Tuesday, May 1, 2018

மேதினம் *

மேமுதநாள் ! தொழிலாளவிழா !! மகிழ்நாள் !!!
----------------------------------------------------------------------------

வளத்ததுவளத்தை  உழைத்ததுஏழை
          முதலாளிகளே  மகிழ
       தொழிலாளிகளை  வறுக்க
           பழிவிழுந்து  துடிக்க
இழையுண்டஏழை  பிழையுணர்வுஎழ
           உலகிலெதிர்  ஒலிக்க
        நொந்தசிந்தை  ஏங்க
           உண்ளுணர்வு  விழிக்க  

வழிதேடியே  விழிபிதுங்கியே
          ஒழிந்ததுஓய்வு  காலம்
       விழிதிறந்தது  அறிவுலகம்
          நெறிகண்டது  புதுயுகம்
தொழிலாளிகளும்  முதலாளிகளும்
          கைகுலுக்கிய  விடிவாம்
        வேலைக்கேற்ற  கூலியும்
          விடுப்பு,வேலை  நேரமும்

 விவிலியத்தின்ஒளி  வியாபித்தவழி
         படைத்துமுடித்து  ஓய்ந்திருந்தார்
      மக்கள்நோக்க  கர்த்தர்
         ஏழுநாளுமே  உழைத்தார்
தவிப்பின்றிவிரும்பி  உழைத்திருப்போர்
          இராஜாமுன்  நிற்பார்
        வெற்றிவழி  திறப்பார்
          வேதத்தைமுன்  வைப்பார்

வியர்வைசிந்தி  அயர்வைமுந்தி
        வாழ்வதுதான்  வாழ்க்கை
      ஓய்வதல்ல  கற்க
        உத்வேகம்  சிறக்க
செய்யமறுத்தல்  வேலையென்றால்
        சாப்பிடவுஞ்சொல்  மறுப்பை
      வீணடித்தால்  பொழுதை

        விட்டுவிடு  புசிப்பை

உழுதுநடுவோன்  முழுத்தகுதியுடையோன்
         கூலிகையில்  பெறுவான்
      குதுகலித்து  ருசிப்பான்
        குடும்பத்தை  வாழ்விப்பான்
தொழிலாளின்  தொழிற்கூலியை
         விடியுமட்டும்  வையாதே
       கூலிகுறைத்தும்  போடாதே
         உழைக்கிறவாய்  கட்டாதே

விழிப்படைந்த  தொழிலாளர்
         களிப்படைந்த  திருநாள்
       துளிர்த்தெழுந்த  தே(ன்)நாள்
         மேமாதத்து  முதநாள்
வாழ்வடைந்ஒளி  வளர்வடைந்தநீள்வழி
          வேலைக்கொரு  உத்ரவாதம்
       ஆரோக்கிய  மருத்துவம்
          அடுக்கடுக்காய்ப்  பாதுகாப்பும் !  

     
       

No comments: