Wednesday, October 8, 2014

சிறப்புச் செய்தி 8/10/14.

அறிவியல் வளர்ச்சியில் மேலும் ஒரு மைல் கல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மூளையில் திசை கண்டறியும் தொழில் நுட்பம் கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு. அறிவியல் வளர்ச்சியில் மேலும் ஒரு மைல் கல்

மூளையின் திசைகாட்டும் தொழில் நுட்பம்  என்றால் என்ன?   தற்போது நமது மொபைல், அய்பேட் மற்றும் தற்போது காரில் கூட  திசைகாட்டும் ஜிபிஎஸ் கருவிகள் வந்துவிட்டன. ஆனால் இந்த திசைகாட்டும் கருவிகள் இயற்கை யிலேயே உயிரினங்களின் செல்களின் உண்டு. நமது உடல் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவை. முக்கியமாக புரதங்கள் இந்தச்செல்களை உருவாக்கு வதில் பல்வேறு வகைகளில் பெரிதும் உதவுகின்றன. உடலில் முக்கிய உறுப்புகள் அனைத்துமே பல்வேறு வகையான புரதங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இப்புரதங்கள் பல்வேறு வகைகளில் உள்ளன. நமது நகங்கள் கரோட்டின் என்ற ஒருவகைப் புரதம், நமது விழி லென்சு களும் ஒருவகைப் புரதம் தான். கணினி இயந்திரத்தில், மென்பொருள்போல் செயல்படும் புரதங்கள் தங்கள் பணிக் கேற்றவாறு பல்வேறு வகைகளில் பரிணாம வளர்ச்சியில் மாறுபட்டு இருக் கின்றன.
எடுத்துக்காட்டாக ஒரு செல் உயிரினங்களில் உள்ள ஒளியுணர்வு செல்போன்ற மென்மையான புரதம் தான் பிற்காலத்தில் விழி(லென்சு)களாக உரு வாகியுள்ளது.  மனித உடலில் உள்ள புரதங்கள் அறிவு வளர்சிக்கும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப உடல் செயல்பாட்டிற்கும் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது.  இந்தப்புரதங்களின் பணிகளைப் பற்றிய ஆய்வில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது மூளைச்செல்களில் உள்ள திசை காட்டும் புரதங்கள். திசைகாட்டும் புரதங்கள் உண்மையில் பறவைகளிடத்திலும், திமிங்கிலத்திலும் அதிக அளவில் காணப்படுகிறது, இந்த திசைகாட்டும் தொழில் நுட்பம் அடங்கிய புரதங்களின் உதவியால் தான், வட துருவத்தில் இருந்து பறவைகள் குளிர் காலங்களில் தெற்கு வெப்பமண்டலப் பகுதிகளை நோக்கி பறந்து வருவது, கோடை துவங்கிய பிறகு மீண்டும் வட துருவப்பகுதியை நோக்கிச் செல்ல உதவுகிறது. திமிங்கிலங்கள் இனப்பெருக் கத்திற்காக, தென் பசிபிக் கடல் வரை வந்து பிறகு வடக்கே அமெரிக்காவின் அலாஸ்கா வரை செல்ல அவைகளின் மூளையில் உள்ள இந்த திசைகாட்டும் புரதங்கள் மிகவும் பயன்படுகின்றன.
மனித மூளையில் உள்ள செல்களில் திசைகாட்டும் புரதங்களைக் கண்டறிந்த தற்காக நார்வே நாட்டைச்சார்ந்த மே பிரிட் மோசர் மற்றும் எட்வர்ட் அய் மோசர் இணையருக்கும், அமெரிக்க நரம்பியல் மருத்துவரான ஜான் ஓ கிஃபி-க்கும்  இவ்வாண்டு நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.    1971- ஆம் ஆண்டு ஜான் ஓ கிஃபி மனித மூளையில் உள்ள சில செல்களின் திசைகாட்டும் புரதங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.  இவ் வகைப் புரதங்கள் பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதனின் தேவைக்கேற்ப தன்னுடைய பணியை மிகவும் குறைந் துக்கொண்டுள்ளது.  தற்போது மனித நினைவாற்றல் மற்றும் உடலின் பல பகுதிகளுக்கும் கட்டளை களைக் கொண்டு செல்லும் பணியில் இவ் வகைப் புரதங்கள் தங்களின் பணிகளைச் சீராக செய்துகொண்டு இருக்கின்றன. 2005-ஆம் ஆண்டு முதல் ஜான் ஓ கிஃபி உடன் மோசர் இணையர்கள் இணைந்து மேலும் பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டனர். இவர்களின் மூளைச்செல் திசை காட்டும் புரதங்களை கண்டறியும் தொழில் நுட்பம் வாயிலாக மனித நினைவாற்றல் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு எளிய தீர்வைக் காணமுடியும்.


Read more: http://viduthalai.in/page-2/88860.html#ixzz3FVs3jYeA

No comments: