பனை
...............
...............
வரப்போரம் மலைபோலே
வரிசையாக நிமிர்ந்திருக்கு,
கருப்பசாமி போலத்தானே
வயல்காட்டில் காவலிருக்கு.
வரிசையாக நிமிர்ந்திருக்கு,
கருப்பசாமி போலத்தானே
வயல்காட்டில் காவலிருக்கு.
பரமனுக்கும் பனையிதற்கும்
ஏதோவொரு தொடர்பிருக்கு,
நுங்கினுள்ளே முக்கண்ணும்
அவனைப்போலே படர்ந்திருக்கு.
ஏதோவொரு தொடர்பிருக்கு,
நுங்கினுள்ளே முக்கண்ணும்
அவனைப்போலே படர்ந்திருக்கு.
பிரம்மனவன் கரங்களிலே
ஓலைச்சுவடி தானிருக்கு,
வருங்காலத்தை நிர்ணயிக்க
அதில்தானே குறிப்பிருக்கு.
ஓலைச்சுவடி தானிருக்கு,
வருங்காலத்தை நிர்ணயிக்க
அதில்தானே குறிப்பிருக்கு.
தூரத்தினில் பார்க்கும்போது
தும்பிக்கையைப் போலிருக்கு,
வேழமதன் கரியநிறமும்
இயல்பாகவே ஒத்துயிருக்கு.
தும்பிக்கையைப் போலிருக்கு,
வேழமதன் கரியநிறமும்
இயல்பாகவே ஒத்துயிருக்கு.
மரபுத்தமிழின் சாரமெல்லாம்
பனையோலையே தாங்கியிருக்கு,
பலகாலங்கள் கடந்தபோதும்
இளமையுடனே தங்கியிருக்கு.
பனையோலையே தாங்கியிருக்கு,
பலகாலங்கள் கடந்தபோதும்
இளமையுடனே தங்கியிருக்கு.
ம.கமலக்கண்ணன்.

No comments:
Post a Comment