Sunday, April 16, 2017

ஈஸ்டர் 2017 *

                    உயிர்த்தார் இலயசு
                     -------------------
மரித்தவர்  உயிர்த்தார்  மரணத்தைச்  ஜெயித்தார்
    காயத்  தழும்புடன்  இயேசு  வந்தார்
உரியகாவல்  அரியமுத்திரை  குகைக்குள்  கல்லறை
    வானவர்  சாட்சி  பக்தருக்குச்  சாட்சி


அடித்த  ஆணி  துடித்த  மேனி
    நெடிய  மனிநர்  கொடிய  சிலுவையில்
வடியுது  ரத்தம்  முடியுது  தரையில்
    கதறலில்  உயிர்பிரிய  இயேசு  குருசில்


சொல்லாயுதன்  இயேசு  பேசவே  இல்லை
    கொல்பகை  வெல்வகை  வல்லமை  காட்டவில்லை
எல்லோரும் சுமத்திய  இல்லாத  குற்றத்திலே
    பொல்லாத  தீர்ப்பு  சிலுவையில்  ஏற்றிற்று


கள்வர்  மத்தியில்  நல்லொர்  தொங்கினார்
    குள்ள  உள்ளர்  குற்றம்  ஏற்றார்
கொல்கதாக்  கல்மலைச்  சிலுவையில்  உயர்ந்தார்
    மக்கள்  பாவம்  சுமந்து  தீர்த்தார்


உலகக்கை  குலுக்கும்  உயிர்ப்பின்  நினைவலை
    பகிரும்  யாவரும்  மகிழ்வின்  எல்லையில்
நலனும்  பெலனும்  நாளும்  ஆளுகையில்
    மகிழ்வோம்  மகிழ்விப்போம்  மனுமக்  களிடையில் .

No comments: