அரணில்லை அகழியில்லை கோட்டையில்லை கோபுரமில்லை
தரணியாளும் அரசனக்கும் அரசனாக ஓர்பிள்ளை
பரணில்லை பகட்டில்லை பந்தாக்கள் தானுமில்லை
கறவைமாட்டுக் கொட்டிலுக்குள் முன்னணைதான் மறைவாகும்
படையில்லை குடையில்லை ஆணையில்லை ஆளுமில்லை
பிறந்துவிட்டார் நள்ளிரவில் சிறந்துவிட்டார் இயேசுராஜா
உடுப்பில்லை எடுப்பில்லை அலங்கார வளைவில்லை
கந்தையில் பொதிந்துகொண்டு ஏழையாய் இயேசுபாலன்
பெத்தலையில் வீடில்லை பட்டணத்தின் பெருந்தொல்லை
பந்தமில்லை சொந்தமில்லை யோசேப்பின் ஊரெல்லை
பத்துமாதயெல்லை சுமந்துவரும் மரியன்னை பெருந்தொல்லை
சொந்தமண்ணில் அந்நியராக ஊர்விட்டு ஊர்போனதால்
பெருமையில்லை பெருஞ்செலவில்லை பொருளில்லை பாராட்டில்லை
மனிதனுக்காய் மனிதனாய் மனிதகுமாரன் பிறந்தார்
உறவெல்லை செல்வரில்லை சீமானில்லை உச்சமில்லை
ஏழையின் தோழனாய் எளிமையின் கோலனானார்
தொலைக்காட்சியில்லை தொலைபேசியில்லை அலைவரிசையில்லை வானொலியில்லை
ஆனாலுமந்த மந்தைதேடி பறந்தோடி நற்செய்தி
மலையிருட்டில் தலைஉச்சியில் உரசியதீக் குச்சிச்சீறலாய்
இறங்கியதோ தெய்வீக ஒளியோடு தேவதூதன்
எதிர்பாரா நிசியிருட்டில் புதிரான ஒளியிறக்கம்
மந்தைமேய்ப்பர் சிந்தைகனக்க வந்த்தூதர் கண்டுகொண்டார்
அதிர்ந்தமேய்ப்பர் ஆறுதலடைய நற்செய்திபயப் படாதீரென்றார்
உலகரட்சகர் பெத்தலேகேம் மாட்டுத்பொழுவில் பிறந்தாரென்றார் !
தரணியாளும் அரசனக்கும் அரசனாக ஓர்பிள்ளை
பரணில்லை பகட்டில்லை பந்தாக்கள் தானுமில்லை
கறவைமாட்டுக் கொட்டிலுக்குள் முன்னணைதான் மறைவாகும்
படையில்லை குடையில்லை ஆணையில்லை ஆளுமில்லை
பிறந்துவிட்டார் நள்ளிரவில் சிறந்துவிட்டார் இயேசுராஜா
உடுப்பில்லை எடுப்பில்லை அலங்கார வளைவில்லை
கந்தையில் பொதிந்துகொண்டு ஏழையாய் இயேசுபாலன்
பெத்தலையில் வீடில்லை பட்டணத்தின் பெருந்தொல்லை
பந்தமில்லை சொந்தமில்லை யோசேப்பின் ஊரெல்லை
பத்துமாதயெல்லை சுமந்துவரும் மரியன்னை பெருந்தொல்லை
சொந்தமண்ணில் அந்நியராக ஊர்விட்டு ஊர்போனதால்
பெருமையில்லை பெருஞ்செலவில்லை பொருளில்லை பாராட்டில்லை
மனிதனுக்காய் மனிதனாய் மனிதகுமாரன் பிறந்தார்
உறவெல்லை செல்வரில்லை சீமானில்லை உச்சமில்லை
ஏழையின் தோழனாய் எளிமையின் கோலனானார்
தொலைக்காட்சியில்லை தொலைபேசியில்லை அலைவரிசையில்லை வானொலியில்லை
ஆனாலுமந்த மந்தைதேடி பறந்தோடி நற்செய்தி
மலையிருட்டில் தலைஉச்சியில் உரசியதீக் குச்சிச்சீறலாய்
இறங்கியதோ தெய்வீக ஒளியோடு தேவதூதன்
எதிர்பாரா நிசியிருட்டில் புதிரான ஒளியிறக்கம்
மந்தைமேய்ப்பர் சிந்தைகனக்க வந்த்தூதர் கண்டுகொண்டார்
அதிர்ந்தமேய்ப்பர் ஆறுதலடைய நற்செய்திபயப் படாதீரென்றார்
உலகரட்சகர் பெத்தலேகேம் மாட்டுத்பொழுவில் பிறந்தாரென்றார் !
No comments:
Post a Comment