Thursday, October 8, 2015

நினைவு நாள் .

Vallioor Geetham Trust's photo.





குறைந்த காலமே மண்ணில் வாழ்ந்தாலும், சமூக சீர்திருத்தப் பாடல்கள் மூலம் மக்கள் கவிஞர் என்னும் சிறப்பு பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், 1959 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாளில்தான் மறைந்தார்.

1930 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிறந்த கல்யாணசுந்தரம், இளம் வயதிலேயே விவசாய சங்கத்திலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

1955 ஆம் ஆண்டு படித்த பெண் என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுதி, திரைத்துறையில் கால்பதித்த கல்யாணசுந்தரம், அடுத்த நான்கே ஆண்டுகளில் ஏறக்குறைய 200 பாடல்களை எழுதினார்.
பொதுவுடைமைக் கருத்துக்குளையும், தத்துவக் கருத்துக்களையும் எடுத்தியம்பிய இவரின் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.



No comments: