Tuesday, December 29, 2015

                  புத்தாண்டு (2011)

சிறுசிறு நொடிகளும் குறுகுறு நடைகளும்
              நொடியிடை வருடமும் விடிவுறும்
அரும்பெரும் திரவியம் தருமொரு புதுயுகம்
               பளிச்சிடும் ஓளிச்சுடர் கிழக்கிலாம்
 
இலைநுனி இளம்பனி பலுகிடும் இரவிலும்  
              இளமலர் இதழ்விரி அழகிலும்
தலையெழு மலரிடை உலவிடும் மணநலம்
           களிப்புடன் தழைத்திடும் விரைவிலாம்

 இரவிலும் பகலுலும் இடைவிடா செயலிலும்
             இணையிலா கதிரவன் பணியிலும்
வரவிலும் செலவிலும் வரைமுறை வரைந்திடும்
             வளங்களாய் விளைந்திடும் நிறைவிலாம்

இறையருள்   விருப்புடன்   பெறச்செபித்   திருப்பவர்
             புதுப்பெலன்   கழுகெனப்   பெறுவராம்
விரைந்தவர்   சிறகடித்   தெழுவதில்   களைப்புறார்
             நடந்திடத்   தடையிலாத்   திடம்வரும்

எழும்இறை   மகிமையால்   வளந்தரும்   நமக்கருள்
             இறங்கிடும்   கிருபையில்   விழித்தெழு
வெளிச்சமாய்   இறைவனே   உனக்கினி   வருவதால்
             பயனடை   துயர்துடை  வருடமாம் !!!

No comments: