானால்
பலன் தராது
நிமிர்ந்து விடும்
குருதி என்பது
பதநீரை விட
கட்டியான திரவம்
கொட்டும்
அதன் மணம்
குணம் வேறு
மனிதர் குடிக்க
இயலாது
கருப்புக் கட்டிக்கு
ஆகாது
ஆண்பனைக்கு
கட்டுப் பாளை என்றும்
பெண் பனைக்கு
பருவப் பனை என்றும்
தொழில் பெயர்கள்
பருவப் பனை
கட்டுப்பாளை
தயார் படுத்தும்
தொழில் நுட்பங்கள்
வேறு வேறு
இடுக்கும் முறைகளும்
வேறு வேறு
இடுக்கு முன்னே
அந்நதந்த முறைமை படி
பனைகளைச்
சுத்திகரிக்க வேண்டும்
முதலில்
பனைந் தொழிலாளி
எந்தப் கனையிலும்
ஏறி இறங்கும்
தகுதி பெற்றிருக்க வேண்டும் .
No comments:
Post a Comment